Saturday, April 11, 2020

தந்தைக்கு ஒரு பாட்டு

தந்தை நம் தந்தை
உலகில் அவர் விந்தை 
அவர பார்க்கையில கரடுமரடு மீச
அவர் பேசையில திட்டிதீர்க்கும் பாஷ
ஆனாலும் உள்ளுகுள்ள வச்சிருப்பார் எங்க மேல காட்டாத ஏகப்பட்ட ஆச.. அவரே..

சரணம்
********
அப்பா நீங்க சொல்லும் அனுபவ பாடம் புத்தக படிப்பில் தான் கிடைக்குமா
உங்க கடல் அளவு கோபமும் நொடியில் அடங்கி போகும் எங்க கண்களிலே நீர் வழிய..
நீங்க படும் இன்பம் துன்பம் எல்லாத்தையும் நாங்கள் பெறும் வெற்றியில மறந்துதான் சிரிப்பீங்க..
இலக்கணம் இலக்கியம் தெரியாது ஆனா நமக்கெல்லாம் இலக்கணமாய் வாழ்ந்திடும் அவரே

சரணம்
*********
அப்பா உங்க தோளில் சாய்வதில் ஆனந்தம் வேறு எங்கும் தான் கிடைக்குமா
எங்க நலன் காக்க என்றும் வாழ்வின் இறுதிவரை உடன்நின்று போராடும் உறவு நீரே..
நாங்க இடும் பெயருக்கு பின்னால் மட்டுமல்ல நாங்கள் கரை சேர்ந்திட முன்னால்தான் இருப்பவரே..
இருக்கின்றாரோ இல்லையா தெரியாது ஆனா நம்மிடையே இருக்கும் தெய்வம் அவரே

2 comments:

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...