Monday, January 14, 2019

விவசாயி பற்றி பாடல்

வானம் பார்த்து வாழும் சாமி
உலகம் பார்த்து வியக்கும் சாமி 
கோவில் இல்லாம சாமியாய் நடமாடும் சாமி
கோவிலில் இருக்கும் சாமிகளும் போற்றிடும் சாமி
எங்க விவசாயி உயிரை காக்கும் குலசாமி எங்க விவசாயி.
 
சரணம்
**********
வானம் மழை பார்த்தே தலை நிமிர்ந்து நடப்பான்.
நிலம் பயிர் பார்த்தே தலை வணங்கி நிற்ப்பான்
யாருக்கும் அடி பணிய மாட்டான்.
மலடாய் போன மண்ணை உழுது தாய்யாய் காப்பான்
விளையும் பொன் பூமிதனை தொழுது சேய்யாய் பார்ப்பான்.
தாய்யாய் சேய்யாக இருப்பான்.
எங்க விவசாயி உயிரை காக்கும் குலசாமி எங்க விவசாயி.

சரணம்
**********

இரவு பகல் பாராது சேற்றில் கால் பதிப்பான்
வாழை இலை உணவு நாம்உண்ண அவனோ உழைப்பான்
உழைப்பில் சிகரம் ஆனவன்.
மழை உடன் அவனது வியர்வை துளி சேர்ப்பான்
உரமாக கரைந்து பயிர்கள் உயிரை காப்பான். 
மனிதரில் மா மனிதனாவான்.
எங்க விவசாயி உயிரை காக்கும் குலசாமி எங்க விவசாயி.


No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...