ஒருமுறைதான் ஒருமுறைதான் நாம வாழும் வாழ்க்கையடா
தலைமுறைதான் தலைமுறைதான் சரியா போற்ற வாழனும்டா
வரையறை இல்லாம வழிமுறை தவறாம
உலகே வியந்து பாராட்ட எதையும் உன்னில் இருந்தே தொடங்கடா
சரணம்
**********
இன்பம்என்ன துன்பம்என்ன இரண்டையும் ஒன்றென கருதடா
ஏற்றம்என்ன தாழ்வுஎன்ன இல்லாத வாழ்க்கை இங்கெதடா
தவறுகள் நடந்தா தட்டி கேட்கும் எண்ணம் வேணும்டா
தடைகள் வந்தா முட்டி மோதிடும் வீரம் வேணும்டா
கடமைகள் செய்வதில் கவனம் கொள்ளடா அதனை தடுப்பவன் தலையை துணிந்து கொய்யடா
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் எமனையும் எதிர்த்து வெற்றி வாகை சூடடா.
சரணம்
**********
அச்சமில்லை அச்சமில்லை எங்குமென பாரதியாய் உறுமடா
மிச்சமில்லை மிச்சமில்லை உனக்கிங்கு வெற்றிகள் வருமடா
என்னடா வாழ்க்கை இதுனு யோசிக்கும் எண்ணம் வேண்டாமடா
என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை உன்னில் வேணுமடா
வெறியோடு போராடு உன்னை வெல்ல தடுத்தால் அறிவோடு போராடு அகிலம் வெல்ல..
வாழவழி இல்லையா வானமது எல்லையா முடியுமென்று முயற்சி செய்து வாழ்ந்து நீயும் காட்டுயா
"அச்சமில்லை அச்சமில்லை எங்குமென பாரதியாய் உறுமடா"-❤️❣️💗😍👌👌👌👌👌👌
ReplyDelete