Monday, January 14, 2019

தை தை தை வருக

தை தை தை தையென மாதம்
பிறந்து விட்டாள் 
கை கை கை கையென வழியை
காட்டி விட்டாள் 
போ போ போ போவென பழையதை விரட்டி விட்டாள்
வா வா வா வாவென புதுமைகளை வரவேற்று விட்டாள்
சரணம்
***********
நெய் நெய் நெய் நெய்யென பொங்கல் மணக்குதுங்கோ
செய் செய் செய் செய்யென மனமோ துடிக்குதுங்கோ
பொய் பொய் பொய் பொய்யென நம்மில் போகுதுங்கோ
மெய் மெய் மெய் மெய்யென வாழ்ந்திட தோணுதுங்கோ
வரும் காலம் வசந்தம் ஆகுமுங்கோ
தரும் பயன்கள் பலநூறு சேருமுங்கோ
சரணம்
**********
விறு விறு விறு விறுவென புத்துணர்ச்சி ஏறுதுங்கோ
சுறு சுறு சுறு சுறுவென சுறுசுறுப்பு கூடுதுங்கோ
எரு எரு எரு எருதுகள் பாய்ந்து சீறுதுங்கோ
புது புது புது புதுமை முயற்சிகள் தொடங்குதுங்கோ
இனிய பயணம் நம்மில் சேருதுங்கோ
வரும் அனைத்து காரியமும் வெற்றிதானுங்கோ.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...