Wednesday, May 29, 2019

ஒரு பக்க க(வி)தை#2



வீட்டில்...

தாத்தா செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்
பாவம் அவர் உணரவில்லை
செய்தித்தாள் தான் அவரை வாசிக்கின்றது என்பதை
அவரது முகமெங்கும் ஒட்டிக்கொண்டது எழுத்துக்கள்.
ஊடக விளையாட்டே விளையாட்டு சலித்து கொள்கிறார்.

பாட்டி வெற்றுஇலையை பாக்கு சுண்ணாம்பு தடவி
வாயிலிட்டு மெல்ல வெற்றிஇலையாக மாற்றினாள்.
தன் பிள்ளைகள் செய்ததை நினைத்து வாய் மட்டுமல்ல
கன்னமும் கண்ணும் சிவந்திருந்தது.
உறவுக்குள் எத்தனை விளையாட்டுகள் புலம்புகிறார்.

மருமகள் வீட்டு வேலை செய்து கொண்டிருக்க
மூளையில் அலுவலக நினைவலை வந்து வந்து போக
குழந்தையை பராமரித்து உணவு செய்து என்று நொந்து கொள்ள
அச்சோ என்ன விளையாட்டு வாழ்க்கைலனு அலுத்துக்கிறார்.

மகன் விதியென புலம்பினாலும் மதியென மதித்து உழைத்து வாழ்வான்.
சுமையென அலுத்துக் கொண்டாலும்
சுகமென கருதி சுமப்பான்.
ஓடாய் தேய்ந்து உழைத்து விளையாடுகிறான்.

அனைத்தையும் பார்த்துக் கொண்டு
அழகாய் சிரித்து விளையாடி கொண்டிருக்கும் மழலை.

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...