நாம் நினைத்தால் உடன்நிகழ்த்துவார்
நாம் நடந்தால் வழிநடத்துவார்
எதையும் அறிந்தவர் நம் தேவன்
என்றும் காப்பவர் நம் தேவன்
எதிலும் வல்லவர் நம் தேவன்
எங்கும் நிறைந்தவர் நம் தேவன்
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நாம் காண காட்சிகளாய் விரிந்திடுவார்
நாம் பேச வார்த்தைகளாய் விழுந்திடுவார்
சுவாசிக்க காற்றாய் வாசிக்க வசனங்களாய்
நேசிக்க அன்பாய் புசிக்க அப்பங்களாய்
என்றும் எங்கும் எதிலும் இருப்பவர் நம் தேவன்
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நாம் பாட சுவரங்களாய் சேர்ந்திடுவார்
நாம் வாட கரங்களால் தேற்றிடுவார்
அசைக்க நகர்வுகளாய் இசைக்க கருவிகளாய்
நாடிட அற்புதங்களாய் தேடிட முடிவுகளாய்
என்றும் எங்கும் எதிலும் இருப்பவர் நம் தேவன்
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நாம் விழுந்திட மடிதனை தந்திடுவார்
நாம் எழுந்திட படித்தனை காட்டிடுவார்
சிந்திக்க பகுதிகளாய் சந்திக்க தகுதிகளாய்
சோதிக்க அறிவியலாய் சாதிக்க சரித்திரங்களாய்
என்றும் எங்கும் எதிலும் இருப்பவர் நம் தேவன்
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
No comments:
Post a Comment