Wednesday, November 27, 2019

காதல் பாடல்#58

வயித்துல பட்டாம்பூச்சிதான் பறக்குது
நீ பார்த்ததும்
காதுல ராஜாபாட்டுதான் கேக்குது
நீ சிரிச்சதும்
கண்ணாடி முன்னாடி நிற்கையில
நீதானே நானாக தெரியுற
என்னானு பின்னாடி பார்க்கையில
காதல்னு காதல்னு திரியுற
சரணம்
********
சாப்பிடும் போது பொறை ஏறிட
தலைதட்ட மறுக்கிறேன் நினைப்பது நீயென
கூப்பிடும் போது பெயர் கேட்க காதுமடல் கொடுக்கிறேன் உந்தன் பெயரென
பாதையே நீயென கால்களும் நடக்குது
ராதையே நீயென நெஞ்சமும் சொல்லுது
நீ விடும் மூச்சு காற்றை சுவாசிக்க இதயமும் துடிக்குது துடிக்குது..
சரணம்
********
எழுதிடும் போது எறும்புகள் மொய்க்க நானெங்கும் பார்க்கிறேன் சுவைஉன் பெயரென
தொழுதிடும் போது சொர்க்கம் கிடைத்திட தினம்தினம் உணர்கிறேன் அருள்வது நீயென
மந்திரம் நீயென ஜாலங்கள் நடக்குது
இதயமும் இரண்டென நெஞ்சமே கணக்குது
நீ இடும் பொட்டின் உள்ளே என்னையே வைச்சுதான் அழுத்துற அழுத்துற..

Monday, November 25, 2019

முயன்று ஓடு பாடல்

முன்ன வச்ச கால
பின்னே வைக்காதடா
என்ன வந்தாஎன்ன என்ன போனா என்ன கலங்கி நிற்காதடா
நீயேதான் ராஜா நீயேதான் கூஜா
விலகி ஓடாதடா
முயன்று முயன்று ஓடு முயன்று முயன்று ஓடு
இல்ல
பயின்று முயன்று ஓடு பயின்று முயன்று ஓடு

சரணம்
********
வாழ்க்க ஒருமுறை வாழு வாழவைச்சு
பின்னே பாரு உன்னை வாழ்த்தும் தலைமுறை..
போகும் வழி எல்லாம் காணும் மேடு பள்ளம்
உன்னை உயர வைக்கும்
யாரும் உனக்கு இங்கு நிகர் இல்லை என்ற எண்ணம் அதிர வைக்கும்
சரணம்
********
தடைகள் பலவரும் உடை உடைத்தெறி
பின்னே பாரு உன்னை சாதனை தேடிவரும்
செல்லும் வழி பிறக்கு செல்லும் வழி ஆகும்
உன்னை பலர் தொடர்வார்.
உலகம் உனக்கு இங்கு தலை வணங்க நிற்க பெருமை கொள்ள செய்வாய்..

Friday, November 22, 2019

அவள் மழை


கொலுசு


உன்னிடம்..

உன்னிடம்..
பேச வருகிறேன்
நீ என்னை பார்க்க பேச்சு வரவில்லை
கேட்க விழைகிறேன்
நீ என்னை பார்க்க கேட்கவும் வரவில்லை
சொல்ல நினைக்கிறன்
நீ என்னை பார்க்க சொல்ல வரவில்லை
எழுத பார்க்குறேன்
நீ என்னை பார்க்க வார்த்தை வரவில்லை
பாடல் படிக்கிறேன்
நீ என்னை பார்க்க ஒலி வரவில்லை

இப்படி

உயிர் வாழ உயிர் மூச்சு மட்டும் தான் வேலை செய்கின்றது
இதோ சுவாசத்தில் எழுதி அனுப்புகிறேன்
சு(வாசித்து) விட்டு சொல்லடி காதலை...!

நிலவு


Thursday, November 21, 2019

காதல் பாடல்#57

எனக்குள்ள நுழைஞ்சிட்ட
செல்லுசெல்லா கலந்திட்ட
கணினிய மடிப்பது போல என்னயே மடிச்சிட்ட..
சகுனியின் பேச்சை போல பேசியே மயக்கிட்ட..
பாவம் நான் கொஞ்சம் கவனி  உன்னால சாமியாடி போகுறேனே பவனி...
சரணம்
********
அழகு சிலை உன்ன பார்த்தா அசைந்து நின்னு பார்க்கும்
ஆயக் கலை உன்ன படிச்சா வணங்கி நிமிர்ந்து நிற்கும்
ஓவியம் நீயென இருந்திட நான் காகிதம் ஆகனுமே
இதயம் நானென இருந்திட நீயே துடிப்பாக வேண்டுமே..
இதுவே எனக்கு போதுமே வேற என்ன இதுபோலவே நான் வாழ வேண்டுமே..

சரணம்
********
சாமி வந்து வரம் கேட்டா உன்ன மட்டும் கேட்பேன்
சாகா வரம் தர சொல்லி கட்டளையும் இடுவேன்
யாரும் இல்லாத உலகத்துல நாம மட்டும் வாழனுமே
காதல் சொல்லாத காதலையும் நாம செய்து பார்க்கனுமே
அந்த நொடி போதுமே மத்த நொடி அதபோலவே ஆயுள் வரை தொடரனுமே..

Wednesday, November 13, 2019

Feeling ah machi

Feeling ah machchi feeling ah
Y y y y y y feelingu
eyes close ah ears mouth close ah
Na na na na  problemu
This is te rulu
Simply Follow u mamu
Then you can winnu you can winnu

Saranam
*********
Fall down ah dont worry
Sudden wakeupu will rise u up
Truthful ah u do work that will give u all backu
Many things comes like speedbrakeku u fight it'u n fire it'u
Then all thing will be alright'u

Saranam
**********
not enough ah two hands
Addon confidence will add u hand
Heartful ah u mindit'u that will make u all strongku
Many ppl tell you manythings'u u leave it'u n show it'u then all know about ur weight'u

Tuesday, November 5, 2019

காதல் பாடல்#56

உன்ன உன்ன நெனக்கையிலே
நான் என்ன என்ன மறக்குறேனே..
கண்ணுகுள்ள கரு மணியா
நித்தம் நின்னு நின்னு சூழட்டுறியே..
தூக்கம் தொலைவில் நின்னு கேலி செய்யுதே
உறவுகள் சேர்ந்து நின்னும் தனிமை சேருதே
காதல் உள்ளுக்குள்ள சண்ட போடுதே...
சரணம்
********
தனிமையில் நடக்குறேன் வழித்துணையே நீயென
தனிமையில் பேசுறேன் மொழிவது நீயென
தனிமையில் சிரிக்குறேன் நகைப்பது நீயென
தனிமையில் படிக்கிறேன் முகவரி நீயென
உன்னுடன் வாழுறேன்  மனம் முழுவதும் நீயென.
சரணம்
*********
ஆகாயகம் பறக்குறேன் வானவில்ல புடிக்கத்தான்
நிலவ எடுக்குறேன் கூடையில அடைக்கதான்
நட்சத்திரம் பறிக்குறேன்   காதலா தொடுக்கத்தான்
வண்ணங்களை சேர்க்குறேன் மாலையா கொடுக்கத்தான்
சம்மதிச்சா போதுமே வரும் காலமே நாமென.

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...