Thursday, February 1, 2018

கிறுக்கல்கள் part 3



ஆங்கில புத்தாண்டே வருக..

வாழ்வு புதுபொலிவு பெற!

மனது புது நிலை கொள்ள!

உறவில் புதுநம்பிக்கை மலர!

அன்பும் அமைதியும் என்றும் புதுமையாய் ஒளிர!

தொழிலில் புதுநிலைகள் அடைய!

வார்த்தையில் புதுதெளிவு பிறக்க!

நினைவில் புதுவசந்தங்கள் பொழிய!

கண்ட கனவுகள் யாவும் புதுவிதங்களில் பலிக்க!

எடுத்த காரியங்களில் புதுவெற்றி கிடைக்க!

அறிவில் புதுசிந்தனைகள் பிறக்க!

கடமையில் புதுமுயற்சிகள் தொடர!

Wish you happy new year 2018


கிறுக்கல்கள் 3.6

"நேற்று" என்பதே
தோல்வியாளரின் வார்த்தை !

"நாளை" என்பதே
கோழையரின் வார்த்தை !

"இன்று" என்பதே
வெற்றியாளரின் வார்த்தை !👍

"நேற்று" என்கிறவர்கள்
தொலைந்து போகிறவர்களின் வார்த்தை !

"நாளை" என்கிறவர்கள்
மறைந்து ஓடுபவர்களின் வார்த்தை !

"இன்று" என்கிறவர்கள்
நடத்தி காட்டுபவர்களின் வார்த்தை !👍👍


கிறுக்கல்கள் 3.7

தோல்வியே உன்னால்..

நான் என்னை
அளந்தேன்
அறிந்தேன்
புரிந்தேன்
தெளிந்தேன்
சிந்தித்தேன்
மெருகேற்றினேன்
குறிவைத்தேன்

இலக்கை அடை(வே)(ந்தே)ன்!

தோல்வியே..
நான் வெற்றியெனும் 
அவனை பற்றினாலும் 
உன்னையும் மறப்பதுண்டோ 
மறந்தால் வெற்றி
நிலைப்பதுண்டோ..!


கிறுக்கல்கள் 3.8

அழுகையான பிறப்பு
நரைக்காத தலைமுடி
வசீகர கண்கள் 
வயதாகாத புருவம் 
கூரான மூக்கு 
நேரான பார்வை 
வெள்ளை படாத மீசை 
வெடிக்காத உதடு 
பளபள முகம்  
சுருங்காத தோள்கள் 
மின்னும் உடல் 
துவளாத செயல்
மகிழும் மனசு 
நெகிழும் இதயம் 
நல்ல கனவு
மாறாத நினைவு  
மாசற்ற குடும்பம்
உறுதுணையாய் மனைவி 
துன்பமில்லா இன்பம்
நோய்யில்லா வாழ்வு
தாழ்வில்லா பிழைப்பு
எதிலும் சிறப்பு
அழகான இறப்பு

இப்படி வாழ 
வாழ்க்கை உண்டோ!?

இருந்தால் சொல்லுங்கப்பா

புத்தாண்டு கனவு இது😜


கிறுக்கல்கள் 3.9

'ன்பின் ஆழத்தை!
'க்கத்தின் பெருமையை!
'டர்பாட்டின் முடிவை!
'டில்லா முயற்சியை!
'ழைப்பின் மகிழ்வை!
'ன்றுகோலின் சக்தியை!  
'ளிமையின் மேன்மையை!
'ற்றம்தரும் அறிவை!
'யமில்லா கொள்கையை!
'ப்பில்லா வாக்கை!
'ங்கும் கனவை!
'வியமில்லா செயலை!

என்றும் உங்கள்
நினைவில் கொள்ளுங்கள்

அஃ'து வாழ்க்கையை
சிறகடித்து வாழ
வழிவகுக்கும்!!👍


கிறுக்கல்கள் 4.0

சதையாய் வந்த நாம்
சாவின் இறுதியில்
சாம்பலாய் போவோம்

பிறகென்ன மனிதா

சம்பிரதாயங்கள்
சந்தேகங்கள்
சங்கடங்கள்
சச்சரவுகள்
சண்டைகள்
சாமிகள்
சாதிகள்
சதிகள்

விடுத்து தேடு மனிதா

சமத்துவம்
சமாதானம்
சந்தோஷம்
சகோதரத்துவம்



கிறுக்கல்கள் 4.1

நிலையில்லா வாழ்க்கை தனை 
நிரந்திரம் என எண்ணி 
நித்தம் களித்து மகிழ்கிறோம் 
நீயென்ன நான் என்ன
நீயும் நானுமே
நிலைக்காத போது
நீ கொண்டதெல்லாம்
நிலைக்க போவததேது?
நிமிடங்கள் சில
நினைத்து பார் இறைவன்
நிகழ்த்தும் நாடகத்தில் 
நிஜம் அற்ற நாம்🤔

நினைவில் கொள் மனிதா
நிலையாய் இருக்க போவது
நிச்சயம்
நீ செய்யப் போவதே
நீயல்ல என்பதை!



பழையன கழிதல்
புதியன புகுதல்

போகி இன்று முதல்

அச்சம் தவிர்
அக்கிரமம் ஒழி
அநியாயம் கேள்
அசிங்கமாய் சொல்லாதே
அவமதித்து செல்லாதே
அல்பமாய் நில்லாதே
அஞ்சாமை சேர்
அடக்கம் கொள்
அகம் கழுவு
அக்கறை காட்டு
அக்கப்போர் விடு
அடிமை விலகு
அசதி மற
அகந்தை எறி
அரசியல் கல்
அசடு வழியாதே
அதர்மம் செய்யாதே
அடாவடி தடு
அதிகாரம் நிறுத்து
அழுகல் துடை
அட்டூழியம் விரட்டு
அவமானம் நினை
அறிவே துணை
அறவழி நட
அழகை ரசி
அன்பை நேசி
அடுத்தது யோசி
அறிஞன் மதி
அகப்பொருள் அறி
அளந்து பேசு
அறம் செய்
அசராது உழை
அருநெறி வளர்
அசலாய் இரு
அம்மாவை அணை
அப்பாவை மதி
அசத்து வாழ்க்கையில்

பழையன கழிவோம்!
புதியன புகுவோம்!

அனைவருக்கும் புகையில்லா
போகி பண்டிகை
வாழ்த்துகள் 💐💐💐



'தை திங்கள் பிறந்தது

மன'தை புரிவோம்!
சுற்றத்'தை சுத்திகரிப்போம்!
கந்'தை கசக்குவோம்!
ஆரோக்கியத்'தை சொல்வோம்!
நலத்'தை தருவோம்!
வளத்'தை காப்போம்!
சாந்தத்'தை நிலைநாட்டுவோம்!
சமத்துவத்'தை விதைப்போம்!
பந்தத்'தை வளர்ப்போம்!
பாசத்'தை பரப்புவோம்!
நேசத்'தை அளிப்போம்!
உள்ள'தை பகிர்வோம்!
இரக்கத்'தை காட்டுவோம்!
உற்சாகத்'தை சேர்ப்போம்!
செல்வத்'தை வழங்குவோம்!
ஊக்கத்'தை கொள்வோம்!
ஏற்றத்'தை காண்போம்!
பஞ்சத்'தை போக்குவோம்!
மனிதத்'தை மதிப்போம்!
சுபிட்சத்'தை அடைவோம்!
சிந்'தை நிரப்புவோம்!
சந்'தை பெருக்குவோம்!
பாரம்பரியத்'தை பேணுவோம்!
விவசாயத்'தை போற்றுவோம்!
இலட்சியத்'தை ஏற்போம்!
முடிந்த'தை கொடுப்போம்!
நல்ல'தை செய்வோம்!
அகத்'தை அலங்கரிப்போம்!
தமிழகத்'தை ஆள்வோம்!
வருங்கால்'தை வாழ்த்துவோம்!

*இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.*



பொங்கல் தமிழன் பாட்டு
********************************

பல்லவி
---------------

சொல்லுடா தம்பி 
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
வெல்லுடா நம்பி
வாழ்க்கையில் முளைக்கும்
திங்களோ திங்கள்
அச்சு வெல்லம் பச்சரிசி தித்திக்கிற கரும்பு
மனசார வரவேற்று அனைவரையும் விரும்பு
குடும்பம் குதூகலிக்க மீண்டும் மீண்டும் சொல்லு
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று!

சரணம்
---------------

Modernஅ இருந்தாலும்
மாட்டுப்பொங்கல் எங்க Styleடா
Aeroplaneல பறந்தாலும்
ஏறுதழுவல் Lifestyleடா
எது செஞ்சாலும் அதுல வச்சோம் Science
உலகமே தமிழனுக்கு தான் Audience
முரத்துலயே புலிய விரட்டுன பரம்பரை நாங்க
வேப்பிலையடித்தே பேய ஓட்டுனவங்க நாங்க
வேணா வம்பு தும்பு அடிவாங்கி வீணா போவீங்க

சரணம்
---------------

Facebookகுனு இருந்தாலும் Face to face சந்திப்பாண்டா
Whatsapp twitterனாலும்
தமிழனை கண்டு வாயடைத்து போவாண்டா
கோழியோ சேவலோ
ஆடோ மாடோ எங்க Friend
யார் வந்தாலும் வாழவைப்பது எங்க Trend
விவசாயம் நாங்க பார்க்கும் குலத்தொழில் no end
எங்களை எதிர்த்தவனுக்கு எப்பவும் Dead தான் End
உலகமே அழிந்தாலும் எங்களுக்கு இல்லை End
1/18/18, 6:52 AM - Dr அன்பரசு வெங்கடாசலம்: கிறுக்கல்கள் 4.2

இல்லை இல்லையென்று
இருப்பதை காட்டிலும்
இருப்பதை வைத்து 
இடைவிடாமல் உழைத்து
இலக்கை துரத்து

இறுதியில் புரியும்
இறைவன் கணக்கு

இல்லாதவனாய் நீ இருந்தாலும்
இருக்கும் பல வெற்றிகள் உன்னிடம்👍




கிறுக்கல்கள் 4.3

மூளை மனம் உடல்
மூன்றையும் ஒன்று
சேர ஒருங்கிணை.

எண்ணம் சிந்தனை செயல் 
மூன்றையும் ஒரே 
நேர்க்கோட்டில் வை.

பயின்று முயன்று உழைப்பு
மூன்றையும் மீண்டும்
மீண்டும் அயராது செய்.

நல்வழி வெற்றி வாழ்க்கை
இம்மூன்றும் உன் வாசல்
கதவை தேடி
வந்து தட்டும்👍



கிறுக்கல்கள் 4.4

அன்பே நீ...😍

மையழகு மங்கை!
மெய்யழகு நங்கை!
கார்மேக குழழி!
சிறகடிக்கும் குமிழி!
நீந்தும் மீன்விழியாள்!
நிலவு முகத்தாள்!
பசுமேனி வாழைப்பருவழகி!
சிதறா கண்ணாடிப்பேழை!
காந்த ஈர்ப்பார்வையாள்!
தூரிகை தொட்ட ஓவியமவள்!
இருளிலும் தூங்காவிளக்கு!
கனவு அலங்கரிப்பவள்! 
கவிதை வார்த்தையவள்!
பழத்தின் இனிமையவள்!

மொத்தத்தில் 

அவளுக்காக அழகா
அழகுக்காக அவளா? 

எதுக்காக எதுவென்று 
எடைபோட முடியாதவள்

என் துக்கத்தை மட்டுமல்ல
தூக்கத்தையும் போக்கவந்த
அழகானவள் ஆழமானவள்!!



கிறுக்கல்கள் 4.5

தோழனே ! 

துன்பம் வந்தால் 
துவண்டு விடாதே !

தோல்வி நேர்ந்தால் 
தொலைத்து விடாதே !

சோகம் சூழ்ந்தால்
சோர்ந்து விடாதே !

தடைகள் குறுக்கிட்டால்
தளர்ந்து விடாதே !

கவலையை கண்டால்
கண்ணீர் விடாதே !

விடாதே வரும் எதையும்
விட்டு விடாதே தேடி
விடாது துவம்சம் செய்

உன்னையே கடவுளாக கொள்
தன்னம்பிக்கை தீபம் காட்டு
மனிதரில் மனங்களை தேடு 
மாற்றத்தை எதிர்நோக்கி ஓடு 



கிறுக்கல்கள் 4.6

வானம் கீழே விழுவதில்லையே!

பூமி கை விடுவதில்லையே!

அருவி விழுந்து நிற்பதில்லையே!

காற்று காலமும் ஓய்வதில்லையே!

மழை நம்மை கேட்பதில்லையே!

பிறை மறைந்து போவதில்லையே!

மலை சிறுத்து குன்றியதில்லையே!

மலர்மணம் மாறியதில்லையே!

வயிற்றுப்பசி புசித்ததோடு நிற்பதில்லையே!

நண்பா !

நிலை குறைந்தாலும்
திடம் குறைக்காதே!

எந்நிலை வந்தாலும் தடம் மறவாதே!

உயர்நிலை அடைந்தாலும் குணம் மாறாதே!




கிறுக்கல்கள் 4.7                  

நாம் கடக்கும் பாதையில்
சோகமும் வரலாம்?
மகிழ்ச்சியும் வரலாம்?

சோகம் உன்னை
பக்குவப்படுத்துமென நினை!

மகிழ்ச்சி உன்னை
ஊக்கப்படுத்துமென நினை!

சோகத்திலும் நீ
சிரிக்க கற்றுக்கொள்!

மகிழ்ச்சியிலும் நீ அமைதி
காக்க கற்றுக்கொள்! 

வெற்றியை அடைய சில
தோல்விகளை சந்தித்தே
ஆக வேண்டும் இது நியதி,

நண்பா..

தோல்வியை புசி வெறு
வெற்றியை ருசி நேசி

உன்னை உன் நிழலும் தீண்டாது!!
வரலாறும் உன்னை பேசா போகாது!!



 கிறுக்கல்கள் 4.8

முதல் நாள் பிறப்பு

இரண்டாம் நாள் கல்வி

மூன்றாம் நாள் வேலைதேடல்

நான்காம் நாள் வேலையில் சேர்ந்தல்

ஐந்தாம் நாள் திருமணம்

ஆறாம் நாள் குழந்தை ஈன்றெடுத்தல்

ஏழாம் நாள் பொன் பொருளென சேர்த்தல்

எட்டாம் நாள் யாவும் மறந்து துறந்து இயற்கை எய்தல்

இப்படித்தான் போகிறது
இன்றைய மனித வாழ்க்கை..!


கிறுக்கல்கள் 4.9

முயன்றுபார் என்றும் முயன்றுபார்!!

முயன்றுபார் வானமும்
வளைந்து வாழ்த்தலாம்!

முயன்றுபார் காற்றும்
உன்பக்கம் வீசலாம்!

முயன்றுபார் பூமியில்
பாதைகள் உருவாகலாம்!

முயன்றுபார் தீயும் உன்
எதிரிகளை சுட்டெரிக்கலாம்!

முயன்றுபார் நீரும் மா
மழை பொழியலாம்!

முயன்றுபார் கண்ட
கனவும் மெய்படலாம்!

முயன்றுபார் எதுவும்
உன்னால் முடியலாம்!

முயன்றுபார் மரணம்
நெருங்க யோசிக்கலாம்!

முயன்றுபார் என்றும் முயன்றுபார்!!



கிறுக்கல்கள் 5.0

நவீன திருக்குறள்
அதிகாரம் - எ(ஏ)து நிரந்தரம்
*************************

1. நிரந்தரம் இல்லா உலகில் இல்லை
நிரந்தரம் நீயும் நானும்

2. நிலையாக ஏதும் இருப்ப தில்லை
நிலைப்பதோ பிழைப்ப தில்லை

3. வந்தது அறியா போவது தெரியா
நடுவில் நடப்பது வாழ்க்கையா!?

4. ஆட்டமும் பாட்டமும் சட்டதிட்டமும் நிரந்தரமாகாது
பூமியின் ஒற்றை குலுக்கலில்

5. கோடிகள் சேரலாம் மாடிகள் உயரலாம்
ஆறடியே இறுதியில் நிரந்தரம்.

6. வரம் தரும் அறம் செய்
வரும் தரும் நிரந்'தரம்

7. உடலில்லை உயிரில்லை நீயில்லை நானில்லை
எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை

8. சொல்லலாம் மந்திரங்கள் செய்யலாம் தந்திரங்கள்
செய்யும் நற்ச்செயலே நிரந்தரங்கள்

9. எது நிரந்தரம் ஏது நிரந்தரம்
எண்ணு நம்மைகளை பண்ணு

10. நேற்று வரலாறு இன்று நடப்பதை
பாரு நாளை அறிவதாரு

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...