Sunday, March 22, 2020

கொரோனா

நாடு, மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டது

போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது

தொடர்ஊர்தி விமான சேவை தடைபட்டது

கடைகள் வளாகங்கள் யாவும் அடைக்கப்பட்டது

நூற்றிநாற்பத்திநான்கு பலஇடங்களில் பிறப்பிக்கப்பட்டது

மனிதர்களை வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுரைப்பட்டது

அலுவலகபணிகள் வீட்டிலேயே செய்யப்பட்டது

கடற்கரை சாலைகள் மூடப்பட்டது

கடவுள்கள் தங்களை காத்துக்கொள்ள நடை சாற்றப்பட்டது

ஆனால் வழக்கம் போல் தினமும்..

இரவு பகல் மாறிமாறி வந்தது சென்றது

கதிரவன் உதித்தான் மறைந்தான்

காற்று வீசி வருடி கொண்டிருந்தது

நிலாமுகம் காட்டி சிரித்து சென்றது

காடுமலை பச்சையானது அருவி ஆர்ப்பரித்தன

வனம் வனப்புற்றது விலங்குகள் விலங்கில்லா அலைந்தது

செடிகொடி வளர்து நெளிந்து நின்றது

புழுபூச்சிகள் பறவைகள் பாடி திரிந்தன

வண்ணத்துப்பூச்சி வண்ணங்களை எங்கும் தெளித்தது

ஆடுமாடு நாய்பன்னி இரைகளை தேடி மேய்ந்தது

இப்படி

இயற்கை
இயற்கையாகவே இருக்க

செயற்கைக்கு மாறிவிட்ட மனிதன்
ஆட்டம் கொண்டாட்டம் போட்ட மனிதன்
பணம்பணம் என்று அலைந்த மனிதன்
உலகையே கைகளில் அடக்கிய மனிதன்
உலகையே மிஞ்சிவேன் என மார்தட்டிய மனிதன்

இன்று

கண்களுக்கு தெரியாத கிருமியால்
கண்கள் கலங்கி தனிமையில்
வெட்கி தலைகுனிந்து கிடக்கின்றான்

இயற்கையோ பறவைகளோ
விலங்குகளோ புழுபூச்சுகளோ
நம்மை பார்த்து
சிரித்து கொண்டிருக்கின்றன.!
www.anbe-kadavul.blogspot.com

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...