பற்றிக்கொள் இயேசுவின்
கரம்தனைஇறுக பற்றிக்கொள்
சுற்றிக்கொள் இயேசுவின்
இரத்தக்கோட்டைக்குள் சுற்றிக்கொள்
ஆற்றுவார் தேற்றுவார் பாதுகாப்பார்
என்றும் அவர் நம்மை கைவிடமாட்டார்!
நாம் நடக்கும் பாதையெல்லாம்
நீர் வகுத்து தந்ததுதானே
இடர் கடக்கும் போதெல்லாம்
கரம் பிடித்த தந்தையும்தானே
சற்று தடுமாறும் வேளையிலும் நம்மை
உற்று உருமாற்றம் செய்பவரே
ஆற்றுவார் தேற்றுவார் பாதுகாப்பார்
என்றும் அவர் நம்மை கைவிடமாட்டார்!
நாம் பார்க்கும் நோய்களெல்லாம்
உம் வசனம் குணமாகுமய்யா
பலன் இழக்கும் நேரமெல்லாம்
நம் விசுவாசம் திடமாக்குமாய்யா
சோர்வு சூழ்ந்திடும் வேளையிலும் நம்மை
தீர்வுடன் சூழ்ந்திட செய்பவரே
ஆற்றுவார் தேற்றுவார் பாதுகாப்பார்
என்றும் அவர் நம்மை கைவிடமாட்டார்!
No comments:
Post a Comment