போகுற போக்கில் என்னை பாக்குறா
கண்ணின் வித்தையால் ஆளையே தூக்குறா
கண்ணின் வித்தையால் ஆளையே தூக்குறா
முட்ட முட்ட கண்ணு முழிய உருட்டுறா
எட்ட எட்ட உள்ளம் உள்ளே சுருட்டுறா
காதல் விழி அம்பு ஏய்து
இதயம் வழி காதல் வர கொய்யுறா
சரணம்
**********
காந்த விழியாள் அவள் வீணன் என்னை வீரனாய் ஆக்குறா
சில சமயம் வீணனாக்குறா
நீ வெட்கப்பட்டு பார்த்தால் உன் விழிவாளால் நான் வெட்டப்பட்டு நிற்கிறேன்
நீ கண்சிமிட்டி நின்றால் என் இதயதுடிப்பு உடன் நிற்கப்பட்டு துடிக்கும்
நிலவையும் பார்க்க தோனலையே அன்பே உன் விழியினை பார்த்தப்பின்
நீயே புது உலகத்தின் புது நிலவாய்..
சரணம்
**********
கயல் விழியாள் அவள் ஆயிரம் வரிகளை விழியால் பேசுறா
பேசி விழியே மொழியாக்குறா
நீ பேசமறந்த நேரங்களில் உன் பார்வையது வந்து பேசிவிட்டு போகுமடி
நீ முறைத்துப்பார்க்கும் நேரங்களில் என் தேகமது ஏதோ சிலிர்த்துகிட்டு நிற்குமடி
எதையும் நினைக்க தோனலையே அன்பே உன் விழியினை கண்டபின்
நீயே என் உலகமென விழி ஆளுமங்கே ...
😍nice sir
ReplyDelete