Sunday, September 29, 2019

அன்பே...

அன்பே...

மரபுக் கவிதை மகாராணி.
நவீனம் போற்றும் கலைவாணி.

பாடல்கள் புணையும் பாரதி.
எண்ணங்கள் தீட்டும் ரதி.

ஹைக்கூ கன்னி.
நகைச்சுவை மன்னி.

குறுங்கவிதை சிற்பம்.
கதை பேசும் ஓவியம்.

சிறுகதை புன்னகையரசி.
தொடர்க்கதை இல்லத்தரசி.

புதுகவிதை இளவரசி.
காவியமாகும் கவியரசி.

உரைநடை பேசி பழகும் இலக்கியத்தோழி.
கட்டுரையை வாரி இரைக்கும் இலக்கணவாலி.


மொத்தத்தில் இவள் ஒரு


”அழகிய தமிழ் சொர்க்கம் ”

Saturday, September 28, 2019

ஒரு/இரு வரி கவிதை # 12


மாறாமல் மாறும் என்பான் மாறாதே எதுவும்
முடியாமல் முடியும் என்பான் எதிலும் முன்னேறி நிற்பான்!

Friday, September 27, 2019

உலக வரலாற்றை மாற்ற போகும் கீழடி

அவ்வை சொன்னாள் ஓரடி
வள்ளுவன் புணைந்தான் ஈரடி
பாரதி பாடினான் பாடலடி
மன்னர்கள் வீசினார்கள் வாளடி
பழமைக்கு பழமை நாமடி
கீழடியே எங்கள் தாய்மடி

கண்டோம் மண்பானை தமிழ் பெயர்களடி
பார்த்தோம் உறைகிணறுகள் செங்கல் சுவரடி
வியந்தோம் மணிகள் தங்கம்தானடி
காட்டியிருக்கிறோம் வியக்கும் கட்டுமானம் நெய்திருக்கிறோம் ஆடை நெசவடி
செய்திருக்கிறோம் கழிவுநீர் ஓடைகள் வீதிகள் வணிக வியாபாரமடி
சொல்லி கொண்டிருக்கும் சிந்துசமவெளி மற்ற நாகரிகம் அனைத்திற்கும் நாமே மூத்தகுடி
கணிதமும், போர்செய்யும் மதிநுணுக்கமும் இதில் காணும் பேருண்மையடி
விலங்கு பழகி ஏர் பிடித்து நன்னிலம் செய்த பெருமையடி
பேசும் மொழிகளுக்கெல்லாம் ஆதாரம் தமிழியடி


இவைகளுக்கு ஈடு இணை ஏதடி
தமிழனின் செயலும் கண்டுபிடிப்பும்  நெத்தியடி

தமிழன் விதைந்து எங்கும் பரவிய விருட்சமடி
புதைந்து எங்கும் கிடக்கும் புதையலடி

அன்று முதல் இன்று வரை
நாம் வைத்த வைக்க போகும்
ஒவ்வொரு அடியும்
உலகம் வியக்கும்படி..
இந்தியா மட்டுமல்ல உலக வரலாற்றை மாற்றப்போகிறது நமது கீழடி..!

Wednesday, September 25, 2019

வெங்காயமே....

உன்னை துகில் உரிக்க
குழந்தை ஆகிறாய்

உன்னை உரிக்க உரிக்க காற்றில் கலந்து காணா போகிறாய்

வலியோ உனக்கு
விழி நீரோ எனக்கு
வருத்தம் கொண்டாலும்
வருத்து உண்போம்
அறுபடுவதோ நீ
அழுவதோ நாங்கள்
கல் நெஞ்சம் கொண்டவனும்
உன்னை கொல்ல
கண்ணீர் கொள்வான்.

பெண்களை அழ வைப்பதில்
நீ ஒரு மாமியார்.

ஆண்களை அழ பைப்பதில்
நீ ஒரு பெண்.

உரித்து பார்த்தால்
நீ ஒரு வாழ்க்கையின் அர்த்தம்.

உணராதவர்களுக்கு
நீ ஒரு எரிச்சல்.

அசுர வளர்ச்சியில் சில சமயம் 
நீ ஒரு அமெரிக்க டாலருக்கு நிகர்.

திகட்டாத
பல்சுவை உணவு கொடுப்பதில்
நீ ஒரு அற்புதம்.

தேர்தல் களத்தில்
எதிர் கட்சிகளுக்கு
நீ ஒரு நாகாஸ்திரம்.

வீட்டை மட்டுமல்ல
நாட்டையும் ஆள்கிறாய்
நாடாளுமன்றத்தில் சண்டையும் மூட்டுகிறாய்.
சில சமயம்
ஓட்டை கூட தட்டி பறித்து சொன்று விடுகின்றாய்..

கிடுகிடுவென விலையில் உச்சத்தில் ஏறி கொள்கிறாய்
விடுவிடுவென மக்களை அச்சத்தில் உறைய வைக்கிறாய்

பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு
பார்காது அழவிடும் நடுநிலைவாதி

உன்னாலும் இங்கு அரசியல் நடக்குது
உன்னாலையே இன்று
அரசியல் நடக்குது..

நடுநிலைவாதி வெங்காயமே வீழாதே எதிரியின் கூடாரத்தில் !
நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் என்று மக்கள் மனதில் !

Thursday, September 19, 2019

நான் சுபசிறி பேசுறேன்...


அன்புடன் அப்பா என்று அழைத்துவிட்டு
ஆசையாய் அன்னையை அணைத்துவிட்டு
பாட்டியின் கன்னத்தை செல்லமாய் கிள்ளி
தன் நாயிடம் ஒழுங்காயிரு என்று அதட்டலாய் சொல்லி
தலைகவசத்தை தனக்கே உரிய பாணியில் மாட்டி
அனைவரிடமும் போய்டு வரேன்னு சைகை காட்டி புறப்பட்டேன்..

சாலையோர மரம் செடிகொடிகள் என்னை தலை அசைத்து வரவேற்க
மெல்லிய தென்றல் வருட
நடுவே கட்டப்பட்டுள்ள பேனர்கள் முரைத்து தன்னை விளம்பரபடுத்திக் கொண்டது
பீம்பூம்பாம் என்ற இரைச்சல் நடுவே என வண்டியும் பயணித்தது..

அலுவலகம் அடைந்தேன் புதுமையாக இருந்தது
நண்பர்கள் பேச்சு என்றும் போல் சுவாரசியமாக இருந்தது
பணியின் கடமைகளை கவனமாய் முடிப்பதில் இருந்தது

மாலை வேளை வீடுதிரும்ப ஆயத்தம் ஆனேன்
மீண்டும் தனக்கே உரிய பாணியில் தலைகவசம் அணிந்தேன்
செல்ல செல்ல வண்டியை செல்லமாக உதைத்தேன்
கவனமாக நாற்பதிற்கு மிகாமல் சாலையின் சென்று கொண்டிருக்க

நினைவில்

குடும்பத்தாரை பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சி
இன்னும் இரண்டு நாட்களில் வெளிநாடு செல்ல போகின்றோம் என்ற மகிழ்ச்சி
நாளை அப்பா பெரிய சொந்த வீடு வாங்கிவிடுவார் என்ற மகிழ்ச்சி
நல்லதொரு வாழ்க்கை அமையும் எனக்கும் நல்வாழ்க்கை அமைந்திடும் என்ற மகிழ்ச்சி

மகிழ்ச்சியில் மீண்டும் பார்த்த மரம் செடிகொடிகளை பார்த்தேன். அசையவில்லை
காலையில் வரவேற்ற வரவேற்பு இல்லை.

ஏனோ அதற்கு தெரிந்துவிட்டது
எனக்கு தெரியவில்லை

ஆனால்

காலையில் முறைத்து தன்னை விளம்பரப்படுத்தி கொண்ட பேனர்கள் அசைந்து கொண்டிருந்தன.

சென்று கொண்டிருக்க

அசைந்த ஒரு பேனர் என் மீது விழ
நிலை தடுமாறி நான் விழ
உயிரோடு தான் இருக்கிறேன் என்று கைகளை தூக்கினேன்
பின் தொடர்ந்த பாம்பீம்பூம் தண்ணீர்லாரி நிலையிழந்து என்னை பதம் பார்த்தது.

நிலையான வாழ்க்கை குலைந்து போனது
விதிபடிதான் வந்தேன் என் விதி முடிந்தது போனது
குடும்ப வருங்காலவேர் பிடுங்கி எறியப்பட்டது

வாழ்ந்தபின் மடிந்தால் இயற்கையின் வெற்றி
நோயால் மடிந்தால் முயற்சியில் தோல்வி
முடியாமல் மடிந்தால் கோழையின் இழிசெயல்
விபத்தால் மடிந்தால் மனிதனின் அலட்சியம்
ஆம்
மனிதனின் அலட்சியமே..

யாரை குறை சொல்வது

ஒழுங்காக வண்டி செலுத்தி வந்த என்னையா?
முறைத்து பார்த்த அந்த பேனரையா?
அதை அசைத்து பார்த்த பூங்காற்றையா?

குறை சொல்லி என்ன பயன்
அரைகுறை ஆனது எனது குடும்பம்.

தடையை மீறி பேனர் வைத்ததால் தான்
எனது வாழ்க்கையின் தடையாய் வந்து நின்றது.
இது மறுக்க முடியாத உண்மை.

நம் நாட்டில்
சட்டங்கள் இருப்பது
ஒருவர் இறப்பதால் தான்
செயலுக்கு வருமோ?

சட்டத்தை மதிப்போம்
சாலை விதிகளை கடை பிடிப்போம்

எனது உயிரே கடைசி உயிராய் இருக்கட்டும்
இது போன்ற பயணமே இறுதி பயணமாக முடியட்டும்.

Friday, September 13, 2019

சிறு சிறு..

சிறு கால்களை கொண்டு தத்தி தத்தி பிறகு
சிறகுகள் முளைத்து விரித்து வானின் உயரம் அடைகிறது பறவைகள்..

சிறு மணித்துளி துளியாய் ஒன்றாய் சேர்ந்து சேர்ந்து
சிறுசிறு கிளைஆறாக பிரிந்து வளைந்துநெளிந்து பெரும் கடலாகிறது..

சிறு விதையாய் மண்ணில் இட்ட செடி 
சிறுக சிறுக வளர்ந்து ஆலமரமாய் விழுதுடன் நிற்குது..

சிறு சிறு கற்கள் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்துதான்
சிறு குவியலாக இருந்து பெரு மலையாக உரு பெற்று நிற்கிறது..

சிறு புள்ளியில் தொடங்கி பல புள்ளிகள் இணக்கம் காட்டி
சிறு கோலம் பெரும் கோலமாய் வீதியெங்கும் விரிந்து அற்புதமாகிறது..

சிறு சிறு எழுத்துக்கள் ஒட்டிப் பிணைந்து வார்த்தைகளாக
சிறு வாக்கியமாக மாறி பெரு காப்பியமாகி அச்சிடப்படுகின்றது..

அதுபோல

சிறிதாக சிந்தனையில் தோன்றிய எண்ணம் தான் பெரியதாய்
சிறிய பட்டிதொட்டி எங்கும் பலரால் பெரிதும் பேசப்படும்..

Tuesday, September 10, 2019

MOtivation#85


ஒரு பக்க க(வி)தை#9

ஒரு தோட்டத்தில்
பூக்களைப் பறிக்காதே என்று தகவல் பலகையை
நட்டுவிட்டுச் சென்றான் தோட்ட்டக்காரன்!

தினமும் தோட்டத்தை நோட்டமிட்டபடி
அழகாய் நடமாடி அவள் சென்று வந்தாள்.
பார்க்கும்போது அவள் நடப்பதுபோல் இல்லை
நடனமிட்டு செல்வதுபோல் இருக்கும்!

அவளை பார்க்கும் போது தோட்டத்தில் உள்ள பூக்கள்
எல்லாம் தன்னை பறித்து சூடிக்கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும்.

ஒருநாள் அவள் வரும்போது பூக்கள் எல்லாம் தன்னை பறித்துச்
செல்ல வேண்டுமென்று காற்றிடம் ஓர் உதவி கேட்டது !

காற்று வீசிய வீச்சில் தகவல் பலகை குப்புற கீழே வீழ்ந்தது !

அவள் வந்தாள் பூக்களைப் பறித்து அள்ளிச் சென்றாள்.

பூக்கள் எல்லாம் அவளால் மோட்சம் அடைந்து அவளை சூடிக்கொண்டது..

மீண்டும் வந்த தோட்டக்காரன் விழுந்து கிடந்த
தகவல் பலகை மறுபடியும் நட்டான் !

மலரும் மொட்டுக்கள் எல்லாம் ஒன்றை ஓன்று
கண்ணடித்துக் கொண்டன காற்று இருக்க நமக்கென்ன என்று..!

Thursday, September 5, 2019

அவள் பெயரும் பூவும்

அவள் தெருவோறம் நடந்து போகையில
அவளின் பெயர் சொல்லி அழைத்தேன்
தெருவோற பூக்கள் எல்லாம் தலைநிமிர்ந்து பார்த்தது.
பின் அழைத்தது நம்மை இல்லை என அறிந்த அந்த பூக்கள் தலைகவிழ்ந்து நின்றது.

அவளின் பெயரை பூக்களுக்கு மத்தியில் எழுதி வைக்க
அனைத்து பூக்களின் தலைவிதியும் மாறி அவைகளின் தலைவியென ஏற்க தொடங்கின.

அவள் பெயர் மீது
மலர்களை குவித்து மூடி வைத்தேன்
மலரின் வாசத்தை
அவள் பெயர்
விழுங்கிருந்தது.

அவள் பெயரை
கட்டிப்பிடித்து உறங்கி கிடந்த மலர்களை
விலக்கிப் பார்த்தேன்
அத்தனையும்
சற்று வளர்ந்திருந்தது.

அவளின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க பூக்களெல்லாம் பூத்து பூத்து குலுங்கி கொண்டன.

அவளின் பெயரை அழகு என்றேன்.
பூக்களெல்லாம் நான்கு திசையின் பக்கம் திரும்பி நின்று கோபித்து கொண்டன.

அவளின் பெயரை மந்திரமாக உச்சரித்தேன்.
பூக்கள் எல்லாம் அதன் இதழ்களால் மது அருந்தியது போல் மயக்க நிலையில் தலையசைத்து ஆடின.

ஆடிக்கொண்டே பூக்கள் எல்லாம் அவள் பெயரை  சொல்ல சொல்ல
அவளது பெயரே அனைத்திற்கும் முதன்மையாக சூடி கொண்டது..!

ஆம்

அவளது பெயரால்
பெயர்பெற்றன பூக்கள்..!

MOtivation#83


MOtivation#82


MOtivation#81


MOtivation#80


MOtivation#79


MOtivation#78


Wednesday, September 4, 2019

ஆசிரிய பெருமக்களுக்கு

கரும் பலகைகளில்
வெறும் எழுத்துக்களால்
தரும் அறிவுகொண்டு
பெறும் மதி மதிப்புடன்
பெரும் வாழ்க்கையை

காண செய்யும்

ஆசிரிய பெருமக்களுக்கு

எனது ஆசிரிய தின வாழ்த்துகள் 💐💐💐💐

காதல் பாடல்#54

மலரா நீ மலரா
நின் முகம் மலரின் மலரா..
ஒளிரா நீ ஒளிரா
விண் நிலா முகத்தின் ஒளிரா..
பூத்து சிரித்து ஒளி வீசுகிறாய்
நெஞ்சம் கொய்து மதி மயக்குகிறாய்..
சரணம்
********
உயிரில் விழும் பனித்துளியை இதழ்தேனாய் பருகுகிறாய்
உன் இதழ்தேன் பருக நான் வண்டாக உருகுகிறேன்.
நீ இதழ்கள் ஒவ்வொன்றாய் விரிக்க விரிக்க என் மனம் எனும் தோட்டத்தில் உன்னை பூக்க செய்து பூரிப்படைய போகின்றேன்
வா வா என் வாழ்வின் மணமே வா
சரணம்
********
தென்றலின் எழில்  தேவி தேன்நிலவின் காதலி
என் தோட்டத்து அழகு ராணி உயிரின் ஆட்டநாயகி.
நீ இதழ்களை ஒவ்வொன்றாக உதிர உதிர நான் என் உயிரினில் ஏந்தி கொள்வேன்
மண்ணில் விழும் முன்னே மண்ணோடு மண்ணாவேன்.
வா வா என் உயிரின் ஆதாரமே வா

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...