தமிழ் அருவியாய் என்னுள்ளே
இருந்தும் நதியாய் ஓட விடுகிறேன்
"ஹைக்கூ கவிதை"
*********************************
ஆயிரம் மந்திரங்கள் ஜெபங்கள் தொழுகைகள்
இந்த ஒரு வார்த்தைக்கு ஈடில்லை
"அம்மா"
*********************************
அன்னையின் பத்து மாதத்திற்கு பிறகு
மீத தொண்ணூற்றி ஒன்பது வருடம்
இரண்டு மாதம் நம்மை சுமக்கும் தாய்
"அப்பா "
*********************************
விசாலமான வீடு பெரிய பூஜையறை
இருந்தும் தெய்வங்களுக்கு இடமேயில்லை
"முதியோர் இல்லம்"
*********************************
பார்த்து கொண்டேயிருக்கலாம்
ரசித்து கொண்டேயிருக்கலாம்
முத்தம் கொடுத்து கொண்டேஇருக்கலாம்
"மழலை முகம் "
*********************************
இறந்தவனுக்கு மற்றும் இறைவனுக்கு படையல்
வீட்டு வாசலில் பசியில் நிற்கிறான்
"யாசகன்"
*********************************
பற்ற வைக்கவில்லை
பற்றி எரிகிறது
"வயிற்று பசி"
*********************************
இவன் அவனை சாடுகிறான்
அவன் இவனை சாடுகிறான்
இருவருமே கூட்டாளிகள்தான்
"இன்றைய அரசியல் "
*********************************
வான்மழை இல்லை
வானுயர வளர்கிறது
"விளைநில வீடுகள்"
*********************************
வெறிச்சோடிய வானம்
வந்த பாடில்லை மழை
"ஏழையின் விழிகள்"
உங்கள் புதிய ஹைக்கூ கவிதை முறைக்கு வாழ்த்துக்கள் ஐயா👏💐...
ReplyDelete'தமிழ் அருவியாய் என்னுள்ளே
இருந்தும் நதியாய் ஓட விடுகிறேன்
"ஹைக்கூ கவிதை" '-அருமை ஐயா👌