அழகாய் பெண்ணை படைக்க
நினைத்தால் அன்பே பிரம்மன் உன்னை
நினைப்பான் உடன் படைப்பான்
அவனுக்கு கிடைத்த அச்சுப்பிரதி
"நீ"
***********************************
அன்பே என்றோ ஒருநாள்
கடற்கரை மணலில் நடந்தாயோ?
உனது பாத சுவடுகளை தழுவிய கடலலை இன்றுவரை அலைந்து கொண்டிருக்கிறது
உனது பாதசுவடுகளை தேடி.!!
***********************************
அன்பே நீ என்னை கடந்து நடக்கிறாய்
என்னை மறந்து எனது இதயம்
உன்னுடன் செல்கிறது காதில்
தொங்கியபடி..!
***********************************
அன்பே இன்றைய தலைப்பு செய்தி என் என்பது உனக்கு தெரியுமா?
அது உன் தலைப்பூ பற்றிய செய்தி தான்..!
***********************************
பெண் என்றால் அழகுதான் என்பதை
பூக்கள் அறிந்து வைத்திருக்கிறது போலும்
அதனால்தான் என்னவோ முன்னே கர்வப்படாமல்
பின்னே பணிந்து மேலும் அலங்கரிக்கின்றனவோ!!!
***********************************
அன்பே உன் பார்வையால் பெட்ரோல் ஊற்றுகிறாய்
விலை உயர்ந்த காதல் தீ என்னுள் பற்றி எரிகிறது
விலையை நீதான் நிர்ணயம் செய்கிறாய்.!!
***********************************
அன்பே நீ விடும் மூச்சுக்காற்று
எனக்கோ சுவாசக்காற்று
புரிகிறதா
நீ விடும் மூச்சுக்காற்று Co2
எனக்கோ (Care)Of2(u&me)!!!!
***********************************
அன்பே உனது விழியால் என்னை
உன்னுள் சிறை வைத்தாய்
இருக்கட்டும்
இருந்து விட்டு போகிறேன் ஆயுள் கைதியாக...!
***********************************
அன்பே
எனது ஓராயிரம் கேள்விகளுக்கு
உனது ஒரே பதில் "ம்ம்ம்"
எனது ஒருசில பதில்களுக்கு
உனது ஒரே பதில் "ம்ஹும்"
புரிகிறது ம்ம்ம் ம்ஹும் காதலின் மொழிதானே!!!
***********************************
அன்பே என் இதயம் நீ போகிற போக்கில் போகிறது....
என் இதயத்தை இயக்கும் சக்திவாய்ந்த இயந்திரத்தை
எங்கே கண்டுபிடித்தாய்....?
அதை உனது விழியினில் எப்படி வைத்தாய்...!!
👌
ReplyDelete