Sunday, March 31, 2019

மனிதா நீ மனிதனா


மனிதா மனிதா இதுதான் உன் பிழைப்பா
படைப்பா படைப்பா நீயெல்லாம் ஒரு படைப்பா
நேரம் பார்த்து பிறறை போட்டு தள்ளுற
போட்டு கொடுத்தே பிறரின் பிழைப்பை கெடுக்குற
அரசியல் பேசம அரசியல் செய்யுற 
அரசல் புரசலாக செய்யாததையும் செய்யுற.
சரணம்
**********
விலங்கிலிருந்து உடலளவில் வேறுபட்டாய் மனிதா இருந்தும்
மனதளவில் மாறலை ஏனோ?
உதவிசெய்யதிட இங்கில்லை ஒருவருமே மனிதா இருந்தும் உபத்தரவம் செய்வது ஏனோ?
அடுத்தவன் கண்ணீரில் ஆனந்தம் ஏனோ? அதுஉனக்கு திரும்புகையில் சோகம்தான் ஏனோ?
நீமட்டும் வாழ்ந்திடவே எண்ணம் கொண்டாய் பிறர்வாழ்வுதன்னை கெடுப்பதிலெ லட்சியம் கொண்டாய் ஏனோ ஏனோ ஏனோ?
நீ சென்று செய்யாத உதவிதன்னை உனக்குமட்டும் கேட்டால் நியாயம் தானோ 
சரணம்
**********
உனக்கென்று தனியாக வேலையிருக்க மனிதா அடுத்தவனின் வேலையை கெடுப்பது ஏனோ?
எட்டப்பனும் தோற்பான் உனைப்பார்த்து மனிதா வினவுவான் சாத்தியம் எப்படி என்று?
தேவையில்லா விஷயங்களை பேசுவது ஏனோ?  உன்னைப்பற்றி பேசுகையில் ஏற்காததும் ஏனோ?
நீ மட்டும் நலம்பெற பிறரை தூற்றுகிறாய் பூமிதனில்தான் உன்வாழ்வும் என்பதை புரியாதது ஏனோ ஏனோ ஏனோ? 
நீ செய்த செயல்கள் உன்னைதுரத்தும் உன்னைவிடாது நியாயம் கேட்கும் தானே...

Wednesday, March 27, 2019

காதல் பாடல்#31

விழியினை பார்த்தேன் மோதலில் மொழியினை மறந்தேன்
இதயத்தில் நுழைந்துவிட்டாளே...
உதிரமாய் நிறைந்தேன் காதலில் மந்திரமாய் அறிந்தேன்
உயிரினில் கலந்துவிட்டாளே...
ஒரு செல்லாக்காசு என்னை தங்கக்காசா மாற்ற கண்டேன்
மாற்றி தினம் தினம் உன் பார்வையால் தங்கமுலாம் பூசிவிட்டாளே 
சரணம்
***********
முட்ட கண்ணு முழி கொண்டு என்ன முறைக்குறா
பாறை போன்ற மனச பார்வை கொண்டு செதுக்குறா 
அவ என் பாக்கம் வந்து நிற்க பாற விழுங்கும் என் தொண்ட எச்சில்  விழுங்க தினறுதே
அவ என் சொக்கா இருக்கி புடிக்க வீர நெஞ்சம் என் உள்ளவன் நானும் விழுந்து போறேனே
என்ன மாத்திபுட்டாளே! காதல் பார்வையால் என்ன சாச்சிபுட்டாளே!

சரணம்
***********
தொவச்சி கட்டா வேட்டிய அவுத்து சீமசட்ட போடவச்சா
விரிந்து அகன்ற மார்புல அவபேர அழியாபச்ச குத்தவச்சா
அவ என் கறப்புடிச்ச அழகு பல்ல சீரா சிரிப்பால ஒளி மின்னும் பளிங்கா மாத்தி வச்சா
அவ என் கரும்புகாடு தாடிய எடுக்க வச்சு சினிமா கதா நாயகனா அழகாக மாற்றி புட்டா
என்ன மாத்திபுட்டாளே! காதல் போர்வையால் என்ன சாச்சிபுட்டாளே!

Friday, March 22, 2019

ஒருமுறைதான் வாழ்க்கையடா

ஒருமுறைதான் ஒருமுறைதான் நாம வாழும் வாழ்க்கையடா
தலைமுறைதான் தலைமுறைதான் சரியா போற்ற வாழனும்டா
வரையறை இல்லாம வழிமுறை தவறாம
உலகே வியந்து பாராட்ட எதையும் உன்னில் இருந்தே தொடங்கடா
சரணம்
**********
இன்பம்என்ன துன்பம்என்ன இரண்டையும் ஒன்றென கருதடா
ஏற்றம்என்ன தாழ்வுஎன்ன இல்லாத வாழ்க்கை இங்கெதடா 
தவறுகள் நடந்தா தட்டி கேட்கும் எண்ணம் வேணும்டா
தடைகள் வந்தா முட்டி மோதிடும் வீரம் வேணும்டா
கடமைகள் செய்வதில் கவனம் கொள்ளடா அதனை தடுப்பவன் தலையை துணிந்து கொய்யடா
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் எமனையும் எதிர்த்து வெற்றி வாகை சூடடா.
சரணம்
**********
அச்சமில்லை அச்சமில்லை எங்குமென பாரதியாய் உறுமடா
மிச்சமில்லை மிச்சமில்லை உனக்கிங்கு வெற்றிகள் வருமடா
என்னடா வாழ்க்கை இதுனு யோசிக்கும் எண்ணம் வேண்டாமடா
என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை உன்னில் வேணுமடா
வெறியோடு போராடு உன்னை வெல்ல தடுத்தால் அறிவோடு போராடு அகிலம் வெல்ல..
வாழவழி இல்லையா வானமது எல்லையா முடியுமென்று முயற்சி செய்து வாழ்ந்து நீயும் காட்டுயா

MOtivation#28


Wednesday, March 6, 2019

செலவு

செய் செய் செலவு செய்
இருப்பதில் இருந்து செலவு செய்
மெய் மெய் அறிவு மெய்
அறிவதில் இருந்து வரவு மெய்
வாழ்வின் நாட்கள் செலவு செய்வது மெய்யாகி செய்தால்
வாழ்வது வரமாகும்
அது பொய்யாகி போனால்
வாழ்வதே சாபமாய் போகும். ஆகையால்
சரணம்
**********
சிந்தையை நீயும் செலவு செய்து
விந்தைகள் புதியது புரிந்துக்கொள்
சிரிப்பினை நீயும் செலவு செய்து
ஆயுள்தனை நீளம் கூட்டிக்கொள்
அன்பினை நீயும் செலவு செய்து
ஆயிரம் இதயம் வாங்கிக்கொள்
அறிவினை நீயும் செலவு செய்து
அகிலத்தை இன்றே வெற்றிக்கொள்
சரணம்
***********
கனவை நீயும் செலவு செய்து
நிஜம் ஆனதென உறுதிகொள்
தைரியம் நீயும் செலவு செய்து
காரியம் நிறைவு செய்துகொள்
உழைப்பை நீயும் செலவு செய்து
உயர்வை மனதால் ஏற்றுக்கொள்
இளமையை நீயும் செலவு செய்து
முதுமையின் துன்பம் தடுத்துக்கொள்
 

Sunday, March 3, 2019

நம்பிக்கை கொள்ளடா பாடல்

நண்பனே நண்பனே நம்பிக்கை கொண்டு இருடா
மண்ணிலே மண்ணிலே வாழ்க்கை ஒருமுறை தானடா
ஆயிரம் தடைகள் உனக்கு வந்து வந்து போகலாம்
அதற்கு விடைகள் உன்னில் இருந்து தந்து தீரலாம்
ஆகையால் நம்பிக்கை கொள்ளடா நம் கை வெல்லும் பாரடா
சரணம்
**********
கனியிலும் கசப்புண்டு தேனிலும் துவர்புண்டு
அதனில் தானே மருந்துண்டு
சோதனை தினமுண்டு தோல்விகள் பலவுண்டு 
அதனில் தானே பாடமுண்டு
பாடம்தனை கற்றுக் கொள்ளடா
பாரினை நீயும் வெல்லடா
அகையால் நம்பிக்கை கொள்ளடா நம் கை வெல்லும் பாரடா
சரணம்
***********
கவலைகள் பலவுண்டு வேதனை சிலவுண்டு
வலியில் தானே வழியுண்டு
கனவுகள் தினம்கண்டு வேலைகள் செயல்கொண்டு
தினமும் தானே ஜெயமுண்டு
கனவுகள் கைகூடும் வேளைடா
கவலைகள் அதுமாறும் நாளைடா.
அகையால் நம்பிக்கை கொள்ளடா நம் கை வெல்லும் பாரடா


கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...