ஓடி ஓடி ஓடி ஓடி உடம்பின் இரத்தமாக இருக்கிறாய்
நாடி நாடி நாடி நாடி உயிரின் நாசியாக மாறுகிறாய்
எண்ண எண்ண எண்ண எங்கும் நீயாகவே தெரிகிறாய் பாரு பாரு
உன்ன உன்ன உன்ன பார்க்க கூடிடும் ஆயுள் நூறு பலநூறு
அன்பே காதல் இதுதானோ இறைவன் முன்பே நம்மில் செய்தானோ
சரணம்
*********
காற்றாக வந்து காதல் ஸ்பரிசம் தருகிறாய்
வெயிலாக வந்து உள்ளே மகிழ்வை கூட்டுகிறாய்
மழையாக வந்து ஏனோ ஜீவன் நனைக்கிறாய்
குளிராக வந்து என்னை இதமாய் அணைக்கிறாய்
அன்பே காதல் இதுதானோ இறைவன் முன்பே நம்மில் செய்தானோ
சரணம்
***********
கொஞ்சி பேசி கோடி சுகங்கள் தருகிறாய்
கொஞ்சம் பேசாது நம்மில் அன்பை பொழிகிறாய்
தீராத காதல் நம்மில் தீராது சொல்கிறாய்
ஆகாயம் அளக்க நம்மில் காதல் என்கிறாய்
அன்பே காதல் இதுதானோ இறைவன் முன்பே நம்மில் செய்தானோ
No comments:
Post a Comment