Thursday, February 1, 2018

கிறுக்கல்கள் Part 2

கிறுக்கல்கள் 2.4

நண்பா..

இயலாமையால் நீ விட்ட 
காரியங்களை இன்றே
இப்பொழுதே நினைத்துப்பார் 

உன் 

ஊதாரித்தனம் தெரியும் 

வீண்பேச்சு தெரியும்

வேலையின்மை தெரியும்

வெட்டி பொழுதுபோக்கு புரியும்

இவைகளை விடுத்து

உன் நிலையறிந்தால் 
நீ உயர்வது நிச்சயம்!👍


கிறுக்கல்கள் 2.5

இளைஞனின் (மனக்)குரல்

கலாம்னு சொன்னா
உத்வேகம்

தோனினு சென்னா
உற்சாகம்

தண்ணிதம்முனு சொன்னா
சொர்க்கம்

அஜீத்னு சொன்னா
விவேகம்

என்பீல்டுனு சொன்னா
அதிவேகம்

விளையாட்டுனு சொன்னாலே
சதுரங்கம்

கிரிகெட்னு சொன்னா
அமோகம்

நடிகைனு சொன்னா
மோகம்

பெண்கள்னு சொன்னா
வெண்மேகம்

காதல்னு சொன்னா
அபூர்வராகம்

மொத்தத்துல

இளைஞர்கள்'னாலே
வேகம் தான்👍


கிறுக்கல்கள் 2.6

மனிதா நீ..

மலையாக நில்

பயிலும் கலையில்!
செய்யும் வேலையில்!
மன உறுதியில்!

ஆனால்

மேகமாய்ச் செல்லாதே
எங்கும் எதிலும்
மமதையில்..!


கிறுக்கல்கள் 2.7

(க)ண்ணும் கருத்துமாய்,
(கா)தலும் காட்சியுமாய்,
(கி)ள்ளையும் மொழியுமாய்,
(கீ)தமும் சங்கீதமுமாய்,
(கு)தூகலமும் குழந்தையுமாய்,
(கூ)ட்டலும் கழித்தலுமாய்,
(கெ)ஞ்சலும் கொஞ்சலுமாய்,
(கே)ள்வியும் பதிலுமாய்,
(கை)யும்  நம்பிக்கையுமாய்,
(கொ)டுப்பதும் விட்டுக்கொடுப்பதுமாய்,
(கோ)பூரமும் கலசமும்மாய்

நாம் இருக்க அன்பே😍
நம் காதல்தான் பிறருக்கு

(கௌ)ரவ சின்னம்👍




கிறுக்கல்கள் 2.8

மாட்டுக்குப் புல்லும் இல்லை 
ரோட்டுல மேய்யுது.
ஆட்டுக்கு இலையும் இல்லை
அடுப்புல வேகுது.
பயிருக்கு விலையும் இல்லை
மாடிவீடு ஆகுது.
அடுப்பில் உலையும் இல்லை
மல்டிகுசேன்ல சாயுது.
வாழ்க்கையில் ஒளியும் இல்லை
விவசாயி(ய)ம் சாகுது.
மக்களுக்கு புத்தியும் இல்லை
காசுக்கு ஓட்டா போடுது🤔


கிறிஸ்துமஸ் 2.9

அன்பால் எதுவும் செய் என்றார்

ஆற்றலால் எதுவும் முடி என்றார்

இன்புடன் பிறரிடம் பேசு என்றார்

ஈகை செய்து பழகு என்றார்

உலகம் அமைதி பெற பாடுபடு என்றார்

ஊன்உயிர் நலம் பெற வேண்டும் என்றார்

எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள் என்றார்

ஏகமனதாய் எதையும் ஏற்றுக் கொள் என்றார்

ஐயம் உறவில் வேண்டாம் என்றார்.

ஒற்றுமை எதிலும் வேண்டும் என்றார்.

ஓகோனு உச்சத்தில் சென்றாலும் பெரியவரை மதி என்றார்.

ஔடதம் இல்லா வாழ்க்கையை வாழு என்றார்.

அஃது இயேசுநாதர் சொன்னார்
சென்றார் இதயங்களை வென்றார்
மனங்களில் வாழ்கின்றார்.

ஜாதி மதம் தாண்டி
நன்மைகள் வேண்டி
செயல்கள் செய்திடுவோம்.

💐 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் 💐


கிறுக்கல்கள் 3.0

அரசே மதுக் கடைகளைத் திறந்து தானே முன்வந்து நடத்தியபோது ?

போடாத சாலையைப் போட்டதாய் சொல்லி பின் சாலையை பழுது பார்த்தபோது?

நேரில் வாங்கினால் மாட்டிக் கொள்வோம் என்று 
தெரிந்தவர் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தச் சொல்லும் 
புதிய லஞ்சம் புறப்பட்டபோது ?

பிரி கே.ஜி. தொடங்கி ஐ.ஐ.எம். வரை 
லட்சங்களில் நன்கொடையும் கல்விக் கட்டணங்களும் 
வசூலித்தபோது ?

விளைநிலங்களை விற்றுவிட்டு
வெளிநாட்டில் தட்டுக் கழுவும்போது
விவசாயி தற்கொலை செய்துகொண்டபோது ?

இலவசங்களை அள்ளி வழங்கி அதற்காக எங்கள் மக்கள் விழுந்தடித்து ஓடிவந்து 
நெரிசலில் சிக்கி மாண்டபோது ?

பெண்ணியம், பெண்கள் நாட்டின் கண்கள் என்றே பெண்கள் மானத்தை சூறையாடும் மிருகங்கள் விடுதலையான போது?

ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர், நேரத்துக்கு நேரம் 
சட்டம்  செங்கோல் நீதி வளைந்தபோது?

பணம் பார்த்து கொள்ளைகள் பார்த்து ஆள் பார்த்து மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தேடுத்த போது?

அப்போதும் இப்போதும்
ஜனநாயகம் செத்துப்போனது போதும்

அய்யா

எப்போதும் ஜனநாயகம் உயித்தெழும்?


கிறுக்கல்கள் 3.1

சட்டென பரவி
இன்ப துன்பம்
இரண்டையும் காட்டி
கரைந்துப் போகும்
புகையைப் போலே
மனிதனின் வாழ்க்கை
ஆள்கின்றது ஆகின்றது!

விழித்திருக்கும் இந்நிமிடம்
நம் நிமிடம் நம்மிடம்
வாழு வாழவிடு👍



கிறுக்கல்கள் 3.2

சுவருக்கும் கூட காதுண்டு 
அதிகார போக்கிற்கு காதில்லை 

வாசலுக்கு பூட்டுண்டு
வாயிக்கு பூட்டில்லை 

காதலுக்கு கண்ணுண்டு 
காமத்திற்கு கண்ணில்லை 

சொல்லிற்கு எல்லையில்லை
சொல்வதற்கு எல்லையுண்டு

உறவிற்கு கணக்குண்டு
உள்ளத்திற்கு கணக்கில்லை

இதயத்திற்கு அளவுண்டு
எண்ணத்திற்கு அளவில்லை 

ஆற்றிற்கு கரையுண்டு 
ஆசைக்கு கரையில்லை 

மதுகொண்டோனுக்கும் பாதையுண்டு
மதிகெட்டோற்கு பாதையில்லை

உடலுக்கு உருவமுண்டு
உயிருக்கு உருவமில்லை 

அறிவிற்கு தெளிவுண்டு 
ஆத்திரத்திற்கு தெளிவில்லை

செயலற்றோற்கு பலனில்லை
உழைப்பிற்கு பலனுண்டு


கிறுக்கல்கள் 3.3

தோழா தோழா
தடைகற்களும் தடங்கல்களும்
தாவி வருமடா
தாண்டி நீ செல்லடா!

தோழா தோழா
மூடநம்பிக்கையும் மூடத்தனமும்
மோதி வருமடா
மிதித்து நீ செல்லடா!

தோழா தோழா
கொடுமைகளும் குழப்பங்களும்
கொண்டு வருமடா
கொன்று நீ செல்லடா!

தோழா தோழா
வருத்தங்களும் வலிகளும்
வாரி தருமடா
திருத்தங்களுடன் நீ செல்லடா!

தோழா தோழா
அடிகளும் அழுகைகளும்
அள்ளி தருமடா
அரவணைத்து நீ செல்லடா!

தோழா தோழா
கஷ்டங்களும் கர்மங்கள்
கண்டிப்பா வருமடா
தர்மங்களுடன் நீ செல்லடா!

தோழா தோழா
முயற்சிகளும் முடிச்சுகளும்
நிறைந்த வாழ்க்கையடா
முயன்று நீ
வாழ்ந்து பாரடா!

தோழா தோழா
அர்த்தங்கள் ஆழமான
வாழ்க்கை இதுடா
விடைகளுடன் நீ
வாழ்க்கையை வாழடா!👍


கிறுக்கல்கள் 3.4

நிறம் பார்க்காது
அறம் பார்க்கும்!
வரவு பார்க்காது
உறவு பார்க்கும்!
இனம் பார்க்காது
மனம் பார்க்கும்!
பணம் பார்க்காது
குணம் பார்க்கும்!
தலைமை பார்க்காது
நிலைமை பார்க்கும்!
பதவி பார்க்காது
உதவி பார்க்கும்!
மதம் பார்க்காது
மனிதம் பார்க்கும்!
நேரம் பார்க்காது
எந்நேரம் பார்க்கும்!
தரம் பார்க்காது
நிரந்தரம் பார்க்கும்!

********உண்மை நட்பு********



கிறுக்கல்கள் 3.5

முடியட்டும் இவ்வாண்டு
வரட்டும் புத்தாண்டு 💐

தீரட்டும் கொடுமை!
ஓடட்டும் சுமை!
தரட்டும் வலிமை!
விலகட்டும் தாழ்வுமனப்பான்மை!
மாறட்டும் நிலைமை!
பெறட்டும் மேன்மை!
கொடுக்கட்டும் திறமை!
போகட்டும் பழமை!
தொடரட்டும் புதுமை!
கிடைக்கட்டும் முழுமை!
இருக்கட்டும் தன்மை!
ஜெயிக்கட்டும் உண்மை!
கொள்ளட்டும் நேர்மை!
நிலைநாட்டட்டும் உரிமை!
செய்யட்டும் எளிமை!
நீங்கட்டும் பொறாமை!
வாழட்டும் இளமை!
ஊன்றுகோலாகட்டும் முதுமை!
போற்றட்டும் பெண்மை!
மதிக்கட்டும் ஆண்மை!
தெரியட்டும் உன்மகிமை!
வரட்டும் இனிமை!
எட்டுத்திக்கட்டும் தமிழ்பெறுமை!
உயரட்டும் தமிழன்தலைமை!

முடியட்டும் இவ்வாண்டு
வரட்டும் புத்தாண்டு 💐💐

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...