Thursday, January 30, 2020

சொர்க்கலோகமாகுமே....!

இந்த உலகத்தில் அற்புதமான படைப்பு யாருன்னா 
அது மனுஷன்தாங்க..
அதிலும் மிக மிக அற்புதமான படைப்புகள்   யாருன்னா 
தனது எண்ணத்தை அழகாக வைத்திருக்கும் மனிதர்கள்தாங்க..

நல்லதைக் காணதானே  கண்கள்  
நல்லவற்றைக் கண்ட கண்கள் தீயவற்றைக் 
காணாமல் இருப்பதில்லை தீயவற்றைக் கண்டு 
அவ்வாறான தீயவை நிகிழ்ந்திடாமல் நீயுன் 
வாழ்வை அமைத்துக்கொள்ள தானே கண்களால் 
தீயவற்றையும் காண்கின்றாய்.. 

காதுகள் நம்மிடம் உண்டு இரண்டு 
நல்லவற்றையெல்லாம் கேட்க ஒன்றில் 
தீயவைக் கேட்பின் விட்டுவிட மற்றொண்றில்  

நாக்கு தந்தான் பல்சுவையுணர நாவால் 
நல்லதை எப்போதும் பேசி பழக -நல்ல 
இன்சொற்களை பேசி  இன்புற ஒருபோதும்
தீய வாக்கு சொல்லாமல் இருக்க 

கைகளிரண்டும் கால்களிரண்டும் உண்டு  
உழைத்து வாழவேண்டும் என்பதற்கு 
பிறர் உழைப்பில் வாழாதிருக்க 
பிறருக்கு உதவி கரம் நீட்ட 

அறிய மூளையும் நமக்கு உண்டு 
நாம் படைத்த அல்ப கணினியைவிட எத்தனையோ 
எத்தனையோ மடங்கு சக்திவாய்ந்தது 
அதை நாம் யுக்தியாய் பயன்படுத்த 
நம்மை நாம் வாழ்வில் ஏற்றிக் கொள்ளலாம் 
பிறர்க்கும் வாழ வழி காட்டலாம்  

இப்படியே மனிதன் வாழ நினைத்தால் 
தீய எண்ணங்கள் ஒருபோதும் நம்மை நாடாது 
தூய மனிதர்கள் நடமாடிடும் உலகு பின் 
சொர்க லோக மாகுமே...!

விவசா(யி)(யம்) V 0.4



நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின

விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடத்தில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலோ கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை

சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுக்கே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணக்கூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நான்காயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேணவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்

பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழிற்சாலைகள்.....

நிலத்தை விற்று பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி
தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது

Windowsஐ'யும் Vistaவை'யும் உண்ண முடியாது

மதுவை மட்டும் தாகத்திற்கு குடிக்க முடியாது

பசிக்காதது போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.

நாம்  'அனைவரும் விவசாய குடும்பத்தில் இருந்தோ அதன் சார்பு தொழிலிலிருந்தோ வந்திருப்போம் உண்மை தானே...
சிந்தியுங்கள் மக்களே!

Monday, January 27, 2020

எழுந்து வாடா

குட்ட குட்ட குனிஞ்சது போதும்
தட்ட தட்ட தணிஞ்சது போதும்
எழுந்து எழுந்து வாடா
விழுந்தா விதையா போடா
வேளை வருமென இறங்கி செய்வோம் வாடா வாடா
நாளை நமக்கென இருக்கு வெல்வோம் வாடா வாடா

சரணம்
********
மானம் பெரிதென எண்ணி வாழ்க்கை நடத்து
தடையா யாரெனும் வந்தா மீசைய முறுக்கு
தலைய நிமிர்ந்து எங்கும் போடா
தமிழன் உலகை ஆள்வான் வாடா 
தனக்கென ஏதேனும் நேர்ந்த பொறுமையா இருடா தன்மானம் போக நேர்ந்தா தகர்த்து நீபோடா போடா போடா

சரணம்
********
உனக்கு நிகரென நீதான் எண்ணி பாரு
காற்றை கையால் தடுப்பவன் இங்கே யாரு
தடையா வந்தா அதட்டி கூறு
பதுங்கி பாயும் புலியா மாறு
அடிமையா வாழ்வது போதும் பொங்கி எழுடா ஆகாயம் நமக்கு எல்லாம் மேலே நீபோடா போடா போடா

Friday, January 17, 2020

காதல் பாடல்#59

கண்கள் பார்ப்பது உந்தன் அழகைதான்
செவிகள் கேட்பது உந்தன் புகழைதான்
சுவாசம் விடுவதோ உந்தன் காற்றைதான்
நா சொல்வதோ உந்தன்  பெயரைதான்
சரணம்
********
நெஞ்சம் இருப்பதே உன்னை கோர்க்கத்தான்
மஞ்சம் கொள்வதே உன்னை ஈர்க்கத்தான்
கைகள் தேடுதே உன்னை சேர்க்கத்தான்
விரல்கள் தீண்டுதே உன்னை கற்கத்தான்.
அன்பே... இப்படி இருக்க இருக்க
என் அகம் மலருதே உன் முகம் மலரதான்....
சரணம்
********
இடைகள் நெளிவதே உன்னை இறுக்கதான்
நடைகள் நடப்பதே உன்னை நெருங்கத்தான்
உடைகள் ஒளியுதே உன்னை நொறுக்கத்தான்
தடைகள் போகுதே எல்லை மீறத்தான்
அன்பே... இப்படி நடக்க நடக்க
என் உயிர் தேடுதே உன் உடலை சேரத்தான்...

Tuesday, January 14, 2020

தை வாழ்த்து

மகள்தை பிறந்தாள்
நல்வழிஅதை காட்டுவாள்

துன்பத்தை போக்குவாள்
இன்பத்தை பகிர்வாள்

பயத்தை நீக்குவாள்
தைரியத்தை ஏற்றுவாள்

சோம்பேறிதனத்தை விரட்டுவாள்
ஊக்கத்தை வரவேற்பாள்

ஆதங்கத்தை தூற்றுவாள்
பாரம்பரியத்தை போற்றுவாள்

கோபத்தை பிரிப்பாள்
செல்வத்தை சேர்ப்பாள்

தலைகணத்தை தளர்ப்பாள்
மனிதநேயத்தை வளர்ப்பாள்

துரோகத்தை மறப்பாள்
நட்புகரத்தை நீட்டுவாள்

கெட்டதை தடுப்பாள்
நல்லதை கொடுப்பாள்

வருத்தத்தை ஒழிப்பாள்
நலத்தை கூட்டுவாள்

தைப்பொங்கல் வாழ்த்துகள்

Monday, January 13, 2020

Bogi


நம் வணிகர்கள்




என் மனதிற்கும் அறிவிற்கும் எட்டிய செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் 
இப்போ நாம ஒரு இடத்துல வசிக்கிறோம்னு வச்சிக்கோங்களேன்
வேலைக்கு போய்ட்டு தினம் வரோம்
நம்ம இடத்துல வணிகம் செய்ய சிலர் பெட்டிக்கடை அல்லது மளிகை கடை
வைப்பாங்க
கடை வைக்குற ஆள் வேறுயாரும் இல்ல நம்ம இடம் சார்ந்த நம்ம சகோதர சகோதரியை இருப்பாங்க இல்லையா
அவங்களுக்கு தெரிஞ்சதே வணிகமாத்தான் இருக்கும்
நாம அதாவது நாம எல்லோரும் வாங்க கூடிய ஒன்று இரண்டு பொருட்கள் தான் அவர்களின் வருவாய்
ஆனா நாம என்ன பண்ணுவோம் வேலை முடித்து விட்டு வரும் பொழுது அல்லது பொருட்கள் வாங்குவதற்காகவே வேண்டிய எடுத்துக்கிட்டு நூறு ரூபாய் பெட்ரோல் போட்டு பெரிய வணிகர்கள் கிட்ட போய் வாங்குவோம்..
அந்த போயிட்டு வர செலவை நம்ம தெரு வணிகர்கள்கிட்ட தர மாட்டோம்..
இன்னொன்னு பெரிய வணிகர்களிடம் வணிகம் செய்ய அதற்கென்று வாடிக்கையாளர்கள் கண்டிப்பா இருப்பாங்க.
அதேபோல் இணையதள வர்த்தகம் இன்னொரு பெரிய ஆபத்து. ஏற்கனவே இருக்கிற சிறு குறு தொழில் செய்வோர் என்ன பண்றதுனே தெரிய நிற்கும் சூழலில் இது தேவையா னு கண்டிப்பா யோசிக்கணும். முற்றிலும் வேண்டாம்னு சொல்லல தேவைப்பட பயன்படுத்தினால் போதும். மற்றபடி  நம் வீதியில் இருக்கும் நம் வணிகர்களிடம் வணிகம் செய்வோம், அவர்களின் வாழ்க்கைக்கு காய் கொடுப்போம். நாம் ஒவ்வொரு பொருட்களின் மீது தரும் அந்த ஒரு ரூபாய் தான் அவர்களின் வருமானம். வீதியில் இல்லையா அடுத்த தெரு அல்லது அடுத்த தெரு என்று நாம் வசிக்கும் இடம் வணிகம் செய்ய வீதி முன்னேற ஊர் முன்னேறும் ஊர் முன்னேற நாடு முன்னேறும்.
என்ன இந்த கருத்து உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க subscribe பண்ணுங்கன்னு சொல்ல மாட்டேன்
என்ன மேல் சொன்னதை முடிந்தவரையில் செய்வோமா...!
நன்றி!

Friday, January 10, 2020

விவசா(யி)(யம்) V 0.3



நட்ட பயிர் வாட
கொண்ட உயிர் வாட

நிற்பான் அவரே விவசாயி!

Tuesday, January 7, 2020

விவசா(யி)(யம்) V 0.2


நாம் வாழ நிற்காது
சுழன்று கொண்டிருக்கிறது
பூமி..

அதுபோல்

நாம் வாழ காலமும்
உழன்று கொண்டிருக்கிறான்
உழவன்..!

பூமித்தாயின் புதல்வன் உழவன்..!!

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...