Wednesday, May 13, 2020

திருக்குறள் அதிகாரம் - மருந்து V 2.0

திருக்குறள்
அதிகாரம் - மருந்து V 2.0
**********************

நியதி மீறும்போது நம்முள் வருமந்த
வியாதி சொல்லும் நியதி.

நோயென்பது நோயெல்ல நோக்கினால் நோயென்பது
தேவையில்லா மெனக்கெடல் மனக்கெடலே.

பசித்துப்புசி பின்ருசித்து நொறுங்க விழுங்கிட
பார்ப்போம் நோயற்ற வாழ்வு.

கையெடுத்து கும்பிட்டு கைக்கழுவிட வரும்நோய்
கையெடுத்து கும்பிட்டு ஓடும்.

இடைவெளி இல்லாவுறவு ஓர்நாள் நோயாகும்
இடைவெளியே அதற்கு தீர்வாகும்.

உடலுழைப்பு இருக்குமாயின் உணவே மருந்து
இருந்துகொண்டு உழைத்தால் மருந்தேஉணவு.

வயிற்ருக்கு உழைத்தவரை வந்ததில்லை நோயின்தொல்லை
வசதிக்காய் வாழும்போது நோயேயெல்லை.

அளவறிந்து உண்கையில் அளவில்லா சொர்க்கம்
அளவுமீற நோயிடும் தர்க்கம்.

நோய்நாடி அக்கணம் முதல்நாடி செயல்பட்டால்
நோய்நொடி சேராது வாழ்க்கை.

அயராமல் உழை ஆராய்ந்து உண்
அயர்ந்து தூங்கு நல்வாழ்க்கை.


No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...