Monday, December 31, 2018
வாடா தம்பி வாடா
வாடா தம்பி வாடா
முன்னே முன்னே வாடா
பழமை ஏற்று வாடா
புதுமை கண்டு வாடா
நேற்று என்பது நம் கையில் இல்லடா
நாளை என்பது நம் யூகம் தானடா
இன்று மட்டுமே உண்மை என்பதை உணர்ந்து நீயும் வாடா.....
சரணம்
********
நேற்றில் இருந்து கொண்டு நாளையை பற்றி யோசிக்காதடா
வெற்றி பெற்றிட முடியாதடா...
இன்றில் இருந்து கொண்டு நாளையை எதிர் கொள்ளடா நிச்சயம் வெற்றி பெறுவாயடா...
உனக்காய் பிறந்தது ஒரு புதுநாள்
விதையாய் விதைந்து நீயும் எழுடா
தானாய் நடக்கும் ஒரு அனுபவம்
துணையாய் துணிவாய் நீயும் வாழடா
சரணம்
*********
சென்ற வருடம் நேர்ந்த சோகம் வரும் வருடத்தில் வெந்து நொந்து போகும்டா...
சென்ற வருடம் தங்கிய சந்தோஷம் வரும் வருடத்திலும் தங்கி தேங்கி வருடும்டா...
பூவாய் பிறந்தது புது வருடம்
மொட்டாய் மலர்ந்தது நம் உலகம்
சிட்டாய் பறந்திடு ஊர் மகிழும்
பொட்டாய் அணிந்திடு உன் திலகம்
Friday, December 28, 2018
காதல் பாடல்#29
உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட
எந்தன் வாழ்வே நீதானென தந்து சொல்லி காட்ட
அம்மம்மா நெஞ்சம் துள்ள
காதலோ கையால் அள்ள
போவென்று மேகத்தை நானும் தூது சொல்ல
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?
சரணம்
********
விடியும்வரை என்னுடன் இருக்கிறாய்
விடிந்தவுடன் மறைந்து செல்கிறாய்
கண்ணுக்குள் காதல் வார்க்கிறாய்
நெஞ்சுக்குள் ஆசை வளர்க்கிறாய்
நினைக்கிறேன் மறுகணம் தோன்றுகிறாய்
மறக்கிறேன் போக மறுக்கிறாய்
காற்றாய் என்னை வருடுகிறாய்
காதலால் என்னை வறுக்கிறாய்
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?
சரணம்
*********
நடக்கிறேன் பாதை ஆகிறாய்
படிக்கிறேன் பாடம் ஆகிறாய்
தவிக்கிறேன் ஆறுதல் ஆகிறாய்
முழிக்கிறேன் விடைகள் ஆகிறாய்
பேசுகிறேன் வார்த்தை ஆகிறாய்
சிரிக்கிறேன் சத்தம் ஆகிறாய்
உளறுகிறேன் அர்த்தம் ஆகிறாய்
தெளிவாகிறேன் நித்தம் ஆகிறாய்
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?
எந்தன் வாழ்வே நீதானென தந்து சொல்லி காட்ட
அம்மம்மா நெஞ்சம் துள்ள
காதலோ கையால் அள்ள
போவென்று மேகத்தை நானும் தூது சொல்ல
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?
சரணம்
********
விடியும்வரை என்னுடன் இருக்கிறாய்
விடிந்தவுடன் மறைந்து செல்கிறாய்
கண்ணுக்குள் காதல் வார்க்கிறாய்
நெஞ்சுக்குள் ஆசை வளர்க்கிறாய்
நினைக்கிறேன் மறுகணம் தோன்றுகிறாய்
மறக்கிறேன் போக மறுக்கிறாய்
காற்றாய் என்னை வருடுகிறாய்
காதலால் என்னை வறுக்கிறாய்
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?
சரணம்
*********
நடக்கிறேன் பாதை ஆகிறாய்
படிக்கிறேன் பாடம் ஆகிறாய்
தவிக்கிறேன் ஆறுதல் ஆகிறாய்
முழிக்கிறேன் விடைகள் ஆகிறாய்
பேசுகிறேன் வார்த்தை ஆகிறாய்
சிரிக்கிறேன் சத்தம் ஆகிறாய்
உளறுகிறேன் அர்த்தம் ஆகிறாய்
தெளிவாகிறேன் நித்தம் ஆகிறாய்
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?
காதல் பாடல்#28
காதல் பாடல்#28
காதல் யாதென அறிந்தேன்.
தெளிந்தேன் தெளிந்தேன் உன்னை நினைக்க
உலகம் நீயென தெளிந்தேன்.
நிறைந்தேன் உன் இதயத்தில் நிறைந்தேன்
பறந்தேன் வான் தொட்டுவிட பறந்தேன்
சரணம்
**********
அளந்தேன் அழகின் பேரழகியே இவளென்று அளந்தேன்.
பிளந்தேன் வாயின் கதவுதனை மூடாமல் பிளந்தேன்.
உலகம் தேடினாலும் கிடைக்காத மங்கை இவளென்பதை உணர்ந்தேன்.
வாழும் வாழ்விலும் கிடைத்திடாத பொன்னான வாழ்க்கை நீதானென்பதை உணர்த்தினேன்.
சரணம்
**********
நெளிந்தேன் காதல் காதலென்று என்னுள் குழைந்தேன்.
களைந்தேன் மௌனம் கூடாதென்று எண்ணம் களைந்தேன்.
காதல் அவளிடம் சொல்லிவிட நேரில் ஒருகைபார்த்திட துணிந்தேன்.
அவளை நேரில் பார்த்துவிட காதல் என்னை ஒருகைபார்த்திட தணிந்தேன்.
Monday, December 24, 2018
Sunday, December 23, 2018
நவீன திருக்குறள் அதிகாரம் : மொபைலும் மேனும்
நவீன திருக்குறள்
அதிகாரம் : மொபைலும் மேனும்
அதிகாரம் : மொபைலும் மேனும்
**********************************
1. உலகமே கைகளில் வந்ததோ நம்முலகம்
அதனுள் மாட்டிக் கொண்டதோ?!
2. உள்ளங்கையில் உலகம் சின்னதாக ஆனது
உறவுகளோ சின்னாபின்ன மானது.
3. பிறர்முகம் மறந்தோம் எண்களால் பின்னால்
நம்முகமும் மறப்போம் உன்னால்.!
4. மொபைலால் மனிதனின் மொபைலிட்டி போச்சு
மொத்தத்தில் முடவனாய் நிற்கலாச்சு.
5. கைப்பேசி இல்லாதார் கைவீசி நடப்பார்
நடக்கையில் தலைநிமிர்ந்தும் நடப்பார்.
6. தூரத்தும் சொந்தங்களும் வெகுதூர சொந்தங்களானது
சுகதுக்கத்துக்கு ஸ்டேட்டஸ்சே பதிலானது.
7. மொபைலுக்கு உள்ளே போவான் ஒருவனவன்
குடும்பங்களில் இருந்து வெளியேறுபவன்.
சுகதுக்கத்துக்கு ஸ்டேட்டஸ்சே பதிலானது.
7. மொபைலுக்கு உள்ளே போவான் ஒருவனவன்
குடும்பங்களில் இருந்து வெளியேறுபவன்.
8. நான்கு திசைகளில் நல்லதொரு குடும்பம்
நான்குபேர் கைகளிலும் கைப்பேசி.
9. தொலைக்காட்சியை ஓடவிட்டு பார்க்குறதைவிட தன்னுடைய
கைபேசியை பார்குறவன் அதிகம்.
கைபேசியை பார்குறவன் அதிகம்.
10. தலைநிமிர்ந்து நடந்தவ ரெல்லாம் உன்னால்
தலைகுனிந்து நடக்க லாச்சே?!
Saturday, December 22, 2018
காதல் பாடல் #27
கண்ணில் கண்ணில் காதல் காதல்
உன்னில் என்னில் காதல் காதல்
காலம் அழியா காதல் காதல்
காலம் புகழும் காவிய காதல்
சொல்ல சொல்ல இனிக்கும் காதல்
சொல்லார் சொல்லும் இதுவே காதல் காதல்
சரணம்
*********
சிலையோடு உளி செய்யும் காதல் காதல்
அலையோடு கரை தழுவும் காதல் காதல்
மலையோடு அருவி கொட்டும் காதல் காதல்
விலையோடு மக்கள் வாழும் காதல் காதல்
கலையோடு நாம் இருவர் கொண்டாடும் காதல் காதல்
நிலையோடு நமது இருதயம் போற்றிடும் காதல் காதல்.
எல்லாம் வியக்கும் நமது காதலே காதல் காதல்.
சரணம்
**********
பூவோடு வண்டு வட்டமிடும் காதல் காதல்
மழையோடு மண் பேசிடும் காதல் காதல்
கடலோடு மீன்கள் உறவாடும் காதல் காதல்
வானோடு விண்மீன் சிரிக்கும் காதல் காதல்
பயிரோடு நமது விவசாயி செலுத்திடும் காதல் காதல்
உயிரோடு எனது உயிர்தனை வைத்திடும் காதல் காதல்
எல்லாம் வியக்கும் நமது காதலே காதல் காதல்.
Wednesday, December 19, 2018
Tuesday, December 18, 2018
காசு காசு காசு
காசு காசு காசு நண்பா காசு காசு
நடக்கும் எல்லாத்துக்கும் காசு காசு
பீசு பீசு பீசு தேவை பீசு பீசு
போகும் இடமெல்லாம் பீசு பீசு
காசில்லாத வாழ்க்கை இங்கேது பாஸ்சு
காசிருந்தா எல்லாமே ஆகுமே பாசு
நடக்கும் எல்லாத்துக்கும் காசு காசு
பீசு பீசு பீசு தேவை பீசு பீசு
போகும் இடமெல்லாம் பீசு பீசு
காசில்லாத வாழ்க்கை இங்கேது பாஸ்சு
காசிருந்தா எல்லாமே ஆகுமே பாசு
சரணம்
**********
பள்ளி படிக்க வைக்க பட்டம் பெற்றிட காசு காசு
வேலைய தொடங்கவும் வேலைய முடிக்கவும் காசு காசு
ஏழை முதல் பணக்காரன் வரை ஆட்டி
படைத்து கொண்டு இருப்பதும் காசு காசு
நிலை இல்லாத வாழ்க்கைனு தெரிந்தும்
மானுடன் அடிமை பட்டு இருப்பதும் காசு காசு
சரணம்
**********
பெண்ணை பார்க்கவும் கல்யாணம் பண்ணவும் காசு காசு குழந்தை பெறவும் அதனை வளர்க்கவும் காசு காசு
சமுதாயம் கவனிக்க நம்மை நிலைநிறுத்த காசு காசு
இருக்கிற நிம்மதியை தொலைத்து நம்மை
பைத்தியமாக தெருவில் நிற்க்க செய்வதும் காசு காசு
மனிதனின் அன்பு கருணை அனைத்தையும்
அழித்து கொண்டு தன்னையும் அழிக்கும் இந்த காசு காசு
Saturday, December 15, 2018
Friday, December 14, 2018
நம்பிக்கை பாடல்
தலை நிமிர்ந்து முன்னே செல்லடா
தடைகள் தொடுப்பவர் இங்கே எவனடா..
திரும்பும் திசைகள் பாதை தானடா
உன்னை தொடர்வார் பலர் உண்டடா..
வலியில்லா வாழ்க்கை ஏதடா அன்னை
வலி கொண்டதால் தான் உலகில் நீயடா
சரணம்
++++++++
வீழ்ந்தாலும் அருவியை போல் எழுந்திடுடா
தாழ்ந்தாலும் கதிரை போல் வளைந்திடடா
மறைந்தாலும் விதை போல் வந்திடடா
இறந்தாலும் சூரியன் போல் உதித்திடடா
முயற்சி ஒன்றையே மூச்சாய் மாற்றடா
விடாமுயற்சி கொள்வதால் வாழ்வே வருமடா
இதனை உணரடா இயங்கி உயருடா
சரணம்
++++++++
மலையும் பொடியாகும் உளியாய் இருந்திடடா
குளமும் கடலாகும் துளியாய் இருந்திடடா
வானம் வெளிச்சமாகும் ஒளியாய் இருந்திடடா
எங்கும் நிறைத்திடும் வளியாய் இருந்திடடா
நம்பிக்கை கொண்டு உன்னை
செதுக்கடா
தன்னம்பிக்கை உன்னை தலைநிமிர்ச் செய்யும்டா
தன்னம்பிக்கை உன்னை தலைநிமிர்ச் செய்யும்டா
இதனை உணரடா இயங்கி உயருடா
Wednesday, December 12, 2018
Tuesday, December 11, 2018
Monday, December 10, 2018
Sunday, December 9, 2018
காதல் ரொமான்ஸ் பாடல்#26
காதல் ரொமான்ஸ் duet பாடல்#26
வெட்கத்தை மறைச்சு நின்னேன்
பக்கத்தை குறைச்சு வைச்சேன்
இடைவெளி ஏதுமில்லை மாமா...
தேடிதேடி படிக்க வந்தேன்
படித்திட புதையல் கண்டேன்
தலைக்கனம் மீறவில்லை மானே...
சரணம்
*********
உடுத்தும் மேலாடை நூலாக நானாக இருந்து இறுகவா
படுத்தும் பாடாக என்மேனி உருகும் பார்த்து பருகவா
உனது விழி அசைவில் வீழ்ந்தேனோ
மீண்டும் உனது ஓரப்பார்வை இன்பம் வா வாவென்று அழைக்கிறதோ
இரவின் மயக்கம் விடியலில் என்றால் கசந்திடதான் தோன்றுமோ
கரும்பில் எது என்றாலும் சுவைப்பதில் தவறு இல்லை
சரணம்
*********
கனிந்த பழங்கள் சுவைத்து பார்க்க அணிலாக மாறவா
துணிந்து கன்னம் ரெண்டும் சிவக்க முத்தங்கள் போடவா.
உனது அழகு வெட்கத்தில் தொலைந்தேனோ
மீண்டும் உனது வெட்கம் என்னை வா மீட்கிறேன் என்கிறதோ
கன்னத்தில் இச்சென்ற ஓசை அழுத்தமாக விழுந்திட விழுந்திட
நரம்புகளில் ஒரு மின்னல் காதலில் குழந்தைகளாக நாம் இருவரும்.
வெட்கத்தை மறைச்சு நின்னேன்
பக்கத்தை குறைச்சு வைச்சேன்
இடைவெளி ஏதுமில்லை மாமா...
தேடிதேடி படிக்க வந்தேன்
படித்திட புதையல் கண்டேன்
தலைக்கனம் மீறவில்லை மானே...
சரணம்
*********
உடுத்தும் மேலாடை நூலாக நானாக இருந்து இறுகவா
படுத்தும் பாடாக என்மேனி உருகும் பார்த்து பருகவா
உனது விழி அசைவில் வீழ்ந்தேனோ
மீண்டும் உனது ஓரப்பார்வை இன்பம் வா வாவென்று அழைக்கிறதோ
இரவின் மயக்கம் விடியலில் என்றால் கசந்திடதான் தோன்றுமோ
கரும்பில் எது என்றாலும் சுவைப்பதில் தவறு இல்லை
சரணம்
*********
கனிந்த பழங்கள் சுவைத்து பார்க்க அணிலாக மாறவா
துணிந்து கன்னம் ரெண்டும் சிவக்க முத்தங்கள் போடவா.
உனது அழகு வெட்கத்தில் தொலைந்தேனோ
மீண்டும் உனது வெட்கம் என்னை வா மீட்கிறேன் என்கிறதோ
கன்னத்தில் இச்சென்ற ஓசை அழுத்தமாக விழுந்திட விழுந்திட
நரம்புகளில் ஒரு மின்னல் காதலில் குழந்தைகளாக நாம் இருவரும்.
Saturday, December 8, 2018
காதல் பாடல்#25
காதல் பாடல்#25
தேர்தல் தேர்தல் காதல் தேர்தல் நம்முள்ளே
நீயா நானா வெல்வது யாரிங்கே சொல்கண்ணே
நீ என்னை வென்றால் நான் உந்தன் உடல்தான்.
நான் உன்னை வென்றால் நீ எந்தன் உயிர்தான்.
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோமா?
சரணம்
********
பார்த்த நாள் முதல் அன்பே
உள்ளம் கொள்ளை கொண்டு
உள்ளாட்சி உள்ளே செய்கிறாய்
தேர்தல் வீணடி காதல்தானடி
இதயராணி நீயடி வாழ்வேநானடி.
பணம் ஏனோ மனம் போதும்
கட்சித் தாவல் வேண்டாம்
காதல் காவல் வேண்டும்
மோதல் நமக்குள் ஏதடா
காதல் ஓட்டு போடடா
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோம் வாடா!
சரணம்
********
நீதானே எனது முதல் மந்திரி
நானே உந்தன் ராஜதந்திரி
சட்டசபை அமைக்க போவோமா
காதல் சட்டம் இயற்றிட
செய்வோமா காதலும் செய்வோமா.
ஊருக்கே தலைவன் நான்
எனது உள்ளத்து தலைவிநீ
கட்டளை போடு நடக்கிறேன்
கட்டிக் கொள்ள உருகுறேன்.
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோம் வாடி!
தேர்தல் தேர்தல் காதல் தேர்தல் நம்முள்ளே
நீயா நானா வெல்வது யாரிங்கே சொல்கண்ணே
நீ என்னை வென்றால் நான் உந்தன் உடல்தான்.
நான் உன்னை வென்றால் நீ எந்தன் உயிர்தான்.
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோமா?
சரணம்
********
பார்த்த நாள் முதல் அன்பே
உள்ளம் கொள்ளை கொண்டு
உள்ளாட்சி உள்ளே செய்கிறாய்
தேர்தல் வீணடி காதல்தானடி
இதயராணி நீயடி வாழ்வேநானடி.
பணம் ஏனோ மனம் போதும்
கட்சித் தாவல் வேண்டாம்
காதல் காவல் வேண்டும்
மோதல் நமக்குள் ஏதடா
காதல் ஓட்டு போடடா
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோம் வாடா!
சரணம்
********
நீதானே எனது முதல் மந்திரி
நானே உந்தன் ராஜதந்திரி
சட்டசபை அமைக்க போவோமா
காதல் சட்டம் இயற்றிட
செய்வோமா காதலும் செய்வோமா.
ஊருக்கே தலைவன் நான்
எனது உள்ளத்து தலைவிநீ
கட்டளை போடு நடக்கிறேன்
கட்டிக் கொள்ள உருகுறேன்.
உயிர்மெய் சேர்ந்திட காதல் தேர்தல் சேர்ந்தே வெல்வோம் வாடி!
நவீன திருக்குறள் அதிகாரம் - பெண்ணென்பவள்
நவீன திருக்குறள்
அதிகாரம் - பெண்ணென்பவள்
------------------------------ ----------------------------
1. கருவிலே உதித்ததும் கள்ளிப்பால் என்றோரை
கழுத்தறுத்து தாய்ப்பால் பருகியவளோ.!
2. அன்னையில் தொடங்கி பெண்மையில் அடங்கி
ஆண்மையில் முடங்கி நிற்பவளோ.!
3. உடலற்ற உயிரை உயிராய் கருவாக்கி
உடலாக்கிய பிறப்பின் உச்சமவளோ.!
4. சொல்லப் போவது யாதென அறியாத
இரகசியம் கொண்ட பெண்(Pen)ணிவளோ.!
5. புரியாத புதிராய் விளங்காத விடையாய்
முடியாத முடிவுமாய் விளங்குபவளோ.!
6. உயிராய் நினைத்து உயிரை வைத்து
உருகுலையா உறவை காப்பவளோ.!
7. அன்பாய் அன்பும் கொஞ்சும் கெஞ்சும்
அரவணைக்கும் அன்புத் தாய்மையோ.!
அரவணைக்கும் அன்புத் தாய்மையோ.!
8. இல்லாள் இல்லாது இருக்காது இல்லமது
இருந்தால் இல்லமில்லை அது.
9. வாய்ப்பளித்து வாய்ப்பிளக்க வாழ்வுதனை அளித்ததால்
வாழ்க்கையில் யாதுமாகி நிற்பவளோ.!
10. இருப்போரிடம் விழிப்பாய் நெருப்பாய் இருப்பாய்
உயர்வாய் சிறப்பாய் இருப்பாய்.!
Friday, December 7, 2018
Sunday, December 2, 2018
தாலாட்டு பாடல்
தாலாட்டு பாடல்
***********************
செல்லமே அழகிய செல்லமே
உலகில் உனக்குஈடு இல்லையே
வெல்லமே இளகிய வெல்லமே
உன்னிடம் கடன்கொஞ்சம் கேட்குமே
உன் பிறப்பு என் மறுஜென்மம்
உன் வாழ்வு என் மறுவாழ்வு
உடன் நீயிருக்க நெருங்குமோ தாழ்வு
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சரணம்
**********
மேகத்தை மெத்தையாக்கி தென்றல் அதை தூது விட்டேன்
நட்சத்திரம் ஜொலிக்கவிட்டு இதமாய் இசை பாட விட்டேன்
நிலாமுகம் நீ தூங்க நிலவொளியை குறைச்சு வச்சேன்
கலைநயம் நீ மகிழ பாசத்தை நெறைச்சு வச்சேன்
மலரும் உன் முகம்பாக்க மனசும் மலரும் கண்ணே
ஊரு கண்ணு குவிஞ்சிருக்கு கண்மூடி தூங்கு கண்ணே
கருவினில் உதைத்த அந்த காலு ரெண்டும் நோகுங் கண்ணே
நோகாம புடிச்சி விட சுகமா தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சரணம்
**********
தேவர்கள் கடைந்தெடுத்து கண்ட முதல் அமுதம் நீயன்றோ
தமிழும் திகைத்துநின்ற மழலை சொல் உதிர்த்தது நீயன்றோ
உன்னை நான் முத்தமிட என்மொத்தமும் சத்தமிட அடடா
எந்தன் உயிர் நாடிகள் உன்விரல்பிடியில் கிடக்கிறதே அடடா
உறங்கும் என் ஓவியமே சிணுங்கும் உலக இசையே
முனங்கும் வான் முகிலே தாவும் அழகிய புயலே
விழிக்கும் விண் மீனே சிரிக்கும் இதழ் சித்திரமே கண்ணுறங்கு
தோட்டத்தில் முகிழ்ந்த முதல் பூவே தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
***********************
செல்லமே அழகிய செல்லமே
உலகில் உனக்குஈடு இல்லையே
வெல்லமே இளகிய வெல்லமே
உன்னிடம் கடன்கொஞ்சம் கேட்குமே
உன் பிறப்பு என் மறுஜென்மம்
உன் வாழ்வு என் மறுவாழ்வு
உடன் நீயிருக்க நெருங்குமோ தாழ்வு
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சரணம்
**********
மேகத்தை மெத்தையாக்கி தென்றல் அதை தூது விட்டேன்
நட்சத்திரம் ஜொலிக்கவிட்டு இதமாய் இசை பாட விட்டேன்
நிலாமுகம் நீ தூங்க நிலவொளியை குறைச்சு வச்சேன்
கலைநயம் நீ மகிழ பாசத்தை நெறைச்சு வச்சேன்
மலரும் உன் முகம்பாக்க மனசும் மலரும் கண்ணே
ஊரு கண்ணு குவிஞ்சிருக்கு கண்மூடி தூங்கு கண்ணே
கருவினில் உதைத்த அந்த காலு ரெண்டும் நோகுங் கண்ணே
நோகாம புடிச்சி விட சுகமா தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
சரணம்
**********
தேவர்கள் கடைந்தெடுத்து கண்ட முதல் அமுதம் நீயன்றோ
தமிழும் திகைத்துநின்ற மழலை சொல் உதிர்த்தது நீயன்றோ
உன்னை நான் முத்தமிட என்மொத்தமும் சத்தமிட அடடா
எந்தன் உயிர் நாடிகள் உன்விரல்பிடியில் கிடக்கிறதே அடடா
உறங்கும் என் ஓவியமே சிணுங்கும் உலக இசையே
முனங்கும் வான் முகிலே தாவும் அழகிய புயலே
விழிக்கும் விண் மீனே சிரிக்கும் இதழ் சித்திரமே கண்ணுறங்கு
தோட்டத்தில் முகிழ்ந்த முதல் பூவே தூங்கு கண்ணே
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
Subscribe to:
Posts (Atom)
கல்வி
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
-
உயிரெழுத்து V 0.1 அ'ம்மா அனைத்திற்கும் ஆ'தாரம் அடிப்படை.. இ'கழ்ந்தால் நீ இழப்பாய் ஈ'ட்டிய செல்வங்களை.. உ'யிராய் உச்சி...
-
ரொமான்ஸ் 😉 V 0.1 அன்பே.. நட்பே.. நகம் இழந்தபோது விரலாய் இருக்கிறாய்.. விரல் இழந்தபோது கையாய் இருக்கிறாய்.. கை இழந்தபோது ...