Monday, December 31, 2018

வாடா தம்பி வாடா

வாடா தம்பி வாடா
முன்னே முன்னே வாடா
பழமை ஏற்று வாடா
புதுமை கண்டு வாடா
நேற்று என்பது நம் கையில் இல்லடா
நாளை என்பது நம் யூகம் தானடா
இன்று மட்டுமே உண்மை என்பதை உணர்ந்து நீயும் வாடா.....

சரணம்
********

நேற்றில் இருந்து கொண்டு நாளையை பற்றி யோசிக்காதடா 
வெற்றி பெற்றிட முடியாதடா... 
இன்றில் இருந்து கொண்டு நாளையை எதிர் கொள்ளடா நிச்சயம் வெற்றி பெறுவாயடா...
உனக்காய் பிறந்தது ஒரு புதுநாள்
விதையாய் விதைந்து நீயும் எழுடா
தானாய் நடக்கும் ஒரு அனுபவம்
துணையாய் துணிவாய் நீயும் வாழடா

சரணம்
*********
சென்ற வருடம் நேர்ந்த சோகம் வரும் வருடத்தில் வெந்து நொந்து போகும்டா...
சென்ற வருடம் தங்கிய சந்தோஷம் வரும் வருடத்திலும் தங்கி தேங்கி வருடும்டா...
பூவாய் பிறந்தது புது வருடம்
மொட்டாய் மலர்ந்தது நம் உலகம்
சிட்டாய் பறந்திடு ஊர் மகிழும்
பொட்டாய் அணிந்திடு உன் திலகம்

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...