ஆசை யாரைவிட்டது...
பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன்,
அது மேலும் கூட, கனவுகளும் கூடியது.
மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன்,
மழலைக்கல்வி துரத்தியது, அழுதேன்.
என்னில் பேச நடக்க முனைந்தேன். தொடங்கக்கல்வி துரத்தியது, பயந்தேன்.
சுயமாக கேள்விகளை வினவினேன்,
நடுநிலைக்கல்வி துரத்தியது, சுமந்தேன்.
மதிப்பிட்டார்கள் என்னை மதிப்பெண்களால்,
உயர்நிலைக்கல்வி துரத்தியது, ஒப்புவித்தேன்.
தெரியவந்தது பணம் பத்தும் செய்யுமென்று,
இளங்கலைக்கல்வி துரத்தியது, மிரண்டேன்.
செய்வது அறியாது நின்றபோது,
முதுகலைக்கல்வி துரத்தியது, செய்தேன்.
இருப்பதை வேறு விதமாக சொல்ல. துணிய,
ஆராய்ச்சிக்கல்வி துரத்தியது, அலைந்துதிரிந்தேன்.
இப்படி, நிற்க நிற்கவிடாமல்,
வாழ்க்கைக்கல்வி என்னை துரத்தியது,
ஓடிக்கொண்டே இருக்கிறேன், அன்றில் இருந்து இன்று வரை.
எந்தக்கல்வியும் சொல்லிக்கொடுக்கவில்லை இந்த அனுபவக்கல்வியை!...
கற்றுக்கொள்ள மீண்டும் ஆரம்பித்தேன்.?.