Wednesday, January 16, 2019

ஆயுள் தண்டனை


சீறி வரும் காளை

சீறி வரும் காளை காளை கொம்பு சீவி விட்ட காளை காளை.
ஏறு தழுவும் காளை காளை தொம்பு ஏற தழுவும் காளை காளை.
அன்புனு வந்துபுட்டா நன்றினு சொல்லி நிக்கும்
வம்புனு வந்துபுட்டா முட்டியே தள்ளி வீசும்.
இது எட்டிப்பாயும் ஆள இது கட்டுக்கடங்கா காள
இது எங்க ஊரு காள இது உடன் பிறப்பு போல
சரணம்
**********
ஓடி அதனோடு விளையாட்டு அதில் எழுந்திடும் வீரம் நீகாட்டு
ஏறு தன்னில் அதைப்பூட்டு வரும் விளைச்சல் கொண்டு களிப்பூட்டு
வீட்டில் அவனொரு பிள்ளை அவனால் உண்டிங்கோ தொல்லை.
உழைப்பில் அவனொரு உழைப்பாளி அவனால் மகிழ்வான் பிழைப்பாளி
சரணம்
*********
திமிர் பிடித்த தமிழன்நாடு  அவன் காளையின் திமிலிலும் அதப்பாரு
தமிழ் படித்த கையோடு ஊர் வியக்கவே எங்கும் நடைப்போடு
சீண்டிப் பார்த்திட செல்லாக்காசில்ல சீறிப்பாயும் காளையாய் சிகரம்பாய்வோம்
மானம் காத்திட துணிந்திடுவோம் அவமானம் செஞ்சா கருவருப்போம்

காதல் அரசியல்


Monday, January 14, 2019

தை தை தை வருக

தை தை தை தையென மாதம்
பிறந்து விட்டாள் 
கை கை கை கையென வழியை
காட்டி விட்டாள் 
போ போ போ போவென பழையதை விரட்டி விட்டாள்
வா வா வா வாவென புதுமைகளை வரவேற்று விட்டாள்
சரணம்
***********
நெய் நெய் நெய் நெய்யென பொங்கல் மணக்குதுங்கோ
செய் செய் செய் செய்யென மனமோ துடிக்குதுங்கோ
பொய் பொய் பொய் பொய்யென நம்மில் போகுதுங்கோ
மெய் மெய் மெய் மெய்யென வாழ்ந்திட தோணுதுங்கோ
வரும் காலம் வசந்தம் ஆகுமுங்கோ
தரும் பயன்கள் பலநூறு சேருமுங்கோ
சரணம்
**********
விறு விறு விறு விறுவென புத்துணர்ச்சி ஏறுதுங்கோ
சுறு சுறு சுறு சுறுவென சுறுசுறுப்பு கூடுதுங்கோ
எரு எரு எரு எருதுகள் பாய்ந்து சீறுதுங்கோ
புது புது புது புதுமை முயற்சிகள் தொடங்குதுங்கோ
இனிய பயணம் நம்மில் சேருதுங்கோ
வரும் அனைத்து காரியமும் வெற்றிதானுங்கோ.

விவசாயி பற்றி பாடல்

வானம் பார்த்து வாழும் சாமி
உலகம் பார்த்து வியக்கும் சாமி 
கோவில் இல்லாம சாமியாய் நடமாடும் சாமி
கோவிலில் இருக்கும் சாமிகளும் போற்றிடும் சாமி
எங்க விவசாயி உயிரை காக்கும் குலசாமி எங்க விவசாயி.
 
சரணம்
**********
வானம் மழை பார்த்தே தலை நிமிர்ந்து நடப்பான்.
நிலம் பயிர் பார்த்தே தலை வணங்கி நிற்ப்பான்
யாருக்கும் அடி பணிய மாட்டான்.
மலடாய் போன மண்ணை உழுது தாய்யாய் காப்பான்
விளையும் பொன் பூமிதனை தொழுது சேய்யாய் பார்ப்பான்.
தாய்யாய் சேய்யாக இருப்பான்.
எங்க விவசாயி உயிரை காக்கும் குலசாமி எங்க விவசாயி.

சரணம்
**********

இரவு பகல் பாராது சேற்றில் கால் பதிப்பான்
வாழை இலை உணவு நாம்உண்ண அவனோ உழைப்பான்
உழைப்பில் சிகரம் ஆனவன்.
மழை உடன் அவனது வியர்வை துளி சேர்ப்பான்
உரமாக கரைந்து பயிர்கள் உயிரை காப்பான். 
மனிதரில் மா மனிதனாவான்.
எங்க விவசாயி உயிரை காக்கும் குலசாமி எங்க விவசாயி.


Saturday, January 5, 2019

ஆழி பேரழகே!


நம்பிக்கை பாடல்

போகிற போக்கில் வாழ்வது எல்லாம் வாழ்க்கையா
போனால் போகட்டும் என்று இருப்பதும் வாழ்க்கையா
ஆறாவதாக படைத்தான் அறிவை எதற்கு யோசியா
ஆகுமே உன்னால் என்பதை ஆராய்ந்து சுவாசியா
தடைகள் கால்தூசியா தகர்த்து கைகள்தாளம் வாசியா
சரணம்
++++++++
குட்ட குட்ட குனிஞ்சது போதும்
திட்ட திட்ட வாங்கினது போதும்
எட்ட எட்ட பார்த்தது போதும்
விட்ட விட்ட மனம்தான் போதும்
சூடு சுரணை உனக்கு இல்லையா
மானம் ரோசம் எதற்கும் வரலையா
உன்னை நீ நம்பாது யாரை நீ நம்பியும் அதுவீண்ணய்யா 
சரணம்
+++++++
விரட்ட விரட்ட ஏமாந்தது போதும்
அதட்ட அதட்ட அதிகாரம் போதும்
வாட்ட வாட்ட வாடினது போதும்
சொட்ட சொட்ட கண்ணீர்தான் போதும்
திரும்பி அடித்தால் அவனுக்கும் வலிக்கும்யா
மாற்றி யோசித்தால் தைரியம் பலிக்கும்யா
உன்னை நீ முன்னே நிறுத்து நீ நம்பும் உன்னைஜலித்துயா

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...