Friday, May 22, 2020

அன்னையர் தின கவிதை போட்டி

அன்னையர் தின கவிதை போட்டி
*************************************
பலரும் பலவிதமாய்
தன் அன்னைக்கு வாழ்த்துக்களை
கவிதைகள் தெரிவித்தது கொண்டிருக்க

நான்...
உனக்காய் ஆயிரம் ஆயிரம்
கவிகள் எழுத முற்பட்டேன் 
மனம் நிறையவில்லை,
என் அன்னையை மேடைக்கு
அழைத்து சென்று அவள்
உச்சந்தலையில் ஒற்றை முத்தத்தை
பதித்துவிட அவள் மட்டுமல்ல
உலகமே அசந்து போனது..!

Sunday, May 17, 2020

என்னவள்...


வாழ பழகி கொள்(ல்)வோம் வா!

வாழ பழகி கொள்(ல்)வோம் வா!
**********************************
நம்மிடையே சுயநலம் பெறுக, வாழ பழகி கொண்டோம்
நாமகிடையே மனிதம் மறைய, வாழ பழகி கொண்டோம்
தாய்மொழியை எங்கே என தேடி, வாழ பழகி கொண்டோம்
வீணாய் போன ஜாதிக்குள் ஒளிந்து, வாழ பழகி கொண்டோம்
ஊழல் அது நடக்க பார்க்க, வாழ பழகி கொண்டோம்
அரசியல் அதை மறைக்க, வாழ பழகி கொண்டோம்
குட்ட குட்ட குனிந்தும், வாழ பழகி கொண்டோம்
வறியோரை அடித்தும், வாழ பழகி கொண்டோம்
எளியோரை மிரட்டியும், வாழ பழகி கொண்டோம்
செல்வந்தரை புகழ்ந்து பேசி, வாழ பழகி கொண்டோம்
வந்தோரை வாழ வைத்தே, வாழ பழகி கொண்டோம்
உற்றாரை உதாசீனப்படுத்தியே, வாழ பழகி கொண்டோம்
உடலுக்கு மது கொடுத்தே, வாழ பழகி கொண்டோம்
பிறருக்கு ஊற்றி கொடுத்தே, வாழ பழகி கொண்டோம்
கூட்டி கொடுத்தே, வாழ பழகி கொண்டோம்
பிறரை காட்டி கொடுத்தே, வாழ பழகி கொண்டோம்
காரியத்திற்காக காலில் விழுந்தே, வாழ பழகி கொண்டோம்
பிறர் காலை வாரியே காரியம் சாதித்து, வாழ பழகி கொண்டோம்
இலவசம் கிடைக்க பெற்று, வாழ பழகி கொண்டோம்
பிறர்வசம் கொடுத்தும், வாழ பழகி கொண்டோம்
ஓட்டுக்கு கையூட்டு பெற்று, வாழ பழகி கொண்டோம்
அனைத்திற்கும் வரி கட்டியே, வாழ பழகி கொண்டோம் 
ஈத்தேன்மீத்தேன் ம்ம், வாழ பழகி கொண்டோம்
மணல்,வளம் சுரண்டல் ம்ம், வாழ பழகி கொண்டோம்
பணமதிப்பு இழப்பு,வாழ பழகி கொண்டோம்
பெட்ரோல் மின் விலைஉயர்வு, வாழ பழகி கொண்டோம்
தங்கம் ஒரு கண்கட்டி வித்தை, வாழ பழகி கொண்டோம்
சுங்கச்சாவடி கட்டண உயர்வு, வாழ பழகி கொண்டோம்
கூடங்குளம் ஸ்டெரிலைட், வாழ பழகி கொண்டோம்
நடிப்பதோ தொழில், அவர்களுக்காய் நம் கடமை மறந்தும், வாழ பழகி கொண்டோம்
ஐசிசி ஐபிஎல் பார்த்தே நேரம் வீணாக்க, வாழ பழகி கொண்டோம் 
பல நோய்களுக்கு மருந்து ஒரு வணிகம், வாழ பழகி கொண்டோம்
இன்று கொரோனா, வாழ பழகி கொள்வொம்
அதன் காரணமாய்...
அனைத்திலும் தனியார்மய அறிவிப்பு, வாழ பழகி கொள்வொம்

இன்னும் இன்னும் ....

வாழ பழகி கொள்வது என்ன நமக்கு புதிதா ?

வாழ பழகி கொண்டோம்..
நாளையும் கொள்வொம்..
ஆனால் கொல்வோமா?


Wednesday, May 13, 2020

திருக்குறள் அதிகாரம் - கொரோனா

திருக்குறள்
அதிகாரம் - கொரோனா
*************************

மூன்றாம் உலகப்போர் நடக்குமிடம் உலகம்
நடக்கும் முறை கண்ணாமூச்சி.

தொடுகையில் தொற்றும் படுகையில் பற்றும்
விலகி யிருத்தலே விலக்கும்.

ஊர்கள் அடங்கியது தொழில்கள் முடங்கியது
பாடம் கற்பித்தது கொரோனா.

கடவுளவர் மறைவார் காவலர் மருத்துவர்
தூய்மையாளர் நம்மவர் கடவுளாவர்.

சுத்தம் பேணவும் சட்டம் மதிக்கவும்
சட்டம் இயற்றியது கொரோனா.

கண்களுக்கு தெரியாது கண்களில் விரல்விட்டு
களேபரம் செய்கின்றது கொரோனா.

பணம் பதவி பதக்கம் மறந்தது
பசியாதென உணர்த்தியது கொரோனா.

அயல்நாடு மோகம் அடியோடு போச்சு
நம்நாடே சிறப்பென ஆச்சு.

மெய்ஞானம் விஞ்ஞானம் அஞ்ஞானம் இஞ்ஞானம்
கொரோனாவிடம் எந்ஞானமும் தோற்றது.

ஆட்டம்பாட்டம் தம்பட்டம் நிறுத்தம் இயற்கையில்
திருத்தம் செய்தது கொரோனா.

திருக்குறள் அதிகாரம் - மருந்து V 2.0

திருக்குறள்
அதிகாரம் - மருந்து V 2.0
**********************

நியதி மீறும்போது நம்முள் வருமந்த
வியாதி சொல்லும் நியதி.

நோயென்பது நோயெல்ல நோக்கினால் நோயென்பது
தேவையில்லா மெனக்கெடல் மனக்கெடலே.

பசித்துப்புசி பின்ருசித்து நொறுங்க விழுங்கிட
பார்ப்போம் நோயற்ற வாழ்வு.

கையெடுத்து கும்பிட்டு கைக்கழுவிட வரும்நோய்
கையெடுத்து கும்பிட்டு ஓடும்.

இடைவெளி இல்லாவுறவு ஓர்நாள் நோயாகும்
இடைவெளியே அதற்கு தீர்வாகும்.

உடலுழைப்பு இருக்குமாயின் உணவே மருந்து
இருந்துகொண்டு உழைத்தால் மருந்தேஉணவு.

வயிற்ருக்கு உழைத்தவரை வந்ததில்லை நோயின்தொல்லை
வசதிக்காய் வாழும்போது நோயேயெல்லை.

அளவறிந்து உண்கையில் அளவில்லா சொர்க்கம்
அளவுமீற நோயிடும் தர்க்கம்.

நோய்நாடி அக்கணம் முதல்நாடி செயல்பட்டால்
நோய்நொடி சேராது வாழ்க்கை.

அயராமல் உழை ஆராய்ந்து உண்
அயர்ந்து தூங்கு நல்வாழ்க்கை.


கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...