Thursday, April 4, 2019

ஹைக்கூ 100 [1-10]


தமிழ் அருவியாய் என்னுள்ளே
இருந்தும் நதியாய் ஓட விடுகிறேன்
            "ஹைக்கூ கவிதை"
*********************************
ஆயிரம் மந்திரங்கள் ஜெபங்கள் தொழுகைகள்
இந்த ஒரு வார்த்தைக்கு ஈடில்லை
                         "அம்மா"
*********************************
அன்னையின் பத்து மாதத்திற்கு பிறகு
மீத தொண்ணூற்றி ஒன்பது வருடம்
இரண்டு மாதம் நம்மை சுமக்கும் தாய்
                       "அப்பா "
*********************************
விசாலமான வீடு பெரிய பூஜையறை
இருந்தும் தெய்வங்களுக்கு இடமேயில்லை
              "முதியோர் இல்லம்"
*********************************
பார்த்து கொண்டேயிருக்கலாம்
ரசித்து கொண்டேயிருக்கலாம்
முத்தம் கொடுத்து கொண்டேஇருக்கலாம் 
              "மழலை முகம் "
*********************************
இறந்தவனுக்கு மற்றும் இறைவனுக்கு படையல்
வீட்டு வாசலில் பசியில் நிற்கிறான்
                    "யாசகன்"
*********************************
பற்ற வைக்கவில்லை
பற்றி எரிகிறது
     "வயிற்று பசி"
*********************************
இவன் அவனை சாடுகிறான்
அவன் இவனை சாடுகிறான்
இருவருமே கூட்டாளிகள்தான்
                "இன்றைய அரசியல் "
*********************************
வான்மழை இல்லை
வானுயர வளர்கிறது
"விளைநில வீடுகள்"
*********************************
வெறிச்சோடிய வானம்
வந்த பாடில்லை மழை
"ஏழையின் விழிகள்"

1 comment:

  1. உங்கள் புதிய ஹைக்கூ கவிதை முறைக்கு வாழ்த்துக்கள் ஐயா👏💐...
    'தமிழ் அருவியாய் என்னுள்ளே
    இருந்தும் நதியாய் ஓட விடுகிறேன்
    "ஹைக்கூ கவிதை" '-அருமை ஐயா👌

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...