Wednesday, May 13, 2020

திருக்குறள் அதிகாரம் - கொரோனா

திருக்குறள்
அதிகாரம் - கொரோனா
*************************

மூன்றாம் உலகப்போர் நடக்குமிடம் உலகம்
நடக்கும் முறை கண்ணாமூச்சி.

தொடுகையில் தொற்றும் படுகையில் பற்றும்
விலகி யிருத்தலே விலக்கும்.

ஊர்கள் அடங்கியது தொழில்கள் முடங்கியது
பாடம் கற்பித்தது கொரோனா.

கடவுளவர் மறைவார் காவலர் மருத்துவர்
தூய்மையாளர் நம்மவர் கடவுளாவர்.

சுத்தம் பேணவும் சட்டம் மதிக்கவும்
சட்டம் இயற்றியது கொரோனா.

கண்களுக்கு தெரியாது கண்களில் விரல்விட்டு
களேபரம் செய்கின்றது கொரோனா.

பணம் பதவி பதக்கம் மறந்தது
பசியாதென உணர்த்தியது கொரோனா.

அயல்நாடு மோகம் அடியோடு போச்சு
நம்நாடே சிறப்பென ஆச்சு.

மெய்ஞானம் விஞ்ஞானம் அஞ்ஞானம் இஞ்ஞானம்
கொரோனாவிடம் எந்ஞானமும் தோற்றது.

ஆட்டம்பாட்டம் தம்பட்டம் நிறுத்தம் இயற்கையில்
திருத்தம் செய்தது கொரோனா.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...