Monday, May 27, 2019

காதல் பாடல்#34

இரும்பாக இருந்தேன் எறும்பாக நுழைந்தாய்
அரும்பாக இருந்தேன் குறும்பாக மலர்ந்தாய்
உன் வருகையில் பூத்துச் செழிக்கிறது என் மனம் 
நினைக்க நினைக்க இனிக்கிறது தினம் தினம்.
சரணம்
**********
உன் பார்வையில் மின்னேற்றம் செய்து கொள்கிறது என் உயிர்.
உன் வார்த்தைகள் இசையாகப் பரவுகிறது இதயத்தில். 
நீ தொடுகையில் ஆனந்தப் பரவசமடைகின்றன உடலின் அணுக்கள். 
நடக்கும் புதையல் நீ
நட்சத்திர சிற்பம் நீ

சரணம்
**********
உன் அன்பெனும் எரிபொருளில் இயங்கி கொள்கிறதது என் இதயம்.  
உன் நினைவுச் சுடர்கொண்டு ஒளிர்கிறது உதயம் !
நீ  வருகையில் ஒருநாள் கூட்டிக்கொள்கின்றன வாழ்வின் ஆயுட்காலம்.
ஏகாந்த சொர்க்கம் நீ 
என்னிலே அடக்கம் நீ.

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...