கிறுக்கல்கள் ✍ 5.1
பள்ளி மாணாக்கன் சிலேட் ஸ்கேலுடன் அந்த கால
மஞ்சபை!
தந்தை அலுவல் பணிகளுக்கு பண பாதுகாப்பிற்கும்
கைப்பை!
மனைவினா குடும்பத்திற்கு பணம் தேவைனு தேடுவா
சட்டைபை!
அரசியல்வாதினா அடிதடி சட்டைகிழி சட்டசபை!
காதலினா கடைசியில் சொல்வா பைபை!
அம்மா மட்டுமே சாப்பிட்டியானு பார்ப்பது
இரைப்பை!!
அம்மாவிற்கும் ஒருபடி மேலே போய் உலகத்திற்கே
சோறு போடும் உழவன் கையில் கலப்பை!!
கிறுக்கல்கள் ✍ 5.2
நிலவு வரும் போகும்!
மேகம் சூழும் விலகும்!
சூரியன் தோன்றும் மறையும்!
நட்சத்திரம் மின்னும் மறையும்!
மழை பெய்யும் நிற்கும்!
இடி முழங்கும் அடங்கும்!
மின்னல ஒளிரும் ஒழியும்!
எதுவாயினும்
ஆகாயம் மட்டுமே நிரந்தரம்!!
பூ மலரும் கருகும்!
காய் காய்க்கும் கசக்கும்!
கனி அழகும் அழுகும்!
இலை துளிர்கும் உதிர்கும்!
மரம் வளரும் மடியும்!
எதுவாயினும்
மண் மட்டுமே நிரந்தரம்!!
பணம் சேரும் போகும்!
பதவி கிடைக்கும் விலகும்!
பட்டம் வரும் பறக்கும்!
பேர் நிலைக்கும் அழியும்!
புகழ் பாடும் அடங்கு!
எதுவாயினும்
குணம் மட்டுமே மனிதனுக்கு நிரந்தரம்!!
நீ இருப்பாய் இறப்பாய்!
நான் இருப்பேன் இறப்பேன்!
மனிதர்கள் இருப்பார்கள் இறப்பார்கள்!
உயிர்கள் அனைத்தும் இருக்கும் இறக்கும்!
எதுவாயினும்
உலகில் ஒருவக்கொருவர் காட்டும்
அன்பு மட்டுமே நிரந்தரம் !!
கிறுக்கல்கள் ✍ 5.3
தோழா
அழகில்லாதவனென்று
அசிங்கம்பேசாதே!
ஒன்றுமில்லாதவனென்று
ஒதுக்கிவிடாதே!
தகுதியில்லாதவனென்று
தள்ளிவைக்காதே!
உயர்ந்தவன் தாழ்ந்தவனென்று
உதறிவிடாதே!
செல்வமில்லாதவனென்று
சேராபோகாதே!
பணமில்லாதவனென்று
பாகுபாடுகாட்டாதே!
பாவப்பட்டவனென்று
புரளிசொல்லாதே!
அதிகாரமில்லாதவனென்று
அடக்கநினைக்காதே!
நீ எந்நிலை உயர்வு அடைந்தாலும்
ஒவ்வொரு நிலையிலும்
எவனோவொருவன் நிச்சயம்
உதவி இருப்பான்
நினைவு கொள்👍
கிறுக்கல்கள் ✍ 5.4
ஜன்னலை திற புது காற்று வரட்டும் !
கதவை திற புது வழி பிறக்கும் !
எழுந்து நட புது பாதை அமையும் !
உலகில் உன்னைக் கூர்ந்து பார் !
உன் கைவிரலை உனக்கு வழிகாட்டி !
உன் கால்களே கடின உழைப்பாளி !
உன் கண்களே சிறந்த தொலைநோக்காளர் !
குதிரைக்கு கடிவாளம் போல் உன் புத்தியை
கூர்மை ஆக்கு !
இலக்கு அமை !
ஓடு !
வெற்றி சுலபம் அல்ல !
அகப்படாததும் அல்ல !
எல்லாம் உன் கையில் 👍
கிறுக்கல்கள் ✍ 5.5
சுற்றி வராதே பெ'ண்ணை
அறிந்து கொள் உ'ன்னை
நேசி உன் ம'ண்ணை
சுற்றி வா வி'ண்ணை
நீயும் ஆ'கலாம்
ஓர்நாள் அப்துல்'கலாம்
கிறுக்கல்கள் ✍ 5.6
பல்லவி
----------------
அடடா அடடா அவள் ராதை ராதை!
உலகில் அவளே தேவதை தேவதை!
ஏறுதே நாளும் காதல் போதை!
தீராதோ நீயே சொல் கோதை!
தினம் ஆகிறேன் வதை!
மனம் தத்தளிப்பில் போடுது தை தை தை!!
சரணம்
---------------
உன் விழி பார்வையில் தொடங்குது என் வழி பாதை!
உன் வார்த்தை கோர்வையில் தீருது என் வலி
உபாதை!
ஆவோம் வா நானும் நீயும் ராமன் சீதை!
ஆனேன் உன் பெயர் படிக்க நானே கீதை!
விதையாய் என்னுள் விழுந்து செய்கிறாய் பல
வித்தை!
எதற்கு தூக்கமில்லா மெத்தை!
சொல்லடி அத்தை பெற்ற தத்தை!!
சரணம்
------------------
படிக்க படிக்க நீ தீராத பக்கங்கள் கொண்ட கதை!
வடிக்க வடிக்க நீ நீங்காத இன்பங்கள் கொண்ட
கவிதை!
சமங்களில் சிலிர்க்க வைக்கும் நீ சிறுகதை!
நினைக்க நினைக்க கட்டுக்கடங்காத நீ
கட்டுக்கதை!
என் வாழ்க்கை ஒளிர என்னுள் தொடரும் தொடர்கதை!
எதற்கு தூக்கமில்லா மெத்தை!
சொல்லடி அத்தை பெற்ற தத்தை!!
கிறுக்கல்கள் ✍ 5.7
தோழா...
மூச்சுதான் உன்னை
வாழவைக்கிறதெனில்!
முயற்சிதான் உன்னை
வாழ்க்கையில் தக்கவைக்கிறது!
முயற்சியையே மூச்சாக்கு!!
நீ வாழ்ந்து முன்னேற!!!
கிறுக்கல்கள் ✍ 5.8
இரு கை கொண்டு உழை
நிச்சயம் உலகில்
இருக்கை கிடைக்க கொட்டும் பரிசு மழை.!
கிறுக்கல்கள் ✍ 5.9
நாளை என்பது
கேள்விக்குறி!
கிடைத்த நேரம்
தேவைகளை அறி!
இக்கணம் நிஜம்
நிகழ்த்து ஆச்சரியக்குறி!
நீக்கு பண மத
தேவையற்ற வெறி!
எதுவாயினும் அநியாயங்களை
மாறி மாறி மறி!
தடைகளை தவிடுபொடியாக்கி
உடைத்தெறி!
தோல்வியை துரத்தி
வெற்றியை பறி!
கிறுக்கல்கள் ✍ 6.0
உன் திறமை என்னவென்று
தொியாத போது அறிந்து கொள்!
உன் திறமை என்னவென்று
தொிந்த பின் ஆராய்ந்து கொள்!
உன் திறமைகளால் வரும் வெற்றிகளை
உன் கைகளால் அள்ளிக் கொள்!
உன் திறமைகளால் வந்த வெற்றிகளை தக்கவைத்து
கொள்ள
உன் தலையில் ஏற்றாமல்
கைகளில் அடக்கம் கொள்!
கிறுக்கல்கள் ✍ 6.1
காதல் ஏக்கம் பாடல்
--------------------------------------
பல்லவி
----------------
விழிகள் மொழிகள் பேசுதடி
மொழிகள் மௌனம் வீசுதடி
கனவுகள் வந்து போக காலங்கள் நொந்து நோக
உன்னிலே நானும் தொடர என்னிலே நீயும் படர
இது காதலா இல்ல விரகதாபமா
சொல்லடி கண்ணே என் தங்கமே தங்கம்!
சரணம்
---------------
தேடி தேடி பார்த்தாலும் எங்கும் தெரிவது
நீயே!
வாடி வாடி போனாலும் எனர்ஜி டானிக் நீயே!
ஓடி ஓடி நின்றாலும் எல்லைக் கோடு நீயே!
பாடி பாடி சென்றாலும் எகிறும் சுவரங்கள்
நீயே!
நாடி நாடி காதல் செய்ய என்னுள் வாடி!
தாடி தாடி நாடி துடிக்க செய்வாயடி!
இல்லா போனா ஆவேன் டெட்பாடி!
ம்ம்ம் என்ற சொல்லொன்றே போதுமடி வாழ்க்கை
நீளுமடி!!
சரணம்
-----------------
கூடி கூடி ஆடினாலும் அடங்கா கலைகள் நீயே!
மூடி மூடி வச்சாலும் பொங்கும் நிலைகள் நீயே!
கோடி கோடி கொடுத்தாலும் ஈடில்லா கோதை நீயே!
தாடி தாடி வளர்த்தாலும் போகும் பாதை நீயே!
வாடி வாடி வாழ்க்கை கொடுத்து என்னை ஆளடி!
படி படி வாழ்க்கை உயர செய்வாயடி!
இல்லா போனா ஆவேன் டெட்பாடி!
ம்ம்ம் என்ற சொல்லொன்றே போதுமடி வாழ்க்கை
நீளுமடி!!
கிறுக்கல்கள் ✍ 6.2
விழுந்தாயா எழுந்தாயா விடைக்கிங்கு
நேரமில்லை.
அழுதாயா சிரித்தாயா அதற்கிங்கு அவசியமில்லை.
விழுந்து எழுந்திட
மறந்து நீ கிடந்தால்
உழுதிங்கு பயிர்செய்து
அறுவடை முடிக்கும் இவ்வுலகம்?!
விழுவதெதற்கு எழுவததற்கு அழுவதற்கல்ல எழுகவே!
அழுவதெதற்கு சிரிப்பததற்கு முடிவதற்கல்ல
துணிகவே
முடிப்பதெதற்கு தொடர்வததற்கு மறப்பதற்கல்ல
வளர்கவே!
மறப்பதெதற்கு நினைப்பததற்கு துறப்பதற்கல்ல
மலர்கவே!
எல்லாம் எதற்கு
வாழ்க்கையை வாழவே😊👍
கிறுக்கல்கள் ✍ 6.3
வானம் கிழிய வரும் மின்னல்!
மேகம் உரச வரும் மழை!
பாறை உடைய வரும் சிலை!
விதை உடைந்து வரும் தளிர்!
மொட்டு திறக்க வரும் மலர்!
பட்டுப்பூச்சி மரணத்தில் வரும் பட்டு!
மௌனம் கலைய வரும் புரட்சி!
வலி வந்துதான் வரும் பிரசவம்!
தோல்விப்படிகளின் கடைசியிலே வரும் ஒரு வெற்றியின் ஏணிப்படி!
எனவே..
எல்லாவற்றிலுமே முடிவென்பதும்
ஓர் ஆரம்பமே..!👍
கிறுக்கல்கள் ✍ 6.4
முள் காலில் தைக்காது!
நாம் அதனை மிதிக்கும் வரை!
வேலி வழி விடாது!
நாம் அறுத்தெரியும் வரை!
இருள் விலகவே விலகாது!
கண் திறக்கும் வரை!
தோல்வி விடவே விடாது!
தன்னம்பிக்கையுடம் உழைக்கும் வரை!
ஆகையால் தோழா...
செத்துக் கிடக்கும்
உன் இதயத்துக்கு
உயிர் கொடு!
சுருங்கிய உன் தசைகளுக்குள்
ரத்தம் பாய்ச்சு!
முடங்கிய உன் மூளைக்கு
திறப்பு விழா நடத்து!
நீயும் ஆகலாம் சாதனையாளனாக!👍
கிறுக்கல்கள் ✍ 6.5
பல்லவி
----------------
நம்பிக்கை கொண்டால் வானம் உனக்கு குடை
பிடிக்கும்!
இழந்தால் குடையும் உன்னை சிறை பிடிக்கும்!
நீ போகும் திசைகள் எல்லாம் புதுபாதைகள்!
நீ தாங்கும் வலிகள் கொடுக்கும் புதுவழிகள்!
விரட்டு விரட்டு தோல்வியை விரட்டு
மிரட்டு மிரட்டு வெற்றி கைகளால் மிரட்டு
சரணம்
---------------
இயலாது என்று பயந்துவிடாதே
இருக்கு அறிவு விட்டுவிடாதே
முடியாது என்று முடங்கிவிடாதே
உனக்குள் ஆயிரமுண்டு ஒதுங்கிசெல்லாதே
இதுதான் நானென்று இருந்துவிடாதே
இன்னும் உன்னிலுண்டு மறந்துவிடாதே
எழுந்து நீயும் பயணம் செய்திடு
எழுச்சி காணலாம் வாழ்வில்
மலர்ச்சி பூணலாம் !
வியர்வை சிந்திடு!!
வெற்றி கண்டிடு!!
சரணம்
---------------
புகழ்ச்சி கண்டு மயங்கிவிடாதே
இகழ்ச்சி வந்தா மெலிந்துவிடாதே
இலட்சியம் நினை அலட்சியமாகாதே
இலக்கை அடையும் வரை ஓயாதே
எண்ணங்களில் தோய்வு கொள்ளாதே
வண்ணங்களில் சோடை போகாதே
உண்மை யாதென புரிந்திடு
முயற்சி கொள் முயன்று முன்னேறி செல்
உன்னை அறிந்திடு!! உலகம் வென்றிடு!!
கிறுக்கல்கள் ✍ 6.6
என்னவென்று சொல்ல
எப்படி சொல்ல
அவளை பற்றி..
குழந்தையும் அவளை பார்த்தால் கொஞ்சி
விளையாடலாம்.
பிரம்மனும் படைப்பை எண்ணி வாயை பிளக்கலாம்.
புத்தரும் தன் நிலைமையில் இருந்து பொறுமையை
இழக்கலாம்.
கவிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி அவளை பற்றி கவி
போட்டி நடத்தலாம்.
மலரும் அவள் முகம் பார்த்து அதன் முகம்
மலரலாம்.
அறிஞர்களும் அவளை கண்டு எப்படி இப்படி என்று
ஆராயலாம்.
அழகும் அவள் அழகை பார்த்து பொறாமைபடலாம்.
கடவுளுக்கே கடவுளாய் வரம் வாரி வழங்குவாள்.
எமனுக்கும் போனா போவென்று உயிர் பிச்சை
போடுவாள்.
எனக்கு யாரேனும் தீங்கிழைத்தால் அவர்களுக்கு
எமனாய் மாறுவாள்.
நானே தவறு செய்தால் என்னிடமே எமனாய் நடந்து
கொள்(ல்)வாள்.😍😜
கிறுக்கல்கள் ✍ 6.7
விழித்தெழு உடனே!
துணிந்தெழு மகனே!
காத்திருக்கு உனக்கானதெரு
புது விடியல்
முடியாது என சொன்னால்,
இயலாது எதும் உன்னால்..!
முடியும் என்று துணிந்தால்,
மடியும் மலையும் தன்னால்..!👍
கிறுக்கல்கள் ✍ 6.8
ஊர் வாய்
ஆயிரம் ஏசும்
பொடி வச்சும் பேசும்
நினைத்ததை சொல்லும்
வார்த்தைகளால் கொல்லும்
எதற்கும் நீ
வாய் திறக்காதே
உன் செவிகளை
மூடிக்கொள்
கண்களை திற
தன்னம்பிக்கை சேர்
உடலால் உழை
கிடைக்கும் வெற்றி
ஏய்ப்பவர்கள் காது
போய் நிச்சயம் சேரும்.
கிறுக்கல்கள் ✍ 6.9
நிலையில்லை என தெரிந்தும்
நிலைக்காது என புரிந்தும்
நிலையில்லா மனதுடன்
நிலைக்குமோ நிலைக்காதோயென
நிலையான தேடலுக்காக
நித்தமும் (கி)கழிகிறது வாழ்க்கை!
கிறுக்கல்கள் ✍ 7.0
இன்றைய சமுதாயதிற்கு முக்கிய தேவை..
நடுக்கமில்லாத நம்பிக்கை தேவை
பதட்டமில்லாத பாதைகள் தேவை
தயக்கமில்லாத தன்னம்பிக்கை தேவை
நஞ்சில்லாத வார்த்தைகள் தேவை
தடுமாற்றமில்லாத வெற்றிகாலணிகள் தேவை
கனவில்லாத நிஜங்கள் தேவை
எதையும் ஊர்ஜிதம் செய்யும் உயர்ந்த சிந்தனை
தேவை👍
No comments:
Post a Comment