Thursday, May 23, 2019

ஹைக்கூ பூக்கள் #2

மௌனம் காணும் வேளைதனில்
தமிழை அள்ளி பருகுகிறேன்...
ஹைக்கூவாக பேசுகிறேன்!
***********************
மாறிமாறி வருகின்றன
சூரியனும் சந்திரனும்
சபாஷ் சரியான போட்டி.!
***********************
எத்தனை சோகங்களோ
எத்தனை மகிழ்ச்சிகளோ
கூகுள் இன்பாக்ஸ்க்குள்..!
***********************
காகித நிலத்தை உழுது எழுதுகோல்  
விதைக்கும் விதை கவிதை..!
************************
பலரின் வேண்டுதல் அர்ச்சனை
சூடம் கற்பூரம் அர்ச்சனைகளில்
திக்குமுக்காடுகிறார் கடவுள்.
*************************
கொடுக்கப் பெருகும்
மனித இரத்தம் 
செய் இரத்ததானம்.
**************************

1 comment:

  1. "காகித நிலத்தை உழுது எழுதுகோல்
    விதைக்கும் விதை கவிதை..! "- semma semma semma sir

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...