Saturday, January 5, 2019

நம்பிக்கை பாடல்

போகிற போக்கில் வாழ்வது எல்லாம் வாழ்க்கையா
போனால் போகட்டும் என்று இருப்பதும் வாழ்க்கையா
ஆறாவதாக படைத்தான் அறிவை எதற்கு யோசியா
ஆகுமே உன்னால் என்பதை ஆராய்ந்து சுவாசியா
தடைகள் கால்தூசியா தகர்த்து கைகள்தாளம் வாசியா
சரணம்
++++++++
குட்ட குட்ட குனிஞ்சது போதும்
திட்ட திட்ட வாங்கினது போதும்
எட்ட எட்ட பார்த்தது போதும்
விட்ட விட்ட மனம்தான் போதும்
சூடு சுரணை உனக்கு இல்லையா
மானம் ரோசம் எதற்கும் வரலையா
உன்னை நீ நம்பாது யாரை நீ நம்பியும் அதுவீண்ணய்யா 
சரணம்
+++++++
விரட்ட விரட்ட ஏமாந்தது போதும்
அதட்ட அதட்ட அதிகாரம் போதும்
வாட்ட வாட்ட வாடினது போதும்
சொட்ட சொட்ட கண்ணீர்தான் போதும்
திரும்பி அடித்தால் அவனுக்கும் வலிக்கும்யா
மாற்றி யோசித்தால் தைரியம் பலிக்கும்யா
உன்னை நீ முன்னே நிறுத்து நீ நம்பும் உன்னைஜலித்துயா

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...