கிறுக்கல்கள் ✍
0.1
கோவில் சர்ச் மசூதி
ஆகிய இடங்களுக்கு
சென்று வேண்டினேன்...
கடவுளே அன்பாவே
யாரும் நடப்பதில்லை
அன்பை கொடுனு
அதான் உன் அம்மா
இருக்காங்களேனு சொன்னார்!
கடவுளே எனக்கு நல்
வழி காட்டுனு கேட்டேன்
அதான் உன் அப்பா
இருக்காரேனு சொன்னார்!
கடவுளே கஷ்டதுல
உதவுனு கேட்டேன்
அதான் நண்பன்
இருக்கானேனு சொன்னார்!
கடவுளே பசியை
போக்குனு கேட்டேன்
அதற்கு அவர் அதான்
விவசாயி இருக்கிறாரே
ஏன் கவலைனு சொன்னார்!
கடவுளே பிணியை
போக்குனு கேட்டேன்
அதற்கு அவர் அதான்
மருத்துவர் இருக்கிறாரே
ஏன் அச்சம்னு சொன்னார்!
கடவுளே வருங்காலம்
என்னாகும்னு பயமாயிக்குனு
சொன்னேன் உடனே
அதான் ஆசான்
உள்ளாரேனு சொன்னார்!
கடவுளே உலகம்
தெரியலனு புலம்பினேன்
அதற்கு உடனே
முதலில் உன்னை
அறிந்துவிடு பின்
உலகம் உன் பையில்
வந்து சேரும்னு சொன்னார்!
இப்படி நான் கேட்டு
கொண்டே போக
அவரும் சொல்ல
உண்மை புரிந்தது
கடவுள்கள் எங்குமில்லை
நம்மை சுற்றியே
மனிதவடிவில் அலைந்து கொண்டு
இருக்கிறார்கள்
என்று! !!🙏🙏🙏
கிறுக்கல்கள் ✍
0.2
தாத்தா கூறும்
அறிவுரைகள் அழகு!
பாட்டி சொல்லும்
கதைகள் அழகு!
அம்மா காட்டும்
அன்பு அழகு!
அப்பா திட்டும்
வழிகாட்டலும் அழகு!
பிள்ளையின் கேள்விகளும்
பிடிவாதமும் அழகு!
தங்கை வேண்டுமென
கெஞ்சுவது அழகு!
அண்ணனின் மிரட்டலும்
அதட்டலும் அழகு!
மனைவி மெதுவாக
கொஞ்சுவது அழகு!
மாமாவின் கோபமும்
உரிமையும் அழகு!
காதலியின் குழையலும்
தவிப்பும் அழகு!
குடும்பத்தில் கொடுத்தலும்
விட்டுகொடுத்தலும் அழகு!
அழகு நீ காணும் யாவும்
பார்க்கும் பார்வையில்
அழகோ அழகு! !!!
கிறுக்கல்கள் ✍
0.3
அன்பே..😍
வான் நிலவின் துகள்!
வெண் மேக மகள் !
சிமிட்டும் கண் நட்சத்திரம்!
வெண்பூ பெண் சித்திரம்!
பால் பொங்க புன்னகை!
வெண் புறா தோகை!
வெள்ளை காகித மனசு !
வெண்ணை போன்ற பேச்சு!
அன்னம் இடும் நடை!
ஏஞ்சல் உடுக்கும் உடை!
மொத்தத்தில் நீ
வெள்ளை மாளிகையின்
வெள்ளை அறிக்கை !!
கிறுக்கல்கள் ✍
0.4
மனிதரில் பல நேரங்களில்..
பூனை குணம் தெரிகிறது
குரங்கு குணம் தெரிகிறது
நரி குணம் தெரிகிறது
நாய் குணம் தெரிகிறது
காக்கை குணம் தெரிகிறது
கொக்கு குணம் தெரிகிறது
பசு குணம் தெரிகிறது
புலி குணம் தெரிகிறது
அரக்க குணம் தெரிகிறது
கிறுக்க குணம் தெரிகிறது
அசுர குணம் தெரிகிறது
மனிதனுள் மனிதன்
விட்டுகொடுத்து வாழும்
மனித குணம் மட்டும்
தெரியலையே அய்யோ
என் செய்வேன்🤔
கிறுக்கல்கள் ✍
0.5
அன்றிலிருந்து
இன்று வரை..
வானத்தை என்ன செய்தாலும்
அளக்க அளக்க நீளும்
பூமியை என்ன செய்தாலும்
தேண்ட தோண்ட தாங்கும்
நீரை என்ன செய்தாலும்
கீழ் நோக்கிதான் பாயும்
தீயை என்ன செய்தாலும்
மேல் நோக்கிதான் எரியும்
காற்றை என்ன செய்தாலும்
எங்கும் நிறைந்து இருக்கும்
பிறகு ஏன் மனிதன்
மட்டும் நொடிக்கு நொடி
மாறிக் கொண்டும்
தாவிக் கொண்டும்
இருக்கின்றான்🤔
கிறுக்கல்கள் ✍
0.6
அம்மாவின் சமையலும்
இல்லாளின் குழையலும்
தராத சுவை ஏதுமில்லை!
அப்பனின் வார்த்தையும்
ஆசானின் அறிவுரையும்
சொல்லாத பாடமில்லை!
நிலா ஒளியின் குளுமையும்
தமிழ் மொழியின் செழுமையும்
தராத சுகம் ஏதுமில்லை!
காரிடை கொஞ்சலும்
நேரிழைக் கெஞ்சலும்
தராத இன்பமேதுமில்லை!
திருக்குறள் வரிகளும்
திருமறை மொழிகளும்
தராத நெறி ஏதுமில்லை!
தாய்ப் பாலும்
மலர் தரும் தேனும்
தராத ஊட்டம் ஏதுமில்லை!
இதனை அறியாமலும்
உண்மை புரியாமலும்
வாழ்பவன் மனிதனில்லை!!
கிறுக்கல்கள் ✍
0.7
நிலா இருக்கிறது
ரசிகன் இல்லை
குழந்தைகள் உண்டு
நிலாச்சோறு இல்லை
விளைநிலம் இருக்கிறது
விவசாயம் இல்லை
பறவைகள் இருக்கிறது
காடுகள் இல்லை
பணம் இருக்கிறது
குணம் இல்லை
தொண்டன் இருக்கிறான்
தலைவன் இல்லை
புதுமை இருக்கிறது
செழுமை இல்லை
தத்துவங்கள் இருக்கிறது
செய்பவர் இல்லை
வீட்டில் இருக்கிறார்கள்
பேச்சு வார்த்தை இல்லை
உருவங்கள் இருக்கிறது
உள்ளங்கள் இல்லை
மனிதன் இருக்கிறான்
மனிதம் இல்லை
கிறுக்கல்கள் ✍
0.8
கதிரவன் கிழக்கே
தோன்றுவது எப்படி?
நிலவு ஓர்நாள்
எங்கே போகிறது?
இடிமின்னலுக்கு சக்தி
எப்படி கிடைத்தது?
மலை காடுகள்
கண்டது யார்?
வற்றாமல் தண்ணீர்
கடலில் எப்படி?
மலருக்குள் வாசம்
வைத்தது யார்?
பலவண்ண மலர்
அழகாய் எப்படி?
சிறிய விதையில்
விருட்சம் எப்படி?
பிறப்பு பின் இறப்பு
தேவை இல்லை ஏன்?
இவ்வளவு ஜுவராசிகள்
உலகில் எதற்கு?
அறியா உயிர்களுக்கும்
உணவு எப்படி?
உண்டுதான் வாழனும்னு
செய்தது யார்?
இவ்வளோ உயிர்களில்
மனிதன் எதற்கு?
மனிதனில் இத்துணை
பேதங்கள் ஏன்?
விடை தெரியா
கேள்விகள் ஏன்?
இப்படி கேள்விகள்
என்னுள் எழ
வைத்தது ஏன்??
கிறுக்கல்கள் ✍
0.9
அதிகாலை பனித்துளி நீ
விடியல் சங்கீதம் நீ
வாசலின் கோலம் நீ
மலரும் சூரியன் நீ
அகம் குளிர ஸ்நானம் நீ
தித்திக்கும் காபி சுவை நீ
வாசிக்க தூண்டும் செய்தி நீ
எழுத்தும் தலையெழுத்தும் நீ
படித்துதீரா பாடம் நீ
நடையிலும் உடையிலும் நீ
செயலில் செயல்பாட்டில் நீ
வேலையும் கவனமும் நீ
பயணத்தில் பணத்தில் நீ
சாலையின் ஓரத்தில் நீ
பேச்சிலும் மூச்சிலும் நீ
கோப தாபத்தில் நீ
கலையில் கற்பனையில் நீ
காலத்தில் கவிதையில் நீ
நித்தமும் சித்தமும் நீ
உணவில் சுவையில் நீ
உள்ளத்தில் உதிரத்தில் நீ
துயரத்தில் துக்கத்தில் நீ
தலையணை மெத்தை நீ
தூக்கத்தில் கனவில் நீ
இரவு நிலவு நீ
எங்கும் எதிலும் நீ
ஆனால்
என்னில் இறுதிவரை நீ
உன்னில் இன்றுவரை நீ
என் செய்வேன்
இதோ இப்பொழுது கூட
ஒய்பை நீ டேட்டா நீ
(ஒய்ப்பா
இல்ல டாட்டாவா)
சொல் பெண்ணே
வாழ்வும் நீ மரணமும் நீ😍
கிறுக்கல்கள் ✍
1.0
புது சிந்தனையுடன்
புனித யாத்திரை மேற்கொள்
புது புது விடியல்களுடன்
பூமியே வெற்றிகளை உனக்கு
புது விருந்தாய்
புன்னகையுடன் உடனே தரும்
புத்துணர்ச்சியுடன் பருகிடுவாய்
புது இன்பதுடன் மேருகிடுவாய் நீ !
கிறுக்கல்கள் ✍
1.1
பூசைகள் புராணங்கள் வேண்டாம்,
ஆசைகள் ஆசனங்கள் வேண்டும்.
யாகங்கள், வேதங்கள் வேண்டாம்,
யோகங்கள் சாதகங்கள் வேண்டும்.
விரதங்கள் தியானங்கள் வேண்டாம்,
நேர்மையும் உண்மையும் வேண்டும்.
பத்தியும் முக்தியும் வேண்டாம்,
புத்தியும் யுக்தியும் வேண்டும்.
வழிபாடும் வழிப்பறியும் வேண்டாம்,
வாக்கும் சொல்லும் வேண்டும்.
மூடநம்பிக்கையும் மூடத்தனமும் வேண்டாம்,
நலமும் நல்வழியும் வேண்டும்.
மதங்கள் மந்திரங்கள் வேண்டாம்,
மனமும் மனிதமும் வேண்டும்.
கிறுக்கல்கள் ✍
1.2
குறுகுறுவென பார்வை
படபடக்கும் இமைகள்
திருதிருவென முழி
கலகலவென பேச்சு
மினுமினுக்கும் கன்னம்
பளபளக்கும் பற்கள்
கமகமக்கும் மேனி
சிலுசிலுனு பாசம்
குடுகுடுனு குரல்
தடதட தவிப்பு
சுடசுட கோபம்
கிளுகிளுனு மோகம்
திபுதிபு கனிவு
சரசரனு ஓட்டம்
மசமசனு நேசம்
வழவழ கூந்தல்
தலதலனு இடை
தைதையென நடை
சலசலவென கொலுசு
தொனதொனனு அக்கறை
கிறுகிறுக்கும் அழகு
துறுதுறுவென நீ
இவைகளால் அன்பே😍
உனது பெயரை
முணுமுணுக்கும் நான்!
கிறுக்கல்கள் ✍
1.3
விட்டுக்கொடுப்பவன்
கெட்டுப்போவதில்லை!
குட்டுப்படுபவன்
குன்றிபோவதில்லை!
அடங்கிபோவதால்
முடங்கமாட்டாய்!
பணிந்துநடப்பதால்
துணிவை இழக்கமாட்டாய்!
பிறப்பு இறப்பு இடைப்பட்ட
காலத்தில் வாழ்வது ஒருமுறை
மன்னிப்போம் மறப்போம்
என்ற வாழ்வியல் தத்துவத்தை
பின்பற்றி வாழ்ந்தால்
வாழும் நொடிகள்
எல்லாம் வசந்தமே👍
கிறுக்கல்கள் ✍
1.4
காதல்...😍
சிலருக்கு உண்மை
சிலருக்கு உயிர்
சிலருக்கு வலி
சிலருக்கு ஒளி
சிலருக்கு சிற்றின்பம்
சிலருக்கு பேரானந்தம்
சிலருக்கு ஏமாற்றம்
சிலருக்கு கௌரவம்
சிலருக்கு பொழுதுபோக்கு
சிலருக்கு சாக்குபோக்கு
சிலருக்கு உயர்வு
சிலருக்கு தாழ்வு
சிலருக்கு புனிதம்
சிலருக்கு காமம்
சிலருக்கு நம்பிக்கை
எனக்கு வாழ்க்கை
இந்த வரிசையில் அன்பே
என் காதல் உனக்கு ?😍
கிறுக்கல்கள் ✍
1.5
நிலா அது
தேய்ந்தாலும்
வளர்ந்தாலும்
நிலாவாகதான்
இருக்கிறது.
மனிதன் மட்டும் தான்
புகழ்ந்தால் ஆடுகிறான்
இகழ்ந்தால் சாடுகிறான்
மனிதனாக இருக்கமறுக்கிறான்!
கிறுக்கல்கள் ✍
1.6
ஓட்டமிடும் நம் வாழ்வில்,
வட்டமிடும் ஒரு கூட்டம்,
சட்டமிடும் காவல்துறை
திட்டமிடும் அரசாங்கம்
எல்லாவற்றையும்
நோட்டமிடும் உலகமடா இது!
மறந்தும் கூட விழுந்து விடாதே!
மாண்டுவிட்டான் என்று சொல்லி,
மண்ணிற்க்குள் புதைத்து விடும்!
கிறுக்கல்கள் ✍
1.7
மனிதா..
பார்க்கும் எல்லாம் நமக்கு இங்கே
சொந்தமுமில்லை
நடக்கும் பாதை நமக்கு உரிமையுமில்லை
கிடைக்கும் காட்சி எல்லாம் நம் சொத்துமில்லை
பரிதவிப்புகள் எல்லாம் பாசமுமில்லை
காணும் கனவுகள் நினைவில் நிற்பதுமில்லை
நினைத்தது யாவும் நமக்கு நடப்பதுமில்லை
நடப்பவைகள் பலது ஏன் என்றே தெரியவுமில்லை
நிலைப்பவைகள் எதையும் நாம் கொண்டு போவதில்லை
போராட்டம் நிறைந்த வாழ்க்கையில்
எதுவும் இங்கே யாருக்கும் நிரந்தரமுமில்லை.
கிறுக்கல்கள் ✍
1.8
இன்றைய விதை
நாளைய விருட்சம்!
இன்றைய துன்பம்
நாளைய இன்பம்!
இன்றைய காதல்
நாளைய கண்ணீர்!
இன்றைய சேமிப்பு
நாளைய தேவை!
இன்றைய தொழில்நுட்பம்
நாளைய வளர்ச்சி 😜
இன்றைய நட்பு
நாளைய பலம்!
இன்றைய தோல்வி
நாளைய வெற்றி!
இன்றைய நம்பிக்கை
நாளைய வாழ்க்கை!
இன்றைய வாழ்க்கை
நாளைய வரலாறு!👍
கிறுக்கல்கள் ✍
1.9
அன்பே..😍
மனதை வருடுகிறாய்
மனதை அசைக்கிறாய்
மனதை உலுக்குகிறாய்
மனதை பிசைக்கிறாய்
மனதை புண்படுத்துகிறாய்
மனதை பண்படுத்துகிறாய்
மனதை ஆசுவாசப்படுத்துகிறாய்
மனதை சலனப்படுத்துகிறாய்
மனதை சஞ்சலப்படுத்துகிறாய்
முடிவில்
மனதை கொள்கிறாய்
முடிவில்லா
மனதை கொல்கிறாய்
கிறுக்கல்கள் ✍
2.0
பசி இல்லை என்றால்
உணவு பயனற்றது.
பயன் இல்லை என்றால்
பணம் பயனற்றது.
அமைதியாக இல்லையென்றால்,
வித்தைகள் வீண்.
தைரியம் இல்லாவிட்டால், பட்டயம் பயனற்றது..
தர்மம் இல்லாவிட்டால்
மனிதன் வீணாகத்தான் இருக்கிறான்..
அர்த்தம் இல்லை என்றால்
வார்த்தை பயனற்றது..
நம்பிக்கை இல்லை என்றால்
வழிபாடு பயனற்றது...
உயிர் காதல் இல்லை என்றால்
வாழ்க்கை பயனற்றது.
உங்களுக்கு நனவு இல்லை என்றால்
நீங்கள் பயனற்றவர்.
எந்த தகுதியும் இல்லாவிட்டால்,
எந்த வடிவமும் பயனற்றது.
கிறுக்கல்கள் ✍
2.1
கடலின் ஆழம்
நீந்தமுடியாது!
வானத்தின் நீளம்
பறக்க முடியாது!
சூரியனை பக்கம்
செல்ல முடியாது!
சந்திரனை ரசிக்காமல்
இருக்க முடியாது!
நட்சத்திரத்தை எண்ணில்
அடைய முடியாது!
பூமியை முழுதாய்
குடைய முடியாது!
மலையை எவானாலும்
தூக்க முடியாது!
பெய்யும் மழையை
நிற்கவைக்க முடியாது!
அன்பை அளவுகோலால்
அளக்க முடியாது!
ஆசைய மனிதனால்
விலக்க முடியாது!
நாளையை முன்கூட்டியே
அறிய முடியாது!
காலத்தின் பின்நோக்கி
நகர முடியாது!
வாழ்வின் நாட்களை நிர்ணயிக்க முடியாது!
முடிந்ததெல்லாம் மனிதன்
சகமனிதனை நன்றாக புரிந்துகொள்ள
முடியும்!
வரமாக கிடைத்த வாழ்வை
ஆலமரமாக நட்புக்கிளை
பரப்பியும் வாழைமரமாக
தன்னையே அர்ப்பணித்தும்
வாழும்வரை அழகாக
வாழ முடியும்!!!
கிறுக்கல்கள் ✍
2.2
ஒரு முகப்படுத்து மனதை
இரு வேறு எண்ணங்கள் நீக்கு
மூன்று தலைமுறையும் பேசும்படி செய்
நாலு நல்லதை செய்
ஐம் புலனைஅடக்கி ஆள்
ஆறு அறிவை அறிந்து கொள்
ஏழு விதம் யோசி
எட்டுத் திக்கும் நட்பாயிரு
ஒன்பது கோல்களை துணையாக்கு
பத்து விரல்களை மட்டும் நம்பு!
கிறுக்கல்கள் ✍
2.3
(நான்
குறைகூறுபவன் அல்ல
குறை சொல்வதால் குறையுள்ளவன் நானே. )
கடவுள் இல்லை என்பான்
கால் இடறினாலேபோதும்
ஐயோ! கடவுளே என்பான் .
மதம் இல்லையென்பான்
எங்கோ ஏதோ
மதம் சார்ந்தே பயணிப்பான்.
சாதிகள் இல்லையென்பான்
தேடி தேடி தன் ஜாதியிலேயே மணம் முடிப்பான்.
நிறைய படிச்சிருப்பான் ஸ்டைலா பேசுவான்
கிடைக்குற நேரத்துல எல்லாம் தம்மு தண்ணினு
கிடப்பான்.
வருசமெல்லாம் நாயா உழைப்பான் ஆனா எதுக்கு
ஏன்னு
தெரியாம வரி கட்டியே
புலம்பி தள்ளுவான்.
பிரசங்கம் பிடிக்காதென்பான்
தன் பிரசங்கத்தை
பிறர் பாராட்டக்கேட்பான்.
மெத்த படிச்சவன் என்பான்
சத்தான கேள்வி கேட்டால்
மெல்ல நகருவான்.
ஏழைக்கு உதவுவேன் என்பான்
அவன் வீட்டு கதவை
மூடியே உண்பான்.
பிறரை ஏளனம் செய்வான்
ஒருபயலும் தன்னை
விமர்சிக்க விடமாட்டான்.
உழைப்பாளியென்பான்
ஊதியம் மட்டும் பார்த்து
உழைப்பை மறப்பான்.
பதவி ஆசையில்லையென்பேன்
பதவிக்காக மேடையில் பதறுவான் பிறர்
கழுத்தறுப்பான்.
ஆயிரம் பேரிடம் விடாது பேசுவான்
அடிப்படை தேவையை கூட மறப்பான்.
பரபரப்பாய் திரிவான்
பாசாங்கு மட்டுமே மிச்சம்
பட்டினி கிடப்பான்.
காசுபணம் வேண்டாமென்பான்
டீக்கடையில் கடன் சொல்லுவான்.
ஊருக்கெல்லாம் உபதேசம் கூறுவான்
தன்னிடம் கூறும் உபதேசங்களை ஏற்காமல்
உதறுவான்.
நான் குறைகூறுபவன் அல்ல என்பான்
பிறரைக் குறைகூறிக் கொண்டே
இருப்பான்😜
No comments:
Post a Comment