Thursday, March 26, 2020

நீயும் நானும்

தமிழும் அமுதும் போல்

கம்பரும் கவியும் போல்

பாரதியும் பாட்டும் போல்

வள்ளுவனும் குறளும் போல்

சிவாஜியும் நடிப்பும் போல்

கண்ணதாசனும் தத்துவமும் போல்

கலாமும் ராக்கெட்டும் போல்

ராமனும் இயற்பியலும் போல்

பாப்பையாவும் பட்டிமன்றம் போல்

கவுண்டமணியும் செந்திலும் போல்

இளையராஜாவும் இசையும் போல்

ரகுமானும் விருதும் போல்

கலைஞரும் அரசியலும் போல்

எடப்பாடியும் அதிர்ஷ்டமும் போல்

கூகுலும் தேடலும் போல்

கொரோனாவும் தொற்றும் போல்

......

அன்பே.. நீயும் நானும்😍

Sunday, March 22, 2020

கொரோனா

நாடு, மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டது

போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது

தொடர்ஊர்தி விமான சேவை தடைபட்டது

கடைகள் வளாகங்கள் யாவும் அடைக்கப்பட்டது

நூற்றிநாற்பத்திநான்கு பலஇடங்களில் பிறப்பிக்கப்பட்டது

மனிதர்களை வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுரைப்பட்டது

அலுவலகபணிகள் வீட்டிலேயே செய்யப்பட்டது

கடற்கரை சாலைகள் மூடப்பட்டது

கடவுள்கள் தங்களை காத்துக்கொள்ள நடை சாற்றப்பட்டது

ஆனால் வழக்கம் போல் தினமும்..

இரவு பகல் மாறிமாறி வந்தது சென்றது

கதிரவன் உதித்தான் மறைந்தான்

காற்று வீசி வருடி கொண்டிருந்தது

நிலாமுகம் காட்டி சிரித்து சென்றது

காடுமலை பச்சையானது அருவி ஆர்ப்பரித்தன

வனம் வனப்புற்றது விலங்குகள் விலங்கில்லா அலைந்தது

செடிகொடி வளர்து நெளிந்து நின்றது

புழுபூச்சிகள் பறவைகள் பாடி திரிந்தன

வண்ணத்துப்பூச்சி வண்ணங்களை எங்கும் தெளித்தது

ஆடுமாடு நாய்பன்னி இரைகளை தேடி மேய்ந்தது

இப்படி

இயற்கை
இயற்கையாகவே இருக்க

செயற்கைக்கு மாறிவிட்ட மனிதன்
ஆட்டம் கொண்டாட்டம் போட்ட மனிதன்
பணம்பணம் என்று அலைந்த மனிதன்
உலகையே கைகளில் அடக்கிய மனிதன்
உலகையே மிஞ்சிவேன் என மார்தட்டிய மனிதன்

இன்று

கண்களுக்கு தெரியாத கிருமியால்
கண்கள் கலங்கி தனிமையில்
வெட்கி தலைகுனிந்து கிடக்கின்றான்

இயற்கையோ பறவைகளோ
விலங்குகளோ புழுபூச்சுகளோ
நம்மை பார்த்து
சிரித்து கொண்டிருக்கின்றன.!
www.anbe-kadavul.blogspot.com

Friday, March 20, 2020

கொரோனா

கொரோனாவை விட கொடிய கிருமிகள் இன்று தூக்கிலடப்பட்டன (நிர்பயா வழக்கு)

கொரோனா யோசிக்க ஆரம்பிச்சிருக்கும் இந்தியாவில் இருப்பதை விட விலகுவதே நல்லது என்று....!

நிர்பயா

2012 ஆம் ஆண்டு தொற்றியது

அது நிர்பயா உயிரை பற்றியது

வன்கொடுமை செய்து உயிரை அகற்றியது

இதை எதிர்த்து மக்கள் மனம் கோப அலையுடன் சுற்றியது

கொரோனாவை விட கொடிய கிருமிகள் தூக்கிலடப்பட்டன

நீதி இன்று நிலைநாட்டப்பட்டன

கொரோனா யோசிக்காமல் விலக ஆரம்பிச்சிருக்கும்...

Thursday, March 19, 2020

கொரோனா

இழந்தோம் அதிதாரம்!

இழந்து கொண்டிருக்கிறோம் பொருளாதாரம்!!

இழக்கப் போகின்றோம் வாழ்வாதாரம்!!!

கொரோனாவே இதற்கு ஆதாரம்!!!!

தேவை அனைவரிடத்திலும் சுகாதாரம்!!!!!

கொரோனா

மனிதர்கள் மனிதர்களை பார்த்து பயந்தார்கள்
பேசித் திரிந்தவர்கள் தனித்து சென்றார்கள்
முகங்கள் தெரியாது முகமூடி அணிந்தார்கள்
உறவுகள் என்றாலே உதறி தள்ளினார்கள்
பிள்ளைகள் சதிபதி மாதாபிதா பிரிந்தபடி நின்றார்கள்
எங்கு சென்றாலும் நிற்க வைத்து தொற்று இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள்
எதை தொட்டாலும் தொடும் முன்பு கைகளை கழுவ அறிவுரைக்கிறார்கள்

கல்லூரி வணிக வளாகங்கள் யாவும் மூடப்பட்டன
தேர்வுகள் வியாபாரங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன
பூங்கா விளையாட்டு திடல்கள் ஆளில்லா பார்க்கப்பட்டன
கடற்கரை சுற்றுலா தலங்கள் அரங்குகள் அடைக்கப்பட்டன
போக்குவரத்து நிறுத்தப்பட்டும் நாடுகளுக்குள் எல்லைகள் மூடப்பட்டன
வெறிச்சோடிய சாலைகள் வீழ்ச்சி அடைந்த பங்கு சந்தை காணப்பட்டன
பல இடங்களில் சுய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டன

அலுவலகங்கள் மூடப்பட்டு வீட்டில் இருந்தபடி
அலுவலக வேலை கொடுக்கப்பட்டது

கோயில்கள் அடைக்கப்பட்டு மருத்துவர்கள் சேவகர்கள் கடவுள்களாக போற்றப்பட்டது

இத்தனையும் எதற்காக... இதற்காகவவோ?....?

வல்லரசு என்று மார்தட்டிய நாடுகளுக்கு பாடம் புகட்டவோ?
சாதி மதம் தீண்டாமையென இருந்தவர்களுக்கு தனிமைப்படுத்தி தீண்டாமை கொடியதென உணர்த்தவோ?
கேளிக்கை ஆட்டம் கொண்டாட்டம் என திரிபவர்களுக்கு எச்சரிக்கவோ?
பணம் பகட்டுயென பல தலைக்கனம் பிடித்தவர்களுக்கு இறுதியில் நீ ஒன்றுமில்லை என சொல்லாவோ?
விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் சவுக்கடி கொடுக்கவோ?

கண்ணுக்கு புலப்படாத எதிரியாய் இருந்து
நடத்துகிறது "நவீன யுத்தம்"

இதோ

 "மூன்றாம் உலகப்போர்"

ஆட்ட நாயகனுமாய்
எதிர்க்கும் எதிரியுமாய்

"கொரோனா"

Vs

அனைவரும் தனித்து நின்று ஒன்று சேர்ந்து போராடும்

"உலகமக்கள்"

Tuesday, March 3, 2020

திருமண தின வாழ்த்து

மன்னித்து விடுங்கள்...

திருமண தின வாழ்த்து சொல்ல

வார்த்தைகளுக்காக தேடி தேடி

இதோ வந்து நிற்கிறது உங்கள் இதயம் நாடி

ஞாயிறு மனம் கொண்ட வெற்றியும்

திங்கள் முகம் கொண்ட சௌமியாவும்

செவ் வாய் கொண்டு என்றும் சிரித்திட

புதன் அதனை கண்டு ரசித்திட

வியாழன் தனது வருகையைபதிவு செய்திட

வெள்ளிக்கிழமையில்,
வெண் நட்சத்திர மலர்கள் தூவிட
மும்மூர்த்திகளும் அருள் வழங்கிட

சனி விலகி ஓரம் நின்றிட

என்றும் எங்கும் எப்போதும்

வெற்றி மழையில் சௌமியாவும்
சௌமியா சாரலில் வெற்றியும்

நனைந்திட

வாழ்த்துகள்...💐💐💐

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...