நவீன திருக்குறள் v 1.3
அதிகாரம் - மொபைல் மனிதன்
#####################
1. ஆறறிவு மனிதன் கண்டான் கைகளில்
ஆறாம் விரல் கைபேசி.
2. செய்வதறியா கைபேசியை நொண்டுவான் வேலை
செய்ய இருந்தும் இல்லாதவனாய்.
3. உலகமே சட்டைப்பையில் உள்ளதாக உணர்வாய்
உணர்வை இழந்து போவாய்.
4. செல்பி மோகத்தில் செல்பிஷ் ஆவாய்
செல்ப்கன்ட்ரோல் இழந்து சாவாய்.
5. அறிவை மட்டுமல்ல உடம்பையும் வைத்து
அடகு இன்றைய தலைமுறை.
6. தேடி தேடி அறிந்தோம் என்று
இருப்பதை எல்லாம் தொலைத்தோம்.
7. தாய் தொலைந்தால் அழுவானோ? சந்தேகம்
மொபைல் தொலைந்தால் அழுவான்.
8. அவசரத்தில் எடுத்து பேசாது கைபேசி
இருந்து என்ன பயன்.
9. கணவன் கைபேசி கைபேசி மனைவி
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
10. ஒலிப்பதால் முகம் முழிப்பதால் போகுதோ
அன்றாட வாழும் வாழ்க்கை.
நவீன திருக்குறள் v 1.4
அதிகாரம் - முடியும்
************************
1. முடியு மென நம்பு முடியும்
முடியாத எந்த காரியமும்.
2. நல்லதொரு முடிவை எடு பிறருக்கு
நன்மை பயக்கு மெனின்.
3. மனம் வைத்தால் முடியாததும் முடியும்
தினம் புதிதாய் விடியும்.
4. எழுந்திடு நடத்திடு உழைத்திடு முடித்திடு
உணர்திடு நாளை உனதென.
5. முடிக்கொடுத்தல் கடவுளும் தேவையில்லை என்பார்
முடிவெடுத்தலே சால சிறந்ததென்பார்.
6. படியாத காரியமும் படியும் முடியாத
காரியமும் முடியும் முடியுமென்றால்.
7. முடியும் என்பான் முடித்துக் காட்டுவான்
முடியாதென்பான் மூளையில் கிடப்பான்.
8. முடியாதது எதுவுமில்லை முடியும் என்று
முன்னே கால் வைத்தால்.
9. முடிவால் கிடைக்கும் முடிவு முடிவில்லா
முடிவில் இன்னெரு முடிவு.
10. முடியுமென முடித்திடு முடியாது போனால்
விதையாய் உன்னை புதைத்திடு.
நவீன திருக்குறள் v 1.5
அதிகாரம் - காதல் காமம்
**********************
1. கண்களால் புரிவது காதல் கடந்து
கழுத்தின்கீழ் பார்ப்பது காமம்.
2. அழகும் அறிவும் காதல் அறியா
அழகையும் அறியும் காமம்.
3. உள்ளமும் உயிரும் காதல் மாறாக
உடலை உரசுதல் காமம்.
4. அகம் அறிவது காதல் அடங்கா
புறம் காண்பது காமம்.
5. பேச்சில் மூச்சில் காதல் கொச்சை
பேச்சில் மகிழ்வது காமம்.
6. சாதிமதம் பார்க்காது காதல் எல்லாம்
பார்த்து செய்வது காமம்.
7. ஒருவனுக்கு ஒருத்தி காதல் ஒன்றல்ல
இன்னென்று என்றிருப்பது காமம்.
8. கட்டில் தொட்டிலென தொடர்வது காதல்
கட்டில் மட்டுமே காமம்.
9. உயிரையும் கொடுக்கும் காதல் இன்பத்திற்காக
உயிரையும் பறிக்கும் காமம்.
10. காதலில் காமம் காதல் காமத்தில்
காதல் காதலல்ல காமம்.
நவீன திருக்குறள் v 1.6
அதிகாரம் - தேர்தல்
***********************
1. உன் தலைவனை நீ தேர்ந்தெடுக்க
ஆணையம் சொல்லும் தேர்தல்.
2. மக்களுக்காக மன்னன் மக்களால் மன்னன்
அதுவே நல்லாட்சி மக்களாட்சி.
3. விரலில் இடும்மை கரும்மை உரிமை
வாக்கு நாட்டின் நன்மை.
4. ஓட்டு கேட்டு வாருவான் வாக்குறுதிகளை
ஏனோ பின் மறவான்.
5. நல்லாட்சி நடத்த எண்ணமில்லா நாற்காலிக்கு
சண்டையிட்டு என்ன பயன்.
6. தேர்தல் யாதெனில் உன்கைகளில் கருமை
ஜெயிப்பவரின் பைகளில் கருப்புபணம்.
7. ஆளும் கட்சிக்கே பலசமயம் சாதகம்
நடப்பதெல்லாம் வெறும் நாடகம்.
8. நடக்கலாம் பணப் பட்டுவாடா வாங்காதே
வாங்கிப் பின் வாடாதே.
9. சரித்திரம் மாறும் தரித்திரம் போகும்
உன் ஒரு வாக்கு.
10. அளித்தால் உன் போக்குக்கு வாக்களி
புறம்போக்குக்கு வாக்கு அளிக்காதே.
நவீன திருக்குறள் v 1.7
அதிகாரம் - அழகு
**********************
1. அழகு யாதெனின் புறம் சொல்லும்
பொய் அகமே மெய்.
2. அழகாய் இருத்தல் நன்று இருப்பின்
அகந்தையின்றி நடத்தல் நன்று.
3. உடையழகு உடலழகு பெயரழகு பேரழகு
அழகில்லை நல்உள்ளமே அழகு.
4. நிலைக்காத அழகு அழியும் நிலைக்கும்
துணை நிற்கும் அறிவு.
5. உன்னை யாரென உன்னகமே சொல்லும்
அதனை அறிவே வெல்லும்.
6. பெரிது மனஅழுக்கு பெரிது மலஅழுக்கு
அதனினும் சிறிது சிறிது.
7. அழகு ரசிக்க வைக்கும் அறிவோ
உன்னை நிலைக்க வைக்கும்.
8. அழகென்பது சில காலம் கலைந்தால்
ஆவாய் நீ அலங்கோலம்.
9. தோற்றத்தில் நிலைமை மாறும் உன்
ஏற்றத்தில் நிலைமை மாறும்.
10. சிறந்தது அழகா அறிவா அன்பா
செயல் காணுமே இம்மூன்றும்.
நவீன திருக்குறள் v 1.8
அதிகாரம் - ஈடில்லா அம்மா
*************************
1. படைப்பில் அதிசயம் கடவுளின் மறுஉருவம்
அன்பின் உச்சம் அம்மா.
2. ஐந்து ஆறு பெற்றாலும் அன்பை
சரிபாதி கொடுப்பவள் அம்மா.
3. இன்னல்கள் பல வந்தாலும் தன்
இமைமூடா காப்பவள் அம்மா.
4. ஈரைந்து மாதங்கள் உயிர்பெற்று கருசுமந்து
ஈன்றெடுத்து காப்பவள் அம்மா.
5. எப்பொழுதும் எங்கேயும் எந்நேரமும் எல்லையற்ற
அன்பு கொண்டவள் அம்மா.
6. பிள்ளைகளிடம் ஏமாறுவாள் பிள்ளைகளை ஏமாற்ற மாட்டாள்
நல்உள்ளம் கொண்டவள் அம்மா.
7. ஐயம் அறியாமல் ஐயம் இல்லாமல்
பிள்ளைகளை வளர்தெடுப்பவள் அம்மா.
8. அன்பையும் பண்பையும் பாசத்தையும் ஒழுக்கத்தை
அனுதினமும் போதிபவள் அம்மா.
9. ஓய்வெடுக்கும் வேளையிலும் பிள்ளைக்குரல் கேட்டால்
ஓடி வருபவள் அம்மா.
10. ஊசலாடி உயிர் பிரியும் கணத்திலும்
பிள்ளைநலம் வேண்டுபவள் அம்மா.
நவீன திருக்குறள் v 1.9
அதிகாரம் - கிண்டல்
***********************
1. கருத்து பார்வை பகிர்தல் தேர்வு
எழுத்தில் விழுந்தார் கடன்
2. TV "Serial" இல்லாத போது சிறிது
வயிற் றிர்க்கும் சமைக்கபடும்
3. கண்டவரும் கண்டதை பேசினால் கொட்டதும்
நல்லதென மாறி விடும்
4. குடிநீர் மின்சாரம் தொலைபேசி வாரியங்கள்
கொன்றே குவித்த ரோடு
5. தோண்டிற் புதுரோடு தோண்டுக அஃதிலார்
தோண்டலின் தோண்டாமை நன்று
6. சாலை சீறமைப்பு முற்பகல் செய்யின்
தோண்டுவோர்
பிற்பகல் வருவர்
7. காய்கறி வாங்கக்கூட கடனட்டை தேவைப்படும்
வாங்கும் ஜிஎஸ்டி கண்டு
8. முழுமாத கடனை செலுததாதார் வாழ்க்கை
மீளா துயர் அடைவர்
9. பசிநோக்கார் கண்துஞ்சார் கணினிக களிப்பில்
கழுத்து நோய் பெறுவர்
10. காலம் அறிந்து உழைககாதான் வாழக்கை
நீளம் சிறிதே ஆகும்
நவீன திருக்குறள் v 2.0
அதிகாரம் - இன்றைய இந்தியா
************************
1. நாட்டில் ஒற்றுமையை வளர்க்க ஒரே
நாடு ஒரே வரியாம்.
2. அன்று பள்ளிக்கூடம் அரசு அலுவலகங்கள்
இன்று திரையரங்குகள் நாளை?.
3. ஆட்டோ ஓட்டினாலும் ஆடிக்கார் ஓட்டினாலும்
ஆட்டிப் படைக்கும் ஜிஎஸ்டி.
4. தந்திரமாக சுதந்திரம் பெற்றோம் சுதந்திரமில்லா
எந்திரமாக தந்திரம் ஆளுது.
5. அரசிடமிருக்க வேண்டிய இலவசம் தனியார்வசம்
எங்கெங்கும் கட்டண வாசம்.
6. வரியோன் வரிசையில் நின்றே வாடுவான்
வாழ்க வல்லரசு என்று.
7. பணம் கொடுத்தால் எதுவும் நடக்குமென்ற
குணம் கொண்ட நாடு.
8. வக்கிரமும் அக்கிரமும் இருப்பதால் இங்கே
வழக்குகள் வாய்தாகள் நிலுவையில்.
9. மதுப்பிரியர் மதப்பிரியர் மாதுப்பிரியர் எங்கும்
எதிலும் தடம் பதியார்.
10. சான்றோன் செல்வான் வெளிநாடு நம்நாடு
சங்கடத்தில் படும் பாடு.
நவீன திருக்குறள் v 2.1
அதிகாரம் - சிரிப்பு
**********************
1. சிரிக்க சிரிக்க வாழ்க்கை சிறக்கும்
வாழ்க்கை கசக்கும் சிரிக்காவிடின்.
2. சிரித்துப்பார் மனம் லேசாகும் வாழ்க்கையில்
வரும் வலிகள் தூசாகும்.
3. விரி இறகுகளை திரி உலகெங்கும்
சிரி அகம் மலர.
4. விலங்கிடம் இருந்து விலகி உன்னை
விளங்க செய்வது சிரிப்பே.
5. வாய் விட்டு சிரி வரும்
நோய் விட்டு போகுமென்று.
6. சிரிக்க ஆயுட் காலம் கூடலாம்
நட்பின் வட்டம் விரியலாம்.
7. சிரித்துப் பேசி பழகு அதுவே
மனிதனில் காணும் அழகு.
8. நன்று சிரிப்பில் பலவகை சிரிப்பு
நன்றன்று ஆனவச் சிரிப்பு.
9. உன்னில் எச்சிரிப்பும் சிறந்ததே அச்சிரிப்பு
கள்ள மில்லா சிரிப்பென்றால்.
10. அழுபவன் பைத்தியம் அழுக வைப்பவன்
மிருகம் சிரிப்பவன் வைத்தியன்
நவீன திருக்குறள் v 2.2
அதிகாரம் - மனமே
************************
1. மனமே அன்பிற்கு அடங்கிவிடு அடங்காதே
பொங்கு அயோக்கியனை கண்டு.
2. மனமே சிரிக்காதே நல்லோர் வீழ்ந்தால்
அழு அநீதி கண்டு.
3. மனமே கயவனிடம் ஏமாறதே ஏமாந்துவிடு
சிறு குழந்தையின் விளையாட்டில்.
4. மனமே தீயோர் செயலால் தாழாதே
தாழ்ந்துவிடு உதவியவர் முன்னிலையில்.
5. மனமே கவர்ச்சியில் மயங்காதே மயங்கிவிடு
உன் உண்மை காதலிடம்.
6. மனமே சன்மானதிற்காக பதறாதே பதறிவிடு
தன்மானத்திற்கு சோதனை வருகையிலே.
7. மனமே பிறருக்காக ஏங்காதே ஏங்கிவிடு
நல்லெண்ணங்கள் மாறாமல் இருக்க.
8. மனமே தீயவர்களால் மாறாதே மாறிவிடு
தீய எண்ணங்களில் இருந்து.
9. மனமே அழுதுவிடு இனியவர்களை இழக்கையிலே
சிரித்துவிடு இன்ப தருணங்களிலே.
10. மனமே உன்னை அறியாதபோது கோபித்திடு
மகிழ்ந்திடு உன்னையே அறிகையில்.
No comments:
Post a Comment