நண்பனே நண்பனே நம்பிக்கை கொண்டு இருடா
மண்ணிலே மண்ணிலே வாழ்க்கை ஒருமுறை தானடா
ஆயிரம் தடைகள் உனக்கு வந்து வந்து போகலாம்
அதற்கு விடைகள் உன்னில் இருந்து தந்து தீரலாம்
ஆகையால் நம்பிக்கை கொள்ளடா நம் கை வெல்லும் பாரடா
சரணம்
**********
கனியிலும் கசப்புண்டு தேனிலும் துவர்புண்டு
அதனில் தானே மருந்துண்டு
சோதனை தினமுண்டு தோல்விகள் பலவுண்டு
அதனில் தானே பாடமுண்டு
பாடம்தனை கற்றுக் கொள்ளடா
பாரினை நீயும் வெல்லடா
அகையால் நம்பிக்கை கொள்ளடா நம் கை வெல்லும் பாரடா
சரணம்
***********
கவலைகள் பலவுண்டு வேதனை சிலவுண்டு
வலியில் தானே வழியுண்டு
கனவுகள் தினம்கண்டு வேலைகள் செயல்கொண்டு
தினமும் தானே ஜெயமுண்டு
கனவுகள் கைகூடும் வேளைடா
கவலைகள் அதுமாறும் நாளைடா.
அகையால் நம்பிக்கை கொள்ளடா நம் கை வெல்லும் பாரடா
No comments:
Post a Comment