Thursday, May 23, 2019

பயப்படுவதில்லை

அ'ருவி கீழே விழ பயப்படுவதில்லை
ஆ'டுகளம் காண விலங்குகள் பயப்படுவதில்லை
இ'ருள் அதன் கருமை விலகுமென பயப்படுவதில்லை
ஈ'ட்டிக்கு குறி எதிரே யாரென பயப்படுவதில்லை
உ'றவு யாரென்றாலும் அன்பைக்காட்ட பயப்படுவதில்லை
ஊ'ஞ்சல் தன் மேல் உட்கார்ந்தாலும் பயப்படுவதில்லை
எ'றும்பு தான் செல்வதை யார் கலைத்தாலும் பயப்படுவதில்லை
ஏ'ணி யாராகினும் மேலே ஏற்றி விட பயப்படுவதில்லை
ஐ'ம்புலன்களும் செய்வதை செம்மையாய் செய்ய பயப்படுவதில்லை
ஒ'ற்றுமை பிரிவை கண்டு என்றும் பயப்படுவதில்லை
ஓ'டும் நதி பாதை எதுவாயினும் பயப்படுவதில்லை
ஔ'டதமாய் விளங்க நம் உடம்பு பயப்படுவதில்லை
அஃ'து மனிதா நீ மட்டும் ஏன் உழைப்பதற்கு பயப்படுகிறாய்?
உழைத்திடு! உயர்ந்திடு!

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...