Thursday, September 19, 2019

நான் சுபசிறி பேசுறேன்...


அன்புடன் அப்பா என்று அழைத்துவிட்டு
ஆசையாய் அன்னையை அணைத்துவிட்டு
பாட்டியின் கன்னத்தை செல்லமாய் கிள்ளி
தன் நாயிடம் ஒழுங்காயிரு என்று அதட்டலாய் சொல்லி
தலைகவசத்தை தனக்கே உரிய பாணியில் மாட்டி
அனைவரிடமும் போய்டு வரேன்னு சைகை காட்டி புறப்பட்டேன்..

சாலையோர மரம் செடிகொடிகள் என்னை தலை அசைத்து வரவேற்க
மெல்லிய தென்றல் வருட
நடுவே கட்டப்பட்டுள்ள பேனர்கள் முரைத்து தன்னை விளம்பரபடுத்திக் கொண்டது
பீம்பூம்பாம் என்ற இரைச்சல் நடுவே என வண்டியும் பயணித்தது..

அலுவலகம் அடைந்தேன் புதுமையாக இருந்தது
நண்பர்கள் பேச்சு என்றும் போல் சுவாரசியமாக இருந்தது
பணியின் கடமைகளை கவனமாய் முடிப்பதில் இருந்தது

மாலை வேளை வீடுதிரும்ப ஆயத்தம் ஆனேன்
மீண்டும் தனக்கே உரிய பாணியில் தலைகவசம் அணிந்தேன்
செல்ல செல்ல வண்டியை செல்லமாக உதைத்தேன்
கவனமாக நாற்பதிற்கு மிகாமல் சாலையின் சென்று கொண்டிருக்க

நினைவில்

குடும்பத்தாரை பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சி
இன்னும் இரண்டு நாட்களில் வெளிநாடு செல்ல போகின்றோம் என்ற மகிழ்ச்சி
நாளை அப்பா பெரிய சொந்த வீடு வாங்கிவிடுவார் என்ற மகிழ்ச்சி
நல்லதொரு வாழ்க்கை அமையும் எனக்கும் நல்வாழ்க்கை அமைந்திடும் என்ற மகிழ்ச்சி

மகிழ்ச்சியில் மீண்டும் பார்த்த மரம் செடிகொடிகளை பார்த்தேன். அசையவில்லை
காலையில் வரவேற்ற வரவேற்பு இல்லை.

ஏனோ அதற்கு தெரிந்துவிட்டது
எனக்கு தெரியவில்லை

ஆனால்

காலையில் முறைத்து தன்னை விளம்பரப்படுத்தி கொண்ட பேனர்கள் அசைந்து கொண்டிருந்தன.

சென்று கொண்டிருக்க

அசைந்த ஒரு பேனர் என் மீது விழ
நிலை தடுமாறி நான் விழ
உயிரோடு தான் இருக்கிறேன் என்று கைகளை தூக்கினேன்
பின் தொடர்ந்த பாம்பீம்பூம் தண்ணீர்லாரி நிலையிழந்து என்னை பதம் பார்த்தது.

நிலையான வாழ்க்கை குலைந்து போனது
விதிபடிதான் வந்தேன் என் விதி முடிந்தது போனது
குடும்ப வருங்காலவேர் பிடுங்கி எறியப்பட்டது

வாழ்ந்தபின் மடிந்தால் இயற்கையின் வெற்றி
நோயால் மடிந்தால் முயற்சியில் தோல்வி
முடியாமல் மடிந்தால் கோழையின் இழிசெயல்
விபத்தால் மடிந்தால் மனிதனின் அலட்சியம்
ஆம்
மனிதனின் அலட்சியமே..

யாரை குறை சொல்வது

ஒழுங்காக வண்டி செலுத்தி வந்த என்னையா?
முறைத்து பார்த்த அந்த பேனரையா?
அதை அசைத்து பார்த்த பூங்காற்றையா?

குறை சொல்லி என்ன பயன்
அரைகுறை ஆனது எனது குடும்பம்.

தடையை மீறி பேனர் வைத்ததால் தான்
எனது வாழ்க்கையின் தடையாய் வந்து நின்றது.
இது மறுக்க முடியாத உண்மை.

நம் நாட்டில்
சட்டங்கள் இருப்பது
ஒருவர் இறப்பதால் தான்
செயலுக்கு வருமோ?

சட்டத்தை மதிப்போம்
சாலை விதிகளை கடை பிடிப்போம்

எனது உயிரே கடைசி உயிராய் இருக்கட்டும்
இது போன்ற பயணமே இறுதி பயணமாக முடியட்டும்.

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...