என் மனதிற்கும் அறிவிற்கும் எட்டிய செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்
இப்போ நாம ஒரு இடத்துல வசிக்கிறோம்னு வச்சிக்கோங்களேன்
வேலைக்கு போய்ட்டு தினம் வரோம்
நம்ம இடத்துல வணிகம் செய்ய சிலர் பெட்டிக்கடை அல்லது மளிகை கடை
வைப்பாங்க
கடை வைக்குற ஆள் வேறுயாரும் இல்ல நம்ம இடம் சார்ந்த நம்ம சகோதர சகோதரியை இருப்பாங்க இல்லையா
அவங்களுக்கு தெரிஞ்சதே வணிகமாத்தான் இருக்கும்
நாம அதாவது நாம எல்லோரும் வாங்க கூடிய ஒன்று இரண்டு பொருட்கள் தான் அவர்களின் வருவாய்
ஆனா நாம என்ன பண்ணுவோம் வேலை முடித்து விட்டு வரும் பொழுது அல்லது பொருட்கள் வாங்குவதற்காகவே வேண்டிய எடுத்துக்கிட்டு நூறு ரூபாய் பெட்ரோல் போட்டு பெரிய வணிகர்கள் கிட்ட போய் வாங்குவோம்..
அந்த போயிட்டு வர செலவை நம்ம தெரு வணிகர்கள்கிட்ட தர மாட்டோம்..
இன்னொன்னு பெரிய வணிகர்களிடம் வணிகம் செய்ய அதற்கென்று வாடிக்கையாளர்கள் கண்டிப்பா இருப்பாங்க.
அதேபோல் இணையதள வர்த்தகம் இன்னொரு பெரிய ஆபத்து. ஏற்கனவே இருக்கிற சிறு குறு தொழில் செய்வோர் என்ன பண்றதுனே தெரிய நிற்கும் சூழலில் இது தேவையா னு கண்டிப்பா யோசிக்கணும். முற்றிலும் வேண்டாம்னு சொல்லல தேவைப்பட பயன்படுத்தினால் போதும். மற்றபடி நம் வீதியில் இருக்கும் நம் வணிகர்களிடம் வணிகம் செய்வோம், அவர்களின் வாழ்க்கைக்கு காய் கொடுப்போம். நாம் ஒவ்வொரு பொருட்களின் மீது தரும் அந்த ஒரு ரூபாய் தான் அவர்களின் வருமானம். வீதியில் இல்லையா அடுத்த தெரு அல்லது அடுத்த தெரு என்று நாம் வசிக்கும் இடம் வணிகம் செய்ய வீதி முன்னேற ஊர் முன்னேறும் ஊர் முன்னேற நாடு முன்னேறும்.
என்ன இந்த கருத்து உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க subscribe பண்ணுங்கன்னு சொல்ல மாட்டேன்
என்ன மேல் சொன்னதை முடிந்தவரையில் செய்வோமா...!
நன்றி!
No comments:
Post a Comment