Wednesday, January 16, 2019

சீறி வரும் காளை

சீறி வரும் காளை காளை கொம்பு சீவி விட்ட காளை காளை.
ஏறு தழுவும் காளை காளை தொம்பு ஏற தழுவும் காளை காளை.
அன்புனு வந்துபுட்டா நன்றினு சொல்லி நிக்கும்
வம்புனு வந்துபுட்டா முட்டியே தள்ளி வீசும்.
இது எட்டிப்பாயும் ஆள இது கட்டுக்கடங்கா காள
இது எங்க ஊரு காள இது உடன் பிறப்பு போல
சரணம்
**********
ஓடி அதனோடு விளையாட்டு அதில் எழுந்திடும் வீரம் நீகாட்டு
ஏறு தன்னில் அதைப்பூட்டு வரும் விளைச்சல் கொண்டு களிப்பூட்டு
வீட்டில் அவனொரு பிள்ளை அவனால் உண்டிங்கோ தொல்லை.
உழைப்பில் அவனொரு உழைப்பாளி அவனால் மகிழ்வான் பிழைப்பாளி
சரணம்
*********
திமிர் பிடித்த தமிழன்நாடு  அவன் காளையின் திமிலிலும் அதப்பாரு
தமிழ் படித்த கையோடு ஊர் வியக்கவே எங்கும் நடைப்போடு
சீண்டிப் பார்த்திட செல்லாக்காசில்ல சீறிப்பாயும் காளையாய் சிகரம்பாய்வோம்
மானம் காத்திட துணிந்திடுவோம் அவமானம் செஞ்சா கருவருப்போம்

1 comment:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...