Thursday, December 26, 2019

விவசா(யி)(யம்) V 0.1


ஆயிரம் கடவுள்கள்
         இருக்கலாம்..
ஆனால் நமக்கு
         உணவளிக்கும் அம்மா முதல் கடவுளே...
அப்படி என்றால் உலகிற்கே உணவு அளக்கும்
விவசாயி கடவுளின் கடவுளன்றோ....

Monday, December 23, 2019

வாங்க முடியுமா?

பணம் இருந்த உலகத்துல எதையும் வாங்கலாம்
ஆனா நெனச்சாலும் வாங்க முடியாதது இருகுதையா
அதை ஒன்னொன்னா சொல்ல போறேன் கேளையா

வாங்க முடியுமா நீங்க வாங்க முடியுமா
நெனச்சாலும் இத வாங்க முடியுமா ?

பெத்தெடுத்து உதிரம் பாலாக்கி
பாராட்டி சீராட்டி உன்னை
வளர்க்கும் அன்னையை (வாங்க)

ராப்பகல்பாராது உதிரம் வியர்வையாக்கி
ஏரோட்டி வண்டியோட்டி உன்னை
காக்கும் தந்தையை (வாங்க)

என்னவென்று கேளாது உதவியென்று
கேட்டாலோ அழைத்தாலோ உன்னை
சூழும் உயர்நட்ப்பை (வாங்க)

ஏணியாக என்றும் மாணாக்கனை
நின்ற இடத்திலேயே ஏற்றிவிடும்
ஆசான் ஊக்கத்தை (வாங்க)

ஓடும்காலத்தை விரட்டி உனதாக்கி
தேவையை செய்திடு இல்லை
வீணாகும் நேரத்தை (வாங்க)

காமம்கடந்து உள்ளம் உனதாகி
உயிராய் உறவாய் மாறும்
தூய்மை காதலை (வாங்க)

உண்ண உடுக்க வழியில்லை
இருந்தும் வாட்டும் ஏழ்மையிலும்
காட்டும் நேர்மையை (வாங்க)

உலகமே புகழலாம் உச்சம்
அடையலாம் உயர்வில் பிறரை
மதிக்கும் எண்ணத்தை (வாங்க)

தவறுதலால் தப்புகள் நடந்தாலும்
துரோகம் நிகழ்ந்தாலும் அதைமறந்து
செய்யும் மன்னிப்பை (வாங்க)

இதையெல்லாம் இருக்கிறவர்களை பாரு
இவர்களால்தான் இன்றும் வாழுது ஊரு 

உன்னால் முடியும்

உன்னால் முடியும் ஏ ஏ உன்னால் முடியும்
முயன்று பாரு ஏ ஏ உன்னால் முடியும்
அச்சம் என்ன நீ விட துச்சம் தானே
உச்சம் என்ன நீ தொட மிச்சம் தானே
சரணம்
++++++++
ஒருநாள் வாழும் ஈசல் கூட பறந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
இரைகள் தேடி செல்லும் எறும்பு நடந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
மண்ணை முட்டி முளைக்கும் விதை வெடித்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
கொட்டும் அருவி நிதானம் கொண்டு எழுந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
வெட்டும் வாழை மீண்டும் மீண்டும் உயர சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
இன்னும் என்ன தெளிவாய் மனிதா உன்னால் தானே ஒளிர்வாய் மனிதா.....
சரணம்
+++++++
முட்டும் சுவாசம் முயன்று இழுக்க உயிரே சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
தட்டும் கால்கள் எட்டி உதைக்க தகர்த்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
வெட்டும் நகமோ நம்மை பார்த்து வளர்ந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
கொட்டும் தலையோ குனிந்தது போதும் நிமிர்ந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
சொட்டும் உதிரம் உடம்பில் மீண்டும் உறைந்து சொல்லும் ஏ ஏ உன்னால் முடியும்
இன்னும் என்ன தெளிவாய் மனிதா உன்னால் தானே ஒளிர்வாய் மனிதா.....

Wednesday, December 18, 2019

அவளும் இயற்கையும் நானும்

அவள் ஒரு நீலவானம்
அவளை பெருமை படுத்தி வெண்ணாடை போர்த்தும் வெண்மேகம் நான்.

அவள் ஒரு நிலா
அவளை அழகாய் ரசிக்கும் நிலம் நான்.

அவள் ஒரு நட்சத்திரம்
அவளை ஜொலிக்க உச்சம் கொண்டு சென்ற மிச்சம் நான்.

அவள் ஒரு மின்னல்
அவளை பளிச்சிட மின்ன வைக்கும் ஒளி நான்.

அவள் ஒரு வானவில்
அவளை வளைத்து ஏந்தும் இருகரம் நான்.

அவள் ஒரு பறவை
அவளை உயர தூக்கி செல்லும் காற்று நான்.

அவள் ஒரு கடல்
அவளை தேடி ஓடும் நதி நான்.

அவள் ஒரு நீர்
அவளை பெருக்கெடுத்து ஓட செய்யும் ஊற்று நான்.

அவள் ஒரு படகு
அவளை பம்பரமாய் சுழற்றும் சுழல் நான்.

அவள் ஒரு மீன்
அவளை நீந்த விட்டு பார்க்கும் கண்கள் நான்.

அவள் ஒரு முத்து
அவளை அடை காக்கும் சிப்பி நான்.

அவள் ஒரு நிலம்
அவளை புஞ்சை ஆக்கும் விதை நான்.

அவள் ஒரு தீ
அவளை கட்டுக்குள் வைத்திருக்கும் மழைசாரல் நான்.

அவள் ஒரு மலர்
அவளை சுற்றி திரியும் வண்டு நான்.

அவள் ஒரு புல்வெளி
அவளை மெருகெற்றும் பச்சை நிறம் நான்.

அவள் ஒரு கனி
அவளை கனிய வைக்கும் இன்சுவை நான்.

அவள் ஒரு விலங்கு
அவளை விலகாது விரட்டி துரத்தும் வேகம் நான்.

அவள் ஒரு பட்டாம்பூச்சி
அவளை சூடும் வண்ணங்கள் நான்.

அவள் ஒரு எறும்பு
அவளை நாளும் தொடரும் சிற்றெறும்பு நான்.

அவள் ஒரு பனித்துளி
அவளை தாங்கும் சிறு புல் நான்.

அவள் ஒரு மூங்கில்
அவளை புல்லாங்குழலாய் மாற்றும் துளை நான்.

அவள் ஒரு மரம்
அவளை தாங்கும் ஆணிவேர் நான்.

அவள் ஒரு செடிகொடி
அவளை வளைய வளைய வரவேற்கும் கொடிமரம் நான்.

அவள் ஒரு இலை
அவளை ஆயுள் கொள்ள செய்யும் இலைரேகை நான்.

அவள் ஒரு மலை
அவளை அன்பால் நனைத்து பொழிந்திடும் அருவி நான்.

அவள் ஒரு காடு
அவளை மரம் செடிகொடிகளால் சூழ்ந்த இயற்கை நான்.

அவள் ஒரு புதையல்
அவளை தோண்டி தேடதேட கிடைக்கும் குவியல் நான்.

Friday, December 6, 2019

இது ஒரு பாடம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ஆம் சுதந்திரம் பெற பாரதி பாடினான்
பல போராட்டத்திற்கு பிறகு அடைந்தோம் சுதந்திரத்தை
இந்த சுதந்திர நாட்டில் இன்று பாட தோன்றுகிறது
என்று தணியும் இந்த பெண்கள் மீது நடக்கும் வன்முறை தாக்கம்
சுதந்திரம் இல்லாத சுதந்திரத்தை அடைந்திருக்கிறோம்

இன்னும் எத்தனை எத்தனை நடக்கபோகிறதோ
சிறுமி முதல் கிழவி வரை காம பசிக்கு இரையாகி கொண்டிருக்கிறார்கள்
அப்படி என்ன ...
உங்களுடைய அம்மா தங்கை அக்காள் பாட்டி யாவரும் பெண்கள்தானே
நமது சமுதாயம் உறவுகளால் பின்னப்பட்டவை
உறவுகளை அறியவில்லையா இல்லை உணர்வே இல்லையா
ஆண் பெண் இருவருக்குமே எல்லைகள் உண்டு
ஒருவர் இன்னொருவர் எல்லையை மீறுவது குற்றமே...!
அப்படி மீறினால் நீங்கள் செய்ய வேண்டியது (இருபாலாருமே)

கண்களால் சூறையாட நினைத்தால் கண்களை பிதுக்கி எறி
கைகளால் தொட நினைத்தால் கைகளை உடைத்து எறி
விரல்களால் தீண்ட நினைத்தால் விரல்களை பிடுங்கி எறி
வாயால் பேச நினைத்தால் வாயை கிழித்து எறி
கால்களால் உதைக்க நினைத்தால் கால்களை முறித்து எறி
உடலை உரச நினைத்தால் உடலை நசுக்கி எறி
இப்படி
பிறப்புறுப்பை அணுக நினைத்தால் உறுப்பை அறுத்து எறி

ஒன்றை மட்டும் நினைவில் கொள்
உன்னை மீறி உனக்கு ஏதும் நிகழ்ந்து விடாது
உனக்கு நடப்பவை யாவும் உன்னாலே...

உடையிலும் சரி நடையிலும் சரி
ஆணும் பெண்ணும் சமமே
ஆண் ஆணாக இருக்கட்டும் பெண் பெண்ணாக இருக்கட்டும்
நவீனம் என்பது தேவைக்காகவே...

இதை நடைமுறை படுத்தினால் நிச்சயம் மாற்றம் நிகழும்!

தங்கை பிரியங்கா வரை  நேர்ந்த கொடுமைக்கு இதோ முற்று புள்ளி வைத்த காவலர்களுக்கு நன்றி
நான்கு கயவர்களை சுட்டு வீழ்த்தி இதோ அதிசயம் அற்புதம் நடந்திருக்கிறது

இது ஒரு பாடம்.

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...