Monday, January 27, 2020

எழுந்து வாடா

குட்ட குட்ட குனிஞ்சது போதும்
தட்ட தட்ட தணிஞ்சது போதும்
எழுந்து எழுந்து வாடா
விழுந்தா விதையா போடா
வேளை வருமென இறங்கி செய்வோம் வாடா வாடா
நாளை நமக்கென இருக்கு வெல்வோம் வாடா வாடா

சரணம்
********
மானம் பெரிதென எண்ணி வாழ்க்கை நடத்து
தடையா யாரெனும் வந்தா மீசைய முறுக்கு
தலைய நிமிர்ந்து எங்கும் போடா
தமிழன் உலகை ஆள்வான் வாடா 
தனக்கென ஏதேனும் நேர்ந்த பொறுமையா இருடா தன்மானம் போக நேர்ந்தா தகர்த்து நீபோடா போடா போடா

சரணம்
********
உனக்கு நிகரென நீதான் எண்ணி பாரு
காற்றை கையால் தடுப்பவன் இங்கே யாரு
தடையா வந்தா அதட்டி கூறு
பதுங்கி பாயும் புலியா மாறு
அடிமையா வாழ்வது போதும் பொங்கி எழுடா ஆகாயம் நமக்கு எல்லாம் மேலே நீபோடா போடா போடா

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...