Thursday, January 30, 2020

விவசா(யி)(யம்) V 0.4



நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின

விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடத்தில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலோ கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை

சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுக்கே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணக்கூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நான்காயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேணவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்

பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழிற்சாலைகள்.....

நிலத்தை விற்று பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி
தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது

Windowsஐ'யும் Vistaவை'யும் உண்ண முடியாது

மதுவை மட்டும் தாகத்திற்கு குடிக்க முடியாது

பசிக்காதது போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.

நாம்  'அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்தோ அதன் சார்பு தொழிலிலிருந்தோ வந்திருப்போம் உண்மை தானே...
சிந்தியுங்கள் மக்களே!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...