Thursday, March 19, 2020

கொரோனா

மனிதர்கள் மனிதர்களை பார்த்து பயந்தார்கள்
பேசித் திரிந்தவர்கள் தனித்து சென்றார்கள்
முகங்கள் தெரியாது முகமூடி அணிந்தார்கள்
உறவுகள் என்றாலே உதறி தள்ளினார்கள்
பிள்ளைகள் சதிபதி மாதாபிதா பிரிந்தபடி நின்றார்கள்
எங்கு சென்றாலும் நிற்க வைத்து தொற்று இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள்
எதை தொட்டாலும் தொடும் முன்பு கைகளை கழுவ அறிவுரைக்கிறார்கள்

கல்லூரி வணிக வளாகங்கள் யாவும் மூடப்பட்டன
தேர்வுகள் வியாபாரங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன
பூங்கா விளையாட்டு திடல்கள் ஆளில்லா பார்க்கப்பட்டன
கடற்கரை சுற்றுலா தலங்கள் அரங்குகள் அடைக்கப்பட்டன
போக்குவரத்து நிறுத்தப்பட்டும் நாடுகளுக்குள் எல்லைகள் மூடப்பட்டன
வெறிச்சோடிய சாலைகள் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தை காணப்பட்டன
பல இடங்களில் சுய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டன

அலுவலகங்கள் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடி
அலுவலக வேலை கொடுக்கப்பட்டது

கோயில்கள் அடைக்கப்பட்டு மருத்துவர்கள் சேவகர்கள் கடவுள்களாக போற்றப்பட்டது

இத்தனையும் எதற்காக... இதற்காகவவோ?....?

வல்லரசு என்று மார்தட்டிய நாடுகளுக்கு பாடம் புகட்டவோ?
சாதி மதம் தீண்டாமையென இருந்தவர்களுக்கு தனிமைப்படுத்தி தீண்டாமை கொடியதென உணர்த்தவோ?
கேளிக்கை ஆட்டம் கொண்டாட்டம் என திரிபவர்களுக்கு எச்சரிக்கவோ?
பணம் பகட்டுயென பல தலைக்கனம் பிடித்தவர்களுக்கு இறுதியில் நீ ஒன்றுமில்லை என சொல்லாவோ?
விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் சவுக்கடி கொடுக்கவோ?

கண்ணுக்கு புலப்படாத எதிரியாய் இருந்து
நடத்துகிறது "நவீன யுத்தம்"

இதோ

 "மூன்றாம் உலகப்போர்"

ஆட்ட நாயகனுமாய்
எதிர்க்கும் எதிரியுமாய்

"கொரோனா"

Vs

அனைவரும் தனித்து நின்று ஒன்று சேர்ந்து போராடும்

"உலகமக்கள்"

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...