Tuesday, May 28, 2019

ஒரு பக்க க(வி)தை#1



மீன்கள் துள்ளி ஓட கொக்கு கொக்கி போட
தவளை திக்கி பாட நண்டு தத்தி ஆட
பாம்பு நடன மிட இதர வகை மகிழ்ந்திட

மேகம் பூமியின்
தாகம் தனித்துக்கொண்டிருந்தது..

ஆம் மழை பெய்த வண்ணம்
சாலை வீதி மரம் செடி கொடிகளை கழுவிக்கொண்டிருந்தது...

இதனை ரசிக்க ஜன்னல் ஓர(ம்)
சாரலை நான் ரசித்து கொண்டிருந்தேன்

அழகாய் இருந்தது இதனை மேலும்
அழகு சேர்க்க அழகு நங்கை
சாலையில் நின்று நனைந்தபடி
மேகத்தை மோகத்துடன் பார்த்தாள்.

அவள் மேனி தொட மழைத்துளிகள்
மோட்சம் அடைந்து கொண்டிருந்தது.

அதில் சில துளிகள் இதழ் நுழைந்து
சொர்கம் தொட ஆசை பட்டு கொண்டிருந்தது

நான் சொர்கத்தின் நுழைவாயிலில்
பார்வையாளனாக நின்று கொண்டிருந்தேன்...!
  

 

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...