Wednesday, January 11, 2023

என்றும் எங்கும் எதிலும்

 நாம் நினைத்தால் உடன்நிகழ்த்துவார் 

நாம் நடந்தால் வழிநடத்துவார் 

எதையும் அறிந்தவர் நம் தேவன் 

என்றும் காப்பவர் நம் தேவன்

எதிலும் வல்லவர் நம் தேவன் 

எங்கும் நிறைந்தவர் நம் தேவன் 

நன்றி ராஜா இயேசு ராஜா 

நன்றி ராஜா இயேசு ராஜா 


நாம் காண காட்சிகளாய் விரிந்திடுவார் 

நாம் பேச வார்த்தைகளாய் விழுந்திடுவார் 

சுவாசிக்க காற்றாய் வாசிக்க வசனங்களாய்

நேசிக்க அன்பாய் புசிக்க அப்பங்களாய்

என்றும் எங்கும் எதிலும் இருப்பவர் நம் தேவன் 

நன்றி ராஜா இயேசு ராஜா 

நன்றி ராஜா இயேசு ராஜா 


நாம் பாட சுவரங்களாய் சேர்ந்திடுவார் 

நாம் வாட கரங்களால் தேற்றிடுவார் 

அசைக்க நகர்வுகளாய் இசைக்க கருவிகளாய்

நாடிட அற்புதங்களாய் தேடிட முடிவுகளாய்

என்றும் எங்கும் எதிலும் இருப்பவர் நம் தேவன் 

நன்றி ராஜா இயேசு ராஜா 

நன்றி ராஜா இயேசு ராஜா


நாம் விழுந்திட மடிதனை தந்திடுவார் 

நாம் எழுந்திட படித்தனை காட்டிடுவார் 

சிந்திக்க பகுதிகளாய் சந்திக்க தகுதிகளாய்

சோதிக்க அறிவியலாய் சாதிக்க சரித்திரங்களாய் 

என்றும் எங்கும் எதிலும் இருப்பவர் நம் தேவன் 

நன்றி ராஜா இயேசு ராஜா 

நன்றி ராஜா இயேசு ராஜா


படித்ததில் பிடித்தது

 பெண்ணை பெற்ற எல்லா தந்தைக்கும் இது என் சமர்ப்பணம்♥♥.


♥"அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!


♥உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.


♥வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.


♥உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.


♥முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான


♥இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.


1) நேர்மையான நண்பன்:


♥தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.


2) உலகை அறிமுகம் செய்தவர் :


♥பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.


3) மகிழ்விப்பவன்:


♥வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.


4) காவலன் :


♥வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.


5)நண்பன் :


♥காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.


6) சூப்பர் ஹீரோ :


♥தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.


7) தைரியம் அளிப்பவன்:


♥அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.


😎 இறுதி வரை உறுதி:


♥மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.


9)அப்பா:


♥பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.




பற்றிக்கொள்

 பற்றிக்கொள் இயேசுவின் 

கரம்தனைஇறுக பற்றிக்கொள் 

சுற்றிக்கொள் இயேசுவின் 

இரத்தக்கோட்டைக்குள் சுற்றிக்கொள்

ஆற்றுவார் தேற்றுவார் பாதுகாப்பார்

என்றும் அவர் நம்மை கைவிடமாட்டார்!


நாம் நடக்கும் பாதையெல்லாம் 

நீர் வகுத்து தந்ததுதானே 

இடர் கடக்கும் போதெல்லாம்  

கரம் பிடித்த தந்தையும்தானே 

சற்று தடுமாறும் வேளையிலும் நம்மை  

உற்று உருமாற்றம் செய்பவரே 

ஆற்றுவார் தேற்றுவார் பாதுகாப்பார்

என்றும் அவர் நம்மை கைவிடமாட்டார்!


நாம் பார்க்கும் நோய்களெல்லாம் 

உம் வசனம் குணமாகுமய்யா  

பலன் இழக்கும் நேரமெல்லாம்  

நம் விசுவாசம் திடமாக்குமாய்யா

சோர்வு சூழ்ந்திடும் வேளையிலும் நம்மை    

தீர்வுடன் சூழ்ந்திட செய்பவரே 

ஆற்றுவார் தேற்றுவார் பாதுகாப்பார்

என்றும் அவர் நம்மை கைவிடமாட்டார்!

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...